districts

img

மே தினத்தை சிறப்பாக கொண்டாட காங்கேயம் கட்டிடத் தொழிற்சங்கம் முடிவு

திருப்பூர், ஏப். 25 – திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா கட்டுமானத் தொழிலாளர் சங்க கூட்டம் செவ்வாயன்று சக்திநகரில் நடை பெற்றது. தாலுகா பொருளாளர் ஆர்.பாரதி தலைமையில் தாலுகா செயலாளர் எம்.கணேசன் வரவேற்றார். இதில் கட்டு மானத் தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொதுச் செயலா ளர் டி.குமார் கலந்து கொண்டு சங்கத்தின் வளர்ச்சி மற்றும்  மே தின விழாவை கொண்டாடுவது குறித்து உரையாற்றினர்.  இக்கூட்டத்தில் கட்டுமானத் தொழிலாளர் சங்கக் கிளை நிர்வா கிகள், தாலுகா குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதில், இந்தாண்டு மே தின விழாவை அனைத்து பகுதிக ளிலும் சங்க கொடியேற்றி கொண்டாடுவது, மே தினப் பேர ணியில் கட்டுமான தொழிலாளர்கள் பெருந்திரளாக பங்கேற் பது என்று முடிவு செய்யப்பட்டது.