நாமக்கல், பிப்.19- ஆந்திர மாநிலத்தில் பறவை காய்ச்சல் தாக் கம் ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக் கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் கடந்த பிப்.7 ஆம் தேதி ஒரு கோழிப்பண்ணையில் இருந்த, சுமார் 10 ஆயிரம் கோழிகள் திடீரென இறந்தது. இதையொட்டி இறந்த கோழிகளில் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு தேசிய விலங்கின நோய் பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக் கப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் இறந்த கோழிகளுக்கு பறவை காய்ச்சல் நோய் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. எச்5என்1 உரு மாறிய வைரஸால், இந்த பறவை காய்ச்சல் பண் ணையில் இருந்த கோழிகளை தாக்கி கோழிகள் இறந்தது தெரியவந்துள்ளது. இதையொட்டி ஆந் திரா முழுவதும் பறவை காய்ச்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நெல்லூர் மாவட்ட ஆட்சியர் ஹரிநாராயணன் கூறுகையில், நெல்லூர் மாவட்டத்திலுள்ள இரண்டு கிராமங்க ளில் பறவை காய்ச்சல் நோய் தாக்கம் உறுதி செய் யப்பட்டுள்ளதால், சுமார் 10 கி.மீ சுற்றளவிற்கு கட் டுப்பாடு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கி ருந்து கோழி, கோழிக்கறி மற்றும் முட்டை உள் ளிட்ட பொருட்களை விற்பனை செய்யவோ, வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3 மாதங்களுக்கு கோழி இறைச்சி விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள் ளது என கூறியுள்ளார். ஆந்திராவில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப் பட்டுள்ளதால், தமிழ்நாட்டு மாநில எல்லையான திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத் தூர், கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறையும், கோழிப்பண்ணையாளர்களுக்கு கால்நடை பரா மரிப்புத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந் நிலையில், அதிகளவில் கோழிப்பண்ணைகள் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் பண்ணையாளர் கள் தங்கள் பண்ணைகளில் பாதுகாப்பு நடவடிக் கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதியில் சுமார் 1000 முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 5 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது, கோழிகளுக்கு கிருமிநாசினி மருந்து தெளித்தல் உள்ளிட்ட நோய்த்தடுப்பு நடவடிக்கை களை பண்ணையாளர்கள் தீவிரமாக மேற் கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணை வாச லில் பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல் கலந்த தண்ணீர் வைக்கப்பட்டு வெளி ஆட்களும், வாகனங்களும் அதன் வழியாக மட்டுமே அனு மதிக்கப்படுகின்றனர். வெளியில் இருந்து வரும் வாகனங்களை கிருமிநாசினி தெளித்த பின்னரே பண்ணைக்குள் அனுமதிக்கின்றனர். நாமக்கல் பகுதியில் நிலவும் தட்பவெப்பநிலை மற்றும் பண்ணைகளில் பின்பற்றப்படும் பயோ செக்யூரிட்டி முறைகளால், பறவை காய்ச்சல் நோய் கிருமிகள், நாமக்கல் பகுதியில் பரவ வாய்ப்பு இல்லை என வல்லுநர் குழு தெரிவித்தி ருந்தாலும், நாமக்கல் மற்றும் சுற்றுவட்டாரங்களில் உள்ள கோழிப்பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பண்ணையாளர்கள் தீவிரப் படுத்தி வருகின்றனர்.