districts

img

போராடித்தான் வளர்ந்தது திருப்பூரும், தொழிலாளி வர்க்கமும்

திருப்பூர் மாவட்டம், வரலாற் றின் பக்கங்களை நிறைத்த பகுதி என்றால் அது மிகையல்ல. தொழி லாளி வர்க்கமும், விவசாயிகளும் நிறைந்த பகுதி. சமூகத்தின் வளரும் சக்திகளில் பிரதானமான சக்தி  தொழிலாளி வர்க்கம். மாவட்டத்தில் ஒவ்வொரு நகரத்தின் வளர்ச்சி யில் தொழிலாளிகளின் உழைப்பும், உதிரமும் உறைந்து கிடக்கிறது. இந்த  மண்ணின் மேம்பாட்டிற்கும், வளத் திற்கும் தங்களது உதிரத்தை அர்ப்பணம் செய்தவர்கள் ஏராளமா னோர். அவர்கள் அனைவரும் போற் றப்பட வேண்டியவர்களே! ”மறந்து கொண்டே இருப்பது மனித இயல்பு, அதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பதே நமது கடமையாகும்” சுதந்திரப் போராட் டம், சமூக சீர்திருத்த இயக்கம்,  தொழிலாளி வர்க்க போராட்டம் மூன்றும் இணைந்த போராட்டங் களின் களமே திருப்பூர். அப்படிப் பட்ட திருப்பூரின் வரலாற்றை சற்று திரும்பி பார்க்கும்போது ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் இருந்தே துவங்குகிறது.

கோவையின் பிரதான உற்பத்தி 1857க்கு முன்பு உணவு தானிய உற் பத்தியே., அதற்கு பின்பு பருத்தி உற் பத்தி. நூல் உற்பத்தியின் மூலப் பொரு ளான தரமான பருத்தியை அன்று  பிரிட்டிஸ் கம்பெனி இங்கிலாந்திற்கு ஏற்றுமதி செய்து வந்தது.  இதனை வேகமாக முன்னெடுத்து செல்ல புகைவண்டி இருப்புப்பாதை சென்னையில் இருந்து மேட்டு பாளையத்திற்கு 1873ல் அமைக்கப் பட்டது.  இதன் தொடர்ச்சியாக ஸ்டேன்ஸ் மில் என்று அழைக்கப்பட்ட கோய முத்தூர் ஸ்பின்னிங் அண்டு விவிங் மில் 1888ல் துவங்கப்பட்டது.  நூற்பாலைகளுக்கு தேவையான பஞ்சை கொடுக்க அரவை மில்களும் படிப்படியாக துவங்கப்பட்டன. ஏறத்தாழ 20 ஆண்டுகளில் சுமார் 30 மில்கள் வரை துவக்கப்பட்டன.  இதில் 1937 வரை 10 மணி நேர வேலை என்பது கட்டாயப்படுத்தப்பட் டிருந்தது.   இதற்கு எதிராகவும், கூலி உயர்வுக்காகவும் விழிப்புணர்வு கொஞ்சம் கொஞ்சமாக உருவாகி வந்தது. இதன் பின்னணியில் “கோயமுத்தூர் மில் தொழிலாளர்கள் சங்கம்” உருவானது. இதனை தொடர்ந்து இளைஞர் அமைப்பும் உருவாகத் தொடங்கியது. இந்த சூழலில் இந்திய சுதந்திரப் போராட்ட களத்திலும் கம்யூ னிஸ்ட் கட்சிக் குழுக்களின் செயல் பாடுகள் அதிக தாக்கத்தை உருவாக் கிய வண்ணம் இருந்தது. கோவையி லும், திருப்பூரிலும் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகள் 1940களில் உரு வானது. திருப்பூரில் தோழர்கள் ஆர்.கே.கண்ணன், சி.குப்புசாமி, சைமன்பால் கொண்ட கிளையாக உருவானது. உடுமலையில் ஆர்.ரத்தி னம், பழனிசாமி, நாச்சிமுத்து, எஸ்.ராமசாமி ஆகியோரை கொண்ட கிளையும் அதே காலத்தில் உரு வானது. 

