districts

பொதுக்குடிநீர் குழாய்களை ஒழிக்கவா ஜல் ஜீவன் அம்ருத் திட்டம்?

திருப்பூர், செப். 9 - வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளில் பொது குடிநீர் குழாய்களை அகற்றி, குடிநீர்  இணைப்பு பெற பொதுமக்களை கட்டாயப் படுத்தும் ஜல் ஜீவன் - அம்ருத் 2.0 திட்ட செயல் பாடுகளை போர்க்கால அடிப்படையில் நிறுத் தக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளகோவில் தாராபுரம் சாலை (கிழக்கு) பகுதியில் வசிக்கும் ச.மணிகண் டன் வெள்ளகோவில் நகராட்சி ஆணையாள ரிடம் சனிக்கிழமை அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது:  வெள்ளகோவில் 10 வது வார்டுக்கு உட் பட்ட நான் வசிக்கும் பகுதி மற்றும்  இந்த நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டு  பகுதிகளில் பொது குடிநீர் குழாய்களை அப்பு றப்படுத்தும் வகையில்  ஜல் ஜீவன் - “அம்ருத்  2.0 என்னும் பெயரில் ஒன்றிய அரசின்  திட்டத்தை நடைமுறைப்படுத்த குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நகராட்சியால் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள பொது  குடிநீர் குழாய்கள் அகற்றப்படும் என்ற நிலை  வெகுமக்களை பாதிக்கும் செயலாகும்.  குடிநீர் வரத்து தற்போது கணிசமாக உள்ள நிலையில், ஏற்கனவே அமைக்கப்பட் டுள்ள குடிநீர் குழாய்கள் யாதொரு சேதமும்  ஏற்படாத நிலையில், பழைய இணைப்பு களை துண்டித்து விட்டு புதிய குழாய்கள்  அமைத்து  ஏற்கனவே இணைப்பு உள்ளவர்க ளுக்கு இலவச இணைப்பு தருவதுடன்,  புதிய இணைப்பு வேண்டுவோர் ரூ.8 ஆயிரம்  செலுத்த வேண்டும். அதை மூன்று தவணைக ளில் செலுத்தலாம் என்பது, வெகு மக்களுக்கு  எந்த வகையில் பயனுள்ளது என்ற கேள் வியை எழுப்புகிறது. மேலும், பொது குடிநீர் குழாய்கள் அகற் றப்படுவதன் மூலம், ஒவ்வொரு வீட்டாரும்  குடிநீர் இணைப்பு பெற்றே ஆகவேண்டும்  என்ற கட்டாய நிர்பந்தத்தை இந்த திட்டம்  வெகு மக்களுக்கு ஏற்படுத்துகிறது.  இதன் மூலம் வருவாய் குன்றியுள்ள  சாமான்ய மக்கள் வெகுவாக  பாதிக்கப்படுவ தோடு, பணம் செலுத்த வேண்டிய மறைமுக மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். ஆகவே, ஜல் ஜீவன் - அம்ருத் 2.0 திட்ட  செயல்பாடுகளை அறவே நிறுத்திட போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை மேற் கொள்ளுமாறு  ச.மணிகண்டன் வலியுறுத்தி இருக்கிறார்.