கனமழையால் பாதிக்கப்பட்டு, துயரில் உள்ள மக்களை பாதுகாக்கும் பொருட்டு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவையில் நிவாரண பொருட்கள் மற்றும் நிதி வசூல் இயக் கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக, வீடுவீடாக உழைக்கும் மக்களிடம் சேக ரிக்கப்பட்ட ரூ.26 ஆயிரத்து 500யை முதற்கட்டமாக வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் கார்த்திக்கிடம், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் விவேகானந்தன், செயலாளர் அர்ஜுன், பொரு ளாளர் தினேஷ்ராஜா உள்ளிட்டோர் ஒப்படைத்தனர்.