districts

img

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.31- மாற்றுத்திறனாளிகளை பெருமளவில் உருவாக்கும் இஸ் ரேல் - ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளி கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாலஸ்தீன் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொலைவெறி தாக்குதலை கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளை பெரு மளவில் உருவாக்கும் இப்போரை உடனடியாக நிறுத்த  வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் - அவிநாசி சாலை,  வேலம்பாளையம் சாலை பிரிவில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் நிர் வாகி ரோஸி தலைமை வகித்தார். இதில் தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாவட்டத் தலைவர் நந்தகோபால், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் பா.ராஜேஷ் உட் பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று தெற்கு வெள்ளியங்காடு பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்க தெற்கு  மாநகர செயலாளர் சஞ்சீவ் தலைமை வகித்தார். இதில் சங்கத் தின் மாவட்டத் தலைவர் ஜெயபால், செயலாளர் பா. ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.