தொடர்ச்சியாக தொழிலாளர்கள் உரிமை, கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கூலி பிரச்சனைகள் முன்னெடுத்த தரு ணத்தில் உலகளாவில் பாசித்ததை எதிர்த்த யுத்தம் நடைபெற்றுக் கொண் டிருந்தது. இதற்காகவும் போராட வேண்டிய நிலையில் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது.  திருப்பூரில் 1932ல் தனலட்சுமி மில் தொடங்கப்பட்ட பின் எஸ்ஆர்சி மில்,  ஆஷர் மில் துவங்கப்பட்டு வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைக்கா மல் கோவை, மதுரை உள்ளிட்டு  வெளிபகுதிகளில் இருந்து தொழி லாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். அத்தருணத்தில் 10 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய மேஸ்திரிகளால் மிரட்டப்பட்டனர். கடி காரத்தின் முள்ளை திருப்பி வைத்த னர். குறிப்பாக பெண் தொழிலா ளிகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளா னர்கள். 

இந்த கொடுமைக்கு எதிராக கோவை மில் தொழிலாளர் சங்கத் தில் இருந்து தோழர் பி.ராமசாமி அனுப்பி வைக்கப்பட்டு திருப்பூர் பகுதியில் மில் தொழிலாளிகள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்பட் ்டது.  1940 ல் திருப்பூர் மில் தொழிலாளர் சங்கம், நகர சுகாதார தொழிலாளர் கள் சங்கம் துவங்கப்பட்டன. 1942ல் 25 சதவிகித யுத்தகால அலவன்ஸ் வேண்டி 39 நாட்கள் மில் தொழிலா ளர்களின் வேலை நிறுத்தப் போராட் டம் 12.5 சதவிகித யுத்த அலவன்ஸ் பெற்று தந்தது. மில் தொழிலா ளர்களின் போராட்டத்தின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பொது மக்களிடம் நிதி வசூலித்து நிவாரணம் வழங்கப்பட்டது.  100 பேர் சிறை சென்றதும், 200 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டு பழி வாங்கப்பட் டனர். பழி வாங்கப்பட்ட தொழிலா ளர்கள் சோர்ந்து வீடுகளில் அமர்ந்து விடாமல் கலாஸ், ரைஸ்மில், பருத்தி அரவை தொழிலாளியாக சென்று வேலை செய்து கொண்டே சங்கம் குறித்த விழிப்புணர்வையும், ஒற்றுமையையும் கட்ட பிரச்சாரம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

1942ல் சாக்கு தொழிலாளர் சங்கம், கலாஸ் சங்கம், ரைஸ் மில் தொழிலாளர் சங்கம், பருத்தி அரவை மில் (ஜின்னிங் பேக்டரி) சங்கம், மக்கள் தொழிலாளர்கள் சங்கம், மளிகை தொழிலாளர், ஜவுளித் தொழிலாளர், சோப்பு தொழிலாளர், தையல் தொழிலாளர், நெசவுத்தறி தொழிலாளர் என பல்வேறு பிரிவின ருக்கான சங்கங்கள் உருவானது.  கூலி உயர்வும், வேலை நேரமும் அடிப் படை பிரச்சனையானது. தையலில் கோட்டா மூலம் நூல் கிடைக்க ஏற் பாடும், நெசவாளர்களுக்கும் நூல் கிடைக்க பெறும் முயற்சிக்கு இடையே ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த வெளிச்சத்தில் தன லட்சுமி மில் தொழிலாளியும், ஊழிய ருமான சின்னசாமி மீது காவல்துறை துப்பாக்கியால் சுட முயற்சித்தபோது அவரது மனைவியும், தொழிலாளி யுமான வள்ளியம்மாள் காவல்துறை அதிகாரியை சுடாமல் தடுத்ததால் நீதிமன்ற விசாரணையில் 6 மாதம் சிறைத் தண்டனை வழங்கப்பட்டு மதுரை சிறையில் 1946ல் அடைக்கப் பட்டு இருந்தபோது தோழர் கே.பி.ஜானகிஅம்மாள் அவரை சந்தித்து எழுதப் படிக்க கற்றுக் கொடுத்து விடு தலை அடைந்து வெளியே வரும் போது கம்யூனிஸ்டாக வெளியே வந் தார். இது போன்று ஆண்களுக்கு பெண்கள் இளைப்பில்லை என்று கும்மி கொட்டு என சொன்ன பாரதியின் வாரிசுகளாக ஏராளமான மில் பெண் தொழிலாளிகள் போராட்ட களத்தில் சிறைத் தண்டனை பெற்ற வரலாறு திருப்பூரின் வரலாறு. 

