ஏடிஎம்-களில் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தல்
நாமக்கல், செப்.28- ஏடிஎம்-களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா அறிவு றுத்தியுள்ளார். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட கும்பல், கேரளம் மாநிலம், திருச் சூரில் வெள்ளியன்று அதிகாலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியது. இதன் பின் நாமக்கல் மாவட்டம் வழியாக கொள்ளை யடிக்க பயன்படுத்திய காரை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு தப்பி செல்ல முயன்றனர். அவர்களை நாமக்கல் காவல் துறையினர் கைது செய்தனர். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர் பாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் ராஜேஷ் கண்ணா செய்தியாளர்களி டம் பேசுகையில், கேரளம், ஆந்திராவை தொடர்ந்து தற்போது ஒரிசா மாநில காவல் துறையினரும் இக்கொள்ளை கும்பல் குறித்து தகவல் கேட்டுள்ளனர். இச்சம்ப வத்தினை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத் தில் ஏடிஎம் பாதுகாப்பு உபகரணங்களான கண்காணிப்பு கேமரா, அலாரம் போன்ற கரு விகள் முறையாக இயக்கத்தில் உள்ளதா? என்று பார்க்க வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட் டுள்ளது. குற்றவாளிகளை சிறைக்கு அனுப் பிய பிறகு தேவைப்பட்டால் காவல்துறை தரப்பில் மீண்டும் காவலில் எடுக்கப்படும். இக்கும்பல் குழுவாக செயல்பட்டார்கள் என்று சொல்ல முடியாது, என்றார்.
சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு
சிபிஎம் கிளைச் செயலாளர்கள் தேர்வு தருமபுரி, செப்.28- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரூர் ஒன்றியத்திற் குட்பட்ட கிளைச் செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டம், அரூர் ஒன்றியத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடுகள் நடைபெற்று, செய லாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, கரிபிலிப்பட்டி கிளைச் செயலாளராக ராமு, பறையப்பட்டி கிளைச் செயலா ளராக ஆர்.ஸ்டாலின், எஸ்.பட்டி ஏ.கிளைச் செயலாளராக வி.ஜெயகாந்தன், பி.கிளைச் செயலாளராக வி.ராமமூர்த்தி, கே.வேட்டரப்பட்டி கிளைச் செயலாளராக எம்.புத்தன், கோட் டப்பட்டி கிளைச் செயலாளராக வி.வெங்கடேசன், சிட்லிங் நமங்காடு கிளைச் செயலாளராக எஸ்.அண்ணாமலை, எச். தொட்டம்பட்டி கிளைச் செயலாளராக ஆர்.பாரதிதாசன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாடுகளில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சோ.அருச்சுணன், ஒன்றியச் செயலாளர் பி.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீரில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு
நீரில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு சேலம், செப்.28- கன்னங்குறிச்சி அருகே உள்ள ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். சேலம் மாவட்டம், கோட்டை, குண்டு போடும் தெரு பகுதி யைச் சேர்ந்தவர் பைரோஸ் (49). இவரது மகன் அஜ்மல் (17), நெத்திமேடு அருகே உள்ள ஜெயராணி மெட்ரிகுலேஷன் பள்ளியில் 11 வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சனியன்று கன்னங்குறிச்சி, தாமரை நகர் பகுதியில் உள்ள புது ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அஜ்மல் தண்ணீரில் மூழ்கி நீண்ட நேரம் வரவில்லை. சக நண்பர்கள் பல்வேறு இடங்க ளில் தேடிப் பார்த்தும், இவர் கிடைக்காததால் கன்னங்குறிச்சி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கன்னங்குறிச்சி காவல் துறையினர், செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையினர், அஜ்மலை உயிரிழந்த நிலையில் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஎம் வேலம்பாளையம் நகர கிளைச் செயலாளர்கள் தேர்வு
