districts

img

நிலத்திலிருந்து விவசாயிகளை வெளியேற்றுவதா?

தருமபுரி, அக்.6- அனுமந்தராயன் கோம்பை  கிரா மத்தில் 80 ஆண்டுகளுக்கு மேலாக  விவசாயம் செய்யும் விளை நிலங் களில் இருந்து விவசாயிகளை   வெளியேற்றும் அரசு நிர்வாகத்தின்  நடவடிக்கையை கண்டித்து தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர்  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு பெருந்திரள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டம், அரகாசனள்ளி ஊராட் சிக்குட்பட்ட எர்ரப்பட்டி அனுமந்த ராயன் கோம்பை கிராமத்தில் 72 குடும்பங்கள் சாகுபடி செய்திடும் நிலங்களுக்கு அருகில் வீடுகட்டி வசித்து வருகின்றனர். இந்த நிலம் வனத்துறைக்கு சொந்தமானது எனக் கூறி அம்மக்களை வெளி யேற வேண்டுமென வனத்துறை யினர் நோட்டீஸ் கொடுத்து நிர்பந்தித்து வருகின்றனர்.  இந்த நிலத்தை 1937ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகள் வேளாண் சாகுபடி செய்து வரு கின்றனர். ஆனால் 1977ஆம் ஆண்டு வருவாய்த்துறையினர், விவசாயிகளுக்கு தெரியாமல் வனத்துறையிடம் நிலத்தை ஒப் படைத்து விட்டனர். இதுகுறித்து தகவலறிந்த விவசாயிகள் அதிகாரி களிடத்தில் மனு கொடுத்தும், பல் வேறு போராட்டங்களை நடத்தி  வருகிறார்கள். மேலும் பென்னா கரம் மாவட்ட உரிமையியல் நீதி மன்றத்தில் விவசாயிகள் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டு, நிலுவை யில் உள்ளது.  இம்மக்கள் மூன்று தலைமுறை யாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு வேறு  வாழ்வாதாரம் ஏதும் இல்லை. அவர் களை நிலத்திலிருந்து வனத்துறை யினர் வெளியேற்ற முயற்சிப் பதற்கு தமிழ்நாடு விவசாயிகள்  சங்கம் வன்மையாக கண்டிக் கிறது. எனவே, விவசாயிகளை வெளி யேற்றும் வனத்துறையினரை தடுத்து நிறுத்தி மாவட்ட நிர்வாகம்  பட்டா வழங்கவேண்டுமென  ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டது. இந்த 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் கிழக்கு ஒன்றிய செய லாளரும், ஒன்றிய கவுன்சிலரு மான பி.சக்கரைவேல் தலைமை வகித்தார். விவசாய சங்க மாநில  துணைத்தலைவர் டி.ரவீந்திரன், மாவட்ட செயலாளர் சோ. அருச்சுணன், மாவட்ட துணைத் தலைவர் கே.என்.மல்லையன், மாவட்ட பொருளாளர் சி.வஞ்சி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ.ஜீவானந்தம், கே.அன்பு ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். பென்னாகரம் ஒன்றிய முன்னாள் பெருந்தலைவர் வி. மாதன், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.மாரி முத்து ஆகியோர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கோரிக்கை மனுவை தருமபுரி  மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம், சங்க தலைவர்கள் அளித்தனர்.  இதன்பின் அனுமந்தராயன் கோம்பை கிராமத்தில் உள்ள  மக்களை வனத்துறையினர் வெளி யேற்றும் முயற்சியை தடுத்து  நிறுத்தப்பட்டு, அந்த இடத்தை  வருவாய்த்துறையினர் மூலம்  அளவீடு பணி மட்டும் நடக்கும் என உறுதியளித்தார்.