மதுரை, ஜூலை 15- மக்களுக்கு கல்வி கற்றுத்தரக் கூடாது என சில சமூகம் மறுத்த காலத் தில், முன்னாள் முதல்வர் காமராஜர் பல சவால்களை சந்தித்து அனைவரும் கல்வி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தி னார் என்று சு.வெங்கடேசன் எம்.பி., கூறினார். முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரை காம ராஜர் பல்கலைக்கழகக் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் கல்வி வளர்ச்சி நாள் விழா கல்லூரி வளாகத்தில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ம.புவனேஸ்வரன் தலைமை வகித்தார். துணை முதல்வர் முனைவர் பெரி. கபிலன் வரவேற்றுப்பேசினார், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். அமெரிக்கன் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் வே.பிரபாகர் உரை யாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் அ.சாந்தி நன்றி கூறினார். இதில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்ட னர். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசியதாவது: காம ராஜர் கல்விக்கான பணிகள் குறித்து மட்டுமே மீண்டும் மீண்டும் பேசப்படு கிறார். அதுவும் தலைமுறை தலை முறையாக பேசப்படுகிறார். தமிழ கத்தில் 45 ஆயிரம் பள்ளிகள் இருக்கின் றன. இதை உருவாக்க சிலர் கனவு கண்டார்கள், அதையும் சிலர்தான் நிறைவேற்றினார்கள் அதில் ஒருவர் தான் காமராஜர். இந்த ஆண்டு மதுரை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு முடித்து மாணவர்கள் 4500 பேர் வெளியேறுகிறார்கள் இதில் பாதி பேருக்கு பொருளாதார கார ணங்கள் உள்ளிட்ட சில காரணங்களால் கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை அதேபோல் சிலர் பனிரெண்டாம் வகுப்பு தாண்டாமல் இடையில் நின்று விடுகிறார்கள். ஆனால் 90 சதவீதம் பேர் படிக்க வேண்டும் என்று ஆசைப்படு கிறார்கள். அவர்களையும் கல்லூரி யில் சேர்த்து படிக்க வைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தான் அரசங்கத்தின் வேலை மற்றும் மக்கள் பிரதிநிதிகளாகிய எங்களு டைய வேலை என்பதை உணர்வுபூர்வ மாக கூறிக் கொள்கிறேன். இந்த காலத்தி லும் இதுபோன்ற நிலை என்றால். கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு அனைத்து மாணவர்களையும் வர வைக்க வேண்டும் என்ற ஒரு கனவை அரசை நோக்கி திருப்பி விட்டவர் காம ராஜர். தமிழகத்தில் 1300 கோடி ரூபாய் கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது அதில் மதுரையில் மட்டும் 130 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்விக் கடன் வழங்குவதற்காக வங்கி அதிகாரிகள் கூட்டத்தை கூட்டிய போது, கல்விக் கடன் கொடுப்பதுதான் ஒரு வங்கியினுடைய வேலையா என்று வங்கி அதிகாரிகள் கேட்டார்கள், மாண வர்களின் கல்வி சார்ந்த கடன் மட்டு மல்ல, அதற்கான அனைத்துப் பணி களுமே அரசினுடைய பணியாக்க வேண்டும் அப்படி செய்யப்பட்ட தால்தான் 130 கோடி ரூபாய் கல்விக் கடன் என்பது சாத்தியமானது. இன் றைக்கு காந்தி அருங்காட்சியகம் அருகில் மாணவர்கள் படிப்பதற்கான பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை உருவாக்குவதற்கு மூன்று ஆண்டு காலம் போராடியுள்ளேன். இன் றைக்கு சுகாதாரத்துறை அமைச்சர் அந்த பூங்காவை பார்த்துவிட்டு இதே போல் சென்னையில் ஒரு பூங்காவை உருவாக்க வேண்டும் என்று கூறி யுள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன் ஒரு பெரியவர் என்னை வழியில் பார்த்து கை கொடுத்தார். எதற்கு என்று கேட் டேன், மாணவர்கள் படிப்பதற்கான பூங்காவை உருவாக்கியுள்ளீர்களே, அதற்காகத்தான் என்று கூறினார். ஒரு கனவு ஒரு லட்சியத்தை நாம் நிறை வேற்றுவதற்கு எவ்வளவு சவால்கள் உள்ளன. அப்படியானால் 50 ஆண்டு களுக்கு முன்பு காமராஜர் காலத்தில் எவ்வளவு சவால்கள் இருந்திருக்கும். கல்வியே கற்றுவிடக்கூடாது என்று சில சமூகம் நினைத்தபோது அதை ஒரு சவாலாக செய்து காட்டியுள்ளார். நானும் பல இடங்களுக்கு செல்லும்போது, பேருந்து வரவில்லை என்று பலரும் தெரிவிக்கின்றார்கள். இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளி டம் நானும் பேசியுள்ளேன். ஏனென் றால் கொரோனா காலத்திற்குப் பின் பல்வேறு கிராமங்களுக்கு பேருந்துகள் இன்னமும் செல்லாத சூழ்நிலை உள் ளது. ஒரு பேருந்து ஒரு கிராமத்திற்கு செல்லவில்லை என்றால் பத்து மாண வர்கள் கல்லூரிக்கோ, பள்ளிகளுக்கோ செல்ல முடியாமல் நிற்கின்ற சூழ்நிலை ஏற்படுகிறது. கல்வித்துறை சார்ந்த வேலை என்பது கல்வித்துறையின் வேலை மட்டுமல்ல, அது பல துறை கள் சார்ந்த வேலை. அதனால்தான் கல்வியாளர்கள் போற்றப்படுகிறார் கள். இந்த காமராஜர் பல்கலைக்கழக அறிவியல் கலை கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றுவதற்கு தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் என் னுடைய பங்களிப்பு அதில் இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.