திருப்பூர், செப். 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரப் குழுவிற்கு உட்பட்ட கிளை மாநாடுகள் நடைபெற்று முடி வடைந்துள்ளன. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைச் செயலாளர்கள் விப ரம்: தண்ணீர்ப்பந்தல் காலனி - அ.உமாநாத், திலகர் நகர் ஏ - கலாதரன், திலகர் நகர் பி - ராம்கிருபாகரன், அனுப்பர்பாளை யம் மாதர் - எஸ்.சாந்தி, அனுப்பர்பாளையம் ஏ - ஏ.முத்துக்கு மார், அனுப்பர்பாளையம் பி - எஸ்.பிரவீன்குமார், அனுப்பர்பா ளையம் சி - பி. பகத்சிங், புதுக்காலனி - சி.சுப்பிரமணியம், வேலம்பாளையம் மாதர் - எஸ்.வசந்தி, வேலம்பாளையம் ஏ - ம.பாண்டியராஜ், வேலம்பாளையம் பி - வி.ஆர்.சரவணகு மார், பிடிஆர் நகர் - த.சிவகுமார், சிறுபூலுவபட்டி - கே.செந்தில், ரங்கநாதபுரம் மாதர் - வி.லட்சுமி, ரங்கநாதபுரம் - எஸ்.செல்வகு மார், அணைப்பாளையம் - கார்த்திகேயன், அணைப்பாளை யம் மாதர் - ப.செல்வி, சாமுண்டிபுரம் - என்.சிவராஜ், அ.புதூர் - என்.விஸ்வநாதன், பெரியார் காலனி - ஜார்ஜ் வர்கீஸ், பெரி யார் காலனி மாதர் ஏ - த.இந்திரணி, பெரியார் காலனி மாதர் பி - ச.கலைவாணி, நேதாஜி நகர் - பி.பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பராமரிப்பு இல்லக் குழந்தைகள் 81 பேர் குடும்பங்களிடம் இணைக்கப்பட்டனர்
திருப்பூர், செப். 28 – திருப்பூர் மாவட்டத்தில் பராமரிப்பு இல் லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குழந்தை களில் 81 பேர் அவர்களது குடும்பங்களுடன் இணைக்கப்பட்டனர் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார். திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாது காப்பு அலகு சார்பில் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தலைமையில் மாவட்ட அளவி லான குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டம் சனியன்று நடைபெற்றது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் கடந்த பிப்ரவரி 26 அன்று நடைபெற்ற மாவட்ட அளவிலான குழந்தைகள் பாது காப்பு குழுக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாகவும், மாவட்ட குழ ந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் நிறைவேற்றப்பட்ட செயல் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. இக்கூட்டத்தில், காவல், வருவாய், மருத் துவம், பள்ளிக்கல்வி, ஊரகவளர்ச்சி, சமூகந லம், நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட துறைக ளின் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட் டது. மேலும், குழந்தைத் திருமணம் மற்றும் வளரிளம் பருவ கர்ப்பிணிகள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வழங்குதல் மற்றும் விழிப்பு ணர்வு பதாகைகளை தயார் செய்து அரசு கட்டி டங்கள், திருமண அரங்குகள் மற்றும் பொது இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வருகி றது. திருப்பூர் மாவட்டத்தில் தொண்டு நிறுவ னங்கள் இணைந்து பல்வேறு துறைகள் ஒருங் கிணைந்து குழந்தைகள் அவர்களது குடும் பங்களிலிருந்து விலகி நிறுவனப் பராம ரிப்பில் வளர்வதை தடுத்து குடும்பங்களுடன் மீண்டும் இணைந்து வளர்வதற்கான நடவ டிக்கையில் மாதத்திற்கு மூன்று குழந்தை கள் பராமரிப்பு இல்லங்கள் வீதம் ஆய்வு செய்யப்பட்டு, அங்கு பராமரிப்பில் உள்ள குழந்தைகளின் நிலை மற்றும் குழந்தை களின் குடும்ப நிலை ஆய்வு செய்யப்பட்டு 81 குழந்தைகள் அவர்களது குடும்பத்துடன் ஒன் றினைக்கப்பட்டுள்ளனர் என்று ஆட்சியர் தெரிவித்தார். மேலும், குழந்தைகள் பாதுகாப்பு அல கின் செயல்பாட்டுத்திட்டங்களான திருப்பூர் பேருந்து நிலையத்தில் குழந்தை உதவி மையம் அமைத்தல் தொடர்பாகவும், மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டங்களை தொடர்ந்து நடத்திடவும் அறி வுறுத்தப்பட்டது. மேலும், தத்தெடுத்தல், வளர்த்துப்பேணுதல் மற்றும் தொட்டில் குழந்தை திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப டுத்த ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத் தினார்.
ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக்கரை ஒட்டி நூதன முறையில் பணம் திருட்டு
கோவை, செப்.28- கோவையில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் இயந்திரத்தில் ஸ்டிக் கரை ஒட்டி நூதன முறையில் பணம் திருடிய அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியில் ஸ்டேட் பாஙக் ஆப் இந்தியாவிற்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள் ளது. இங்கு வியாழனன்று மாலை முதல் பணம் எடுக்கச் சென்றவர்களுக்கு பணம் இயந்திரத்தில் இருந்து வெளியே வராமல் இருந்து உள்ளது. மேலும், ஏடிஎம் மில் இருந்து பணம் எடுத்ததாக மெசேஜ் வந்து உள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர்கள் வங்கிக்கு தகவல் தெரி வித்தனர். தகவலின் பெயரில் ஏடிஎம் மையத்தை பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்ப வர் சம்பந்தப்பட்ட ஏ.டி.எம் மையதிற்கு சென்று ஆய்வு செய் தார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணம் வெளியில் வரும் இடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் ஸ்டிக்கரை ஒட்டி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு செய்த அந்த நபர்கள் ரூ.30 ஆயிரம் வரை பணத்தை நூதன முறையில் எடுத்துச் சென்று இருப்பது தெரிய வந்தது. இது குறித்து ஏ.டி.எம் மையத்தின் பரா மரிப்பு நிறுவன அதிகாரி ரமேஷ் குமார் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் ்கொண்டு வருகின்றனர்.
பருவமழை முன்னேற்பாடு குறித்து ஆய்வுக்கூட்டம்
ஈரோடு, செப்.28- வடகிழக்கு பருவமழை முன்னேற் பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் ஈரோட் டில் நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லக கூட்டரங்கில், வடகிழக்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் தொடர் பாக அனைத்துத்துறை அலுவலர்க ளுடனான ஆய்வுக்கூட்டம் சனியன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா பேசு கையில், பேரிடர் தொடர்பாக உடனுக் குடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் இயங்கி வரும் தொலைபேசி எண்: 1077, 0424-2260211-ல் தெரிவிக்களாம். வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறிந்து அது தொடர் பான விபரங்களை சம்மந்தப்பட்ட துறை யின் அலுவலருக்கு தெரிவித்து உடனடி யாக சீரமைப்பு நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெருமழை வெள்ள நீர் தடையின்றி செல்லும் வகையில், கழி வுநீர்ப் பாதைகளை சீர் செய்ய உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். அணை கள், ஏரிகளின் உபரி நீர் வெளியேற் றும் மதகுகள் மற்றும் உபரி நீர் வெளி யேறும் நீர்வழிப் பாதைகளை அவ்வப் போது ஆய்வு செய்து உபரி நீர் தங்கு தடையின்றி செல்லும் வகையில் உள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறி வுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், மாநகராட்சி ஆணையாளர் மணிஷ், மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்த குமார், சார் ஆட்சியர் சிவானந்தம், வரு வாய் கோட்டாட்சியர் சதிஷ்குமார் உட் பட பலர் கலந்து கொண்டனர்.