நாமக்கல், ஆக.31- குமாரபாளையம் தனியார் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன வாகனம் அறிமுகப்படுத்தி யுள்ளனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள ஜேகேகேஎன் தனியார் கல்லூரியில் மாற்றுத் திறனாளிகளுக்கான நவீன வாகனம் அறிமுகப்படுத் தபட்டது. கல்லூரியின் தாளாளர் செந்தாமரை, நிர்வாக இயக்குநர் ஓம் சரவணா தலைமை வகித்தனர். வாகன தயாரிப்பு நிறுவனமான யாளி மொபைலிட்டியின் நிர் வாகி சிவம் சக்திவேல் பங்கேற்று வாழ்த்தி பேசினார். இதில் நிர்வாக இயக்குனர் ஓம் சரவணா கூறுகையில், வீல் சேரில் வரும் மாற்றுத்திறனாளிகள் யாருடைய உத வியும் இல்லாமல், இந்த வாகனத்தில் ஏறவும், இறங்க வும் முடியும். இருசக்கர வாகனத்தை ஓட்டுவது போல் எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் செல் வது போல், இவர்களும் எளிதாக இந்த நவீன வாக னத்தில் செல்லலாம். இது இவர்களுக்கு மேலும் புதிய உத்வேகத்தை கொடுக்கும், என்றார். முன்னதாக, மாற்றுத்திறனாளியான மாணவி ஒரு வர் இந்த வாகனத்தை ஓட்டி காட்டினார். மாணவ, மாண வியர் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினர். இந்த நிகழ் வில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.