districts

img

பள்ளி சீருடை உற்பத்திக்கு கூலி உயர்வு வழங்க வலியுறுத்தல்

ஈரோடு, ஜூன் 1- பள்ளி சீருடை உற்பத்திக்கு 25 விழுக்காடு கூலி உயர்வு வழங்க வேண்டுமென தமிழ்நாடு விசைத் தறி சங்கங்களின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.  தமிழகத்தில் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக் கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தை களுக்கு 4 இணை பள்ளி சீருடைகள் வழங்கப்படுகிறது. இதற்காக அரசு சார்பில் 10.23 கோடி மீட்டர் பேண்ட், சட்டை, சுடிதாருக்கான துணிகள் உற்பத்தி செய்து, ஆடையாக தைத்து வழங்க அறிவிப்பு வெளி யிட்டனர். அதில் முதல் கட்டமாக 5.43 கோடி மீட்டர் சீருடை துணிகள், கைத்தறி, பெடல் தறி, விசைத்தறி மற்றும் தானியங்கி தறி, அரசு துணி நூல் அலகிலும் உற்பத்திக்கு வழங்கி உள்ளனர். இதில் டிரில் துணிகள் ஆட்டோ லூமில் 97.93 லட்சம் மீட்டரும், கேஸ்மென்ட் ரக துணிகள் விசைத்தறியில் 73.13 லட்சம் மீட்டரும், பிற ரகங்களிலும் அதிகபட்சமாக ஆட்டோ லூமிலும் ஆர்டர் வழங்குகின்றனர். இதனால், விசைத்தறியாளர்கள், விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாகவும், கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். கூலி உயர்வு இதுகுறித்து தமிழ்நாடு விசைத் தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கூறும்போது, ‘இலவச பள்ளி சீருடைகள் ஆட்டோ லூம் எனப்படும் நவீன தறிகள் மூலம் உற்பத்தி செய்வதால், விசைத்த றியாளர்கள் பாதிப்படைகின்றனர். இது தொடர்பாக கடந்த 2021ஆம் ஆண்டு கோரிக்கை வைத்தோம். அதனைத் தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கையில் பள்ளி சீரு டைகள் விசைத்தறையில் மட்டும் உற்பத்தி செய்யப்படும் என்று தெரி வித்திருந்தனர். அதன்படி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பள்ளி சீருடைக்கான துணிகள் உற்பத்தியை, தமிழக விசைத்தறியாளர்களிடமே வழங்க வேண்டும். மேலும், கடந்த 10 ஆண்டுகளாக பள்ளி சீருடைக்கான உற்பத்தி கூலி உயர்த்தப்பட வில்லை. தற்போது ஊதியம், குடோன் வாடகை, மின் கட்டணம் உயர்வு, தொழில் சார்ந்த மறைமுக செலவுகள் அதிகரித்துள்ளதன. எனவே கூலியை 25 விழுக்காடு உயர்த்தி வழங்க வேண்டும் என் கோரியுள்ளனர்.

;