மில்களில் செங்கொடியின் செல் வாக்கை பொறுக்க முடியாத ஆளும் வர்க்கமும், முதலாளிகளும் செய்த சதியால் 1950 ஏப்ரல் 20 ஆஷர் மில்லில் 25 வயதே நிரம்பிய தோழர் பழனிசாமி, காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த காலகட்டத்தில் தான் கம்யூனிஸ்ட்கள் மீதான நரவேட்டையை அன்றைய ஆளும் வர்க்கம் நடத்தியது.  1952ல் கோவை தொழிலாளி வர்க் கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த தோழர் கே.எஸ்.கருப்பசாமி, டெக்ஸ்டூல் நிறுவனத்தில் இருந்து வேலைநீக்கம் செய்யப்பட்ட பின்னணியில் தொழிற்சங்க பணிக் காக திருப்பூருக்கு வந்து 1953 முதல் 57 வரை அனுப்பர்பாளையம் பாத்திர தொழிலாளர் சங்கம், சாயப்பட்டறை தொழிலாளர்கள் சங்கம், அச்சுப்பட் டறை சங்கம், பருத்தி பொறுக்கும் தொழிலாளர்கள் சங்கம் போன்றவை துவங்கப்பட்டது.  1968ல் பனியன் தொழிலாளர் சங்கம் துவங்கப்பட்ட பின்னணியில் 1969ல் 8 நாட்களும், 72ல் 40 நாட்க ளும், 74ல் 60 நாட்களும், 1984ல் 127 நாட்கள் என சம்பள உயர்வுக் கும், பஞ்சப்படிக்காகவும் நடத்தப் பட்ட போராட்டங்கள் திருப்பூரின்,  தொழிலாளி வர்க்கத்தின் முகத்தோற் றத்தை மாற்றி அமைத்தது மட்டு மல்ல. தொழிலாளி வர்க்கப் போராட்ட ஒற்றுமையின் முன்பாக ஒரு பகுதி முதலாளிகளின் கருங்காலித்தனம் எடுபடாது என்பதை உணர்த்தியது. கலையும், இலக்கியமும் மக்க ளுக்கே என்ற லெனினின் வார்த்தை களை பஞ்சப்படி என்ற நாடகமும் தொழிலாளி வர்க்கப் போராட் டத்தை உரமேற்றி மக்களிடம் வளர் தெடுத்தது. 

