பொள்ளாச்சி, ஜன.25- ஆசிரியர்களையும், ஊழியர்களையும் தரைகுறைவாக ஊழியர் விரோத போக்குடன் செயல்படும், வால்பாறை, சோலையார் அர சுப்பள்ளி தலைமை ஆசிரியை கண்டித்து இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைபின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வால்பாறை அருகே சோலையார் அணை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள் ளியில் பணியாற்றும் ஆசிரியர்களையும், ஊழியர்களையும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை லோகம்மாள் தொடர்ச்சியாக தரை குறைவாக பேசி வருகிறார். ஊழியர் விரோத போக்குடன் செயல்படும் தலைமை ஆசிரியர் மீது மாவட்ட கல்வி அலுவலர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியு றுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொள் ளாச்சி மாவட்ட கல்வி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழ் நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்ட தாரி ஆசிரியர் கழகம். உள்ளிட்ட தோழமை அரசு ஊழியர் ஆசிரியர் சங்கங்களின் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆகிய அமைப் புகள் பங்கேற்றனர். முன்னதாக, ஆர்ப்பாட்டத்தின் நோக்கங் கள் குறித்து, நிர்வாகிகள், த.சரவணகுமார், எஸ்.செல்லத்துரை, எஸ்.முத்துக்குமாரசாமி, தா.அருளானந்தம், தங்கபாசு, கே.சாலமன் ராஜ் ஆகியோர் உரையாற்றினர். இதில், ஏரள மானோர் பங்கேற்று கோரிக்கை முழக்கங் களை எழுப்பினர்.