districts

img

ஸ்டெர்லைட்-க்கு எதிராக போராடிய மக்களிடம் காட்டிய அதே பாணி பெருந்துறையில் அமலாக்கப்படுகிறதா?

ஈரோடு, டிச.23- ஸ்டெர்லைட் ஆலைக்கு எதி ராக போராடிய மக்களிடம் காட் டிய அதே பாணி பெருந்துறை சிப் காட்டால் பாதிக்கப்பட்டு வரும்  பொதுமக்கள் முன்பு அரங்கேற்றப் படும் என்ற அச்சுறுத்தல் எழுந்துள் ளது. ஈரோடு மாவட்டம், பெருந் துறை சிப்காட் பகுதியிலிருந்து வெளியேறும் மாசுபட்ட தண்ணீ ரால் நிலத்தடி நீரும், நிலமும் மாச டைந்துள்ளது. இதுகுறித்து, மண்  காக்கும் போராளிகளின் இடைய றாத போராட்டத்தால் மாவட்ட நிர் வாகமும், மாசுக்கட்டுப்பாட்டு வாரி யமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இறுதியாக பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்து மாசுபட்ட நீர் வெளியேறாமல் தடுப்பதற்கான பணிகளும் தொடங் கப்பட்டுள்ளது. இதன் தொடர்  நிகழ்வாக மக்கள் போராட்டத்தால், கண்காணிப்பால் சட்டவிரோதமாக இயங்கிய பாரிவேர் உள்ளிட்ட 9 ஆலைகள் கையும், களவுமாக பிடிக்கப்பட்டன. இந்நிலையில், வெள்ளியன்று விஷச்சாய கழிவு நீரை வெளியேற்றிய பாயிண்ட் டெக்ஸ் ஆலையின் மின் இணைப்  பும் தண்ணீர் இணைப்பும் துண்டிக்கப் பட்டது. தொடர்ந்து அந்நிறுவ னத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இத னைப் பொறுத்துக்கொள்ள முடியா மல் சட்டவிரோதமாக விதிகளை மீறி செயல்படும் ஆலைகளின் அதி பர்கள், பெருந்துறை சிப்காட் ஆலை அதிபர்கள், வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  அலுவலகத்தில் அமர வைத்துள் ளனர். சட்டப்படி ஆலைகளை நடத்த வேண்டும் என்போருக்கு எதிராக  போராட்டம் நடத்திக் கொண்டுள்ள தாகக் கூறுகின்றனர். மேலும், மக்க ளுடன் முரண்பட்டு, பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்த   திண்டுக்கல்லில் இருந்த காவல்  கண்காணிப்பாளர் அங்கிருந்து பெருந்துறைக்கு மாற்றப்பட்டு பத வியேற்றுள்ளார். இத்தகைய இட மாறுதலே உள்நோக்கம் கொண் டது என்று போராட்டக்குழுவினர் கருதுகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையில், போராடிய மக்களுக்கு  எதிராக காட்டிய அதே பாணியை இங்கும் அரங்கேற்றுகின்றனர் என வும் கூறப்படுகிறது. ஆயினும்  அச்சுறுத்தலுக்கும், அடாவடித்த னத்திற்கும் அடிபணியாமல் நீதிக் கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். பெருந்துறை பகுதியில் அழிக்கப்பட்ட இயற்கை வளத்தை மீட்டெடுப்போம் என  தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு  இயக்கம் மற்றும் கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் களத்தில் உள்ளனர்.