பென்னாகரம், மார்ச் 1- பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணிகள் தனியாருக்கு விடும் அரசாணைக்கு ஒப்புதல் வழங்க மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பேரூராட்சியின் சாதாரண கூட்டம் செவ்வாயன்று பேரூராட்சி தலைவர் பிருந்தா தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் கோமதி முன்னிலை வகித்தார். மன்ற துணைத் தலைவர் மல்லிகா, உறுப்பினர்கள் அண்ணா மலை, பத்மா, விஜய் ஆனந்த், ஜபி யுல்லா, பூங்குழலி, கல்பனா, விஸ்வ நாதன், தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வளங்கள், தெரு விளக்கு பராமரிப்பு, பாதாள சாக்கடை திட்ட பணிகள் ஆகியவற்றை அயல் பணி ஒப்படைப்பு மூலம் மேற்கொள் வது என்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை (பேரூராட்சி) அரசாணை நிலை எண் 139க்கு மன்ற ஒப்புதல் கோரி தீர்மானம் முன்வைக் கப்பட்டது. இத்தீர்மானத்திற்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் விஸ்வநாதன் எதிர்ப்பு தெரிவித்து பேசி னார். பேரூராட்சியில் மேற்கண்ட பணி களை தனியாருக்கு அயல் பணி மூலம் ஒப்படைத்தால், பேரூராட்சியின் நிரந்தர தொழிலாளிகள் இல்லாத சூழ்நிலை ஏற்படும். மேற்கண்ட பணி களை தனியாருக்கு விடுவதன் மூலம் பேரூராட்சி மன்ற நிர்வாகத்திற்கும் பொது மக்களுக்கும் கூடுதல் செலவு ஏற்படும். மேலும், தனியார்மயத்தினால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்கல் உள் ்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை தனியார்மயமாக்கும் அரசாணைக்கு மன்றக் கூட்டம் ஒப்புதல் வழங்கக் கூடாது என்றார். மேலும், தனது, ஆட்சேபணையை பேரூராட்சிகள் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அனுப் பினார்.