திருப்பூர், ஜன.7- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வலியு றுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், கோட்டத் தலைவர் எஸ்.அண்ணாதுரை தலை மையில் கல்லூரி சாலையில் உள்ள கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன் தலையில் முக்காடு போட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். பணிக்காலம் மற்றும் பணி நீக்க காலத் தில் இறந்த சாலைப் பணியாளர்களின் வாரிசுகள், கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கக் கோரி விண்ணப் பித்துள்ளவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும். சாலை பராமரிப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு கிராமப்புற இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட் டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஆர். முத்துசாமி, கோட்ட துணைத் தலைவர்கள் பி.அம்மாசை சிவகுமாரன், வி.எஸ். செல்வராஜ் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். பொள்ளாச்சி பொள்ளாச்சியில் நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர் சங்கத்தினர், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில். சாலை பணியாளர்கள் திரளா னோர் கலந்து கொண்டனர்.