ஈரோடு மாவட்டம், பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகில் உள்ள பெத்தாம்பாளையம் பகுதியில் எல்பிபி வாய்க்காலில் ஏற்பட்ட தண்ணீர் கசிவு சரி செய்யப்பட்டது. அதனை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வியாழனன்று நேரில் பார்வையிட்டார்.