எந்த முதலாளிகளை எதிர்த்து போராடியதோ தொழிலாளி வர்க் ்கம் அதுதான் தொழிலுக்கு நெருக்கடி என்றவுடன் 1995ல் முதலில் களத்தில் சிஐடியு மூலம் இறங்கியது. பனியன் தொழில் பாதுகாப்பு மாநாடு நடத்தி தொழிலை பாதித்த பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடைசெய் என்று ஒங்கி ஒலித்தது. இன்று வரை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் கள் நலனை முன்னிறுத்தி சமரசமில் லாமல் போராடும் அதே தருணத் தில், சாய கழிவு நீர் பிரச்சனை துவங்கி ட்ராபேக், சி பார்ம், நூல் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, சொத்து வரி உயர்வு, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, திட்டமிடாத கொரோனா ஊரடங்கு என மக்களை மட்டுமல்லாது தொழில் நிறுவ னங்களை பாதித்தபோது முதலில் குரல் கொடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி. 

1970லிருந்து தொடர்ந்து கூலி உயர்வுக்கான போராட்டம் தொழிலாளி வர்க்கம் மட்டுமல் லாது கிராமப்புறங்களில் விவசாய சங்கமும், விவசாயத் தொழிலா ளர்கள் சங்கமும் போராட்டங்களை நடத்தி வந்தது.  பொள்ளாச்சியில் 1978ல் தோழர் கோபாலும், திருப் பூரில் விசைத்தறித் தொழிலாளர்கள் கூலி உயர்வு போராட்டத்தின் போது முதலாளிகளின் பழிவாங்கும் நடவடிக்கையாக இளம் தோழன் சீரா ணம்பாளையம் பழனிச்சாமி வெட்டிக் கொல்லப்பட்டனர். 1981ல் உடுமலை வெள்ளியம்பாளையம் பகுதியில் விவசாய, விவசாய தொழிலாளர்கள், வாலிபர்களை திரட்டி கிராமப்புற ஆதிக்கத்திற்கு எதிராகவும், கூலி உயர்வுக்காக போராடிய தோழர் ஈஸ்வரன் கொல்லப்பட்டார்.  1998ல் தோழர் பன்னீர் செல்வம் ஜீனா கார்மென்ண்டஸ் நிறுவனத்தில் சங்கம் வைக்க முயற்சித்தார் என்ற காரணத்திற்காக வெட்டிக் கொல்லப் பட்டார்.  2002ல் இடுவாய் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த தோழர் கே.ரத்தினசாமி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான போராட் டத்தை முன்னெடுத்தது, கம்யூ னிஸ்டாக இருந்தது என 8 கார ணங்களை பட்டியலிட்டு கொடூரமாக சித்ரவதை செய்து தூக்கிலிட்டு கொன் றனர் கம்யூனிச இயக்கத்தின் விரோதி கள். 

இந்த தியாகிகளின் செய்தி சொல்வது ஒன்றுதான் மக்களின் அறி யாமை விடியலுக்கு எதிராக உள்ள எதிரிகளை சரியாக இனம் கண்டு அவர்களுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.  இதோ இப்போதும் போராடிக் கொண்டு இருக்கிறோம். பெண்கள், பெண் குழந்தைகள் பாதிக்கப்படும் போதும், போதைக்கு எதிராகவும், கந்துவட்டிக்கு எதிராகவும், தீண் டாமைக் கொடுமைக்கு எதிராகவும், மதவெறிக்கு எதிராகவும், அரசின் தவறான கொள்கைக்கு எதிராகவும் களத்தில் நின்று போராடி பாது காத்து வருவது மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் அதன் அமைப்பு களும். அதன் திருப்பூர் மாவட்ட 23 ஆவது மாநாடு மக்களின் அடிப்படை பிரச்சனைகளை முன் வைத்தும், திருப்பூர் மாவட்டத்தின் வளர்ச்சிக் கான மாற்று திட்டங்களை முன் வைத்தும் டிசம்பர் 19, 20 தேதிகளில் நடைபெறுகிறது.

தகவல்கள் உதவி: 
தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய கோவை மாவட்ட கம்யூனிச இயக்க வரலாறு, தோழர் தி.மு.ராசாமணி எழுதிய அஞ்சாநெஞ்சன் ஆஷர் மில் பழனிசாமி
 

 

;