உடுமலை, டிச.27- உடுமலை நகராட்சி வீதிகளில் எவ்வித கட்டுப்பாடும் இல் லாமல் ஜியோ தொலை தொடர்பு நிறுவனம் இரும்பு கம்பங்கள் நடுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படு வதைத் தடுக்க நகரமன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. உடுமலை நகராட்சி அலுவலகத்தில் செவ்வா யன்று நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்ட கூட்டம், நகரமன்ற தலைவர் மத்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உடுமலை நகராட்சி பகுதிகளில் எவ்வித அனுமதியும் இல்லாமல் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத் தினர்கள் இரும்பு கம்பங்களைச் சாலைகளில் நடுகிறார் கள். பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் நட வேண்டாம் என நகர மன்ற உறுப்பினர்கள் வேலை செய்பவர்களிடம் சொன்னால் அவர்கள் கேட்பது இல்லை. ஜியோ நிறுவனத் தின் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்திய நாட்டை ஆட்டி படைக்கும் ஜியோ நிறுவனம் நமது உடுமலை நகராட்சியை விலைக்கு வாங்கிவிட்டதா என்று உறுப்பினர் கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டார்கள். அதற்கு நகரமன்ற தலைவர் இந்த இரண்டு நிறுவனங்களும் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று வேலை செய்கிறார்கள்.
அவர்கள் வேலைக்கு நகர் மன்றம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. எனவே, பொது மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து கம்மங்களும் உடனடியாக அகற்றபடும், என்றார். தற்பொழுது நகராட்சி பகுதிகளில் வேலை செய்ய ஆட் களை எடுக்கும் போது கண்டிப்பாக உடுமலை பகுதியில் உள்ள ஆட்களை எடுக்க வேண்டும். மேலும் ஐம்பது ஆயிரம் ரூபாய்க்கு மேல் வேலை செய்ய வேண்டும் என்றால் பொது அறிவிப்பின் படி ஒப்பந்தம் விட வேண்டும் என்பதை நடை முறைப் படுத்த வேண்டும் என்று உறுப்பினர் வேலுச்சாமி கோரிக்கை வைத்தார். மேலும் நகரமன்ற துணை தலைவர் கலைராஜன் மற்றும் உறுப்பினர் ஆறுச்சாமி இருவரும் சிறப்பு தனிநபர் தீர்மானங் களைக் கொண்டு வந்தார்கள். இதில் உடுமலை நகராட்சி பகு திகளில் பொது மக்கள் அதிகம் பயன்படுத்தும் பள்ளிக்கூ டங்கள், கோவில் வழிபாட்டுத் தளங்கள் மற்றும் வணிக வளா கம் அருகே உள்ள டாஸ்மார்க் கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்ற தனிநபர் தீர்மானம் ஏகமனதாக நிறை வேற்றப் பட்டது. உடுமலையில் விளையாட்டுத் துறை அமைச்சர் அறிவித்த படி, சிவசக்தி காலனியில் உள்ள பழைய குப்பைக் கிடங்கு இருந்த பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க அர சுக்குக் கோரிக்கை வைக்கப்படும் என்றார்கள். கடந்த ஆட்சியில் நகராட்சி பகுதி முழுவதும் தரம் இல் லாத நிலையில் போடப்பட்ட பாதாளச் சாக்கடை திட்ட வேலை களில் உள்ள குறைபாடுகளைச் சரி செய்து புதிய பைப்கள் அமைக்க ரூ. 4,80,000 ஒதுக்கபட்டுவுள்ளது.
இந்த கூட்டத்தில் உடுமலை எஸ். வி புரம் பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வந்த எஸ்.வி மில் கட்டிடம் அகற்றப்பட்டு வீட்டு மனையாக மாற்ற நகர்ப்புற வளர்ச்சித் துறை சுற்ற்றுக்கையின் படி, உடுமலை நகராட்சிக்கு பொது ஒதுக்கீடுகளைச் செய்யவும். மனைப்பிரிவுக்கு உரியக் கட்ட ணங்களைப் பெற வேண்டிய தீர்மானத்திற்கு உறுப்பி னர்கள் தொழிற்சாலை பயன்பாட்டிலிருந்த இடத்தை வீட்டு மனையாக மாற்ற எந்த வகையில் ஒப்புதல் வழங்கமுடியும் என்று கேள்வி கேட்டார்கள். இதற்கு வீட்டு மனையாகப் பிரிப்ப தற்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் சம்மதம் இல்லை என்று அதிகாரிகள் சொன்னார்கள். ஆனால் தொழிற்சாலையாக இருந்த இடத்தில் அவசர கதியில் வீட்டு மனையாக பிரிக்கப் பட்ட இடத்திற்கு நகராட்சி அனுமதி பெறத் தீர்மானம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்றுதான் தெரியவில்லை. மேலும் இந்த கூட்டத்தில் நகராட்சி அலுவலகத்தில் பல ஆண்டுகள் வேலை செய்து வருபவர்களை நிரந்தரமாக வேலை வழங்குவது உள்ளிட்ட ஐம்பது தீர்மானங்களில், பத் தாவது தீர்மானமாக உள்ள நகராட்சி வாகனத்தில் உள்ள பழு துகளைச் சரி செய்ய வேண்டிய தீர்மானம் மற்றும் ஒரே தீர்மானம் இரண்டு முறை இருப்பதை நீக்கிவிட்டு மொத்தமாக 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.