உடுமலை,பிப்.15- ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு வின் முடிவுப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட் டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப் பாட்டம் நடத்தப்பட்டது. ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு வெள்ளியன்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் சுகந்தன் தலைமை வகித்தார். வட்டார ஒருங்கி ணைப்பாளர்கள் அரசு ஊழியர் சங்கத் தைச் சேர்ந்த.லட்சுமணன், எஸ்.துரை, தமிழக ஆசிரியர் கூட்டணி எஸ்.காளியப் பன், பி.பாலச்சந்தர், ஊத்துக்குளி ஆண் கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசி ரியர் பி.தாமோதரன், தமிழ்நாடு பட்ட தாரி ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த ஏ. ரங்கநாதன் நோய்யல் மேரி, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் சங்கம் க.பழனிச்சாமி, கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கம் செ.ரங்க சாமி, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டப் பொருளாளர் சி.செல்வி ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னர். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஆர்.ராமன் நிறை வுரை ஆற்றினார். ஊத்துக்குளி வட்டார அரசு ஊழியர், ஆசிரியர்கள் 90க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வட்டக் கிளை பொருளாளர் தேன்மொழி நன்றி கூறினார். இதேபோல் வெள்ளியன்று உடு மலை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட் டத்திற்கு வட்டார ஒருக்கிணைப்பாளர் சின்னப்பன் தலைமை வகித்தார். வட் டரா ஒருங்கிணைப்பாளர்கள் தங்க வேல், பால்ராஜ், தமிழ்வண்ணன், தாமோதர சாமி, தனசேகரன், மார்க்கண் டன், குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேலுமணி மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர் அம்சராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றி னார்கள். நிறைவாக வெங்கிடுசாமி நன்றி கூறினார்.