இந்தியா டிஜிட்டல் மயமாகி விட்டது. பணமில்லா பரி வர்த்தனை மூலமாக கட்டண கழிப்பிடங்களுக்கு (யுபிஐ) ஆன்லை னில் பணம் செலுத்தும் வசதி என பல கவர்ச்சிகர விளம்பரங்களை திரைய ரங்குகள் முதல் தொலைகாட்சி, நாளி தழ்கள் வரை விளம்பரம் செய்து பெருமை கொள்கிறது. தமிழகத்தில் ‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற திட்டத்தின் வாயி லாக சென்னை, மதுரை, கோவை உள் ளிட்ட மாநகரங்களில் மொபைல் டாய் லட்டுகள், அதிநவீன கழிப்பிடங்கள் என பல வகைகள் உள்ளது. ஆனாலும், அவற்றின் தற்போதைய செயல்பாடு கள் விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அள வில்தான் காணப்படுகிறது. அதில், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின் பொது கழிப்பிடங்களின் நிலைமை இன்னும் சொல்லில்மா லாது. இத்தகைய அவல நிலைக்கு கார ணமான தமிழகத்தின் முந்தைய ஆட்சி யில் இருந்த அதிமுகவினர், குறை கூறுவதில் ‘பேராசிரியர்’ பட்டமே பெறும் வகையில் நடந்துக் கொள்கின்றனர்.
சுகாதாரத்திற்கே அச்சுறுத்தல்
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நக ராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளில் ஏறத் தாழ 40க்கும் மேற்பட்ட பொது கழிப்பறை கள் உள்ளது. அவை சில இடங்களில் கட்டண கழிப்பிடங்களாகவும், இலவச பொது கழிப்பிடங்களாகவும் உள்ளது. அதில், முறையாக செயல்படக்கூடிய கழிப்பறைகள் என எதுவும் குறிப்பிட முடியாத அளவிற்கு தரமற்ற கழிப் பறைகளாக மாறியுள்ளது. குறிப்பாக பொள்ளாச்சி - பல்லடம் சாலையில் அமைந்துள்ள நந்தனார் காலனி, பிஎம்சி காலனி, தெப்பக்குளம், சிடிசி மேடு, விஜய புரம், நேருநகர், அண்ணாநகர், மரப் பேட்டை, தந்தை பெரியார் வீதி, அன்னை கஸ்தூரிபாய் வீதி உள்ளிட்ட அருந்ததிய மக்கள் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் பொள்ளாச்சி நகராட்சி மூலமாக கட்டப் பட்ட கழிப்பிடங்கள் சுகாதார அமைப் பையே அச்சுறுத்தும் வகையில் மிக மோச மான கழிப்பிடங்களாக மாறியுள்ளது.
தாழ்ப்பாளாக மாறிய கயிறுகள்
பல ஆண்டுகளாக கழிப்பிடம் இல்லா மல் திறந்தவெளியை இயற்கை உபா தைக்கு பயன்படுத்திய காலம் கடந்தது. தற்போது ‘அங்கிள் புது ஸ்கூட்டர் எடுத் துட்டு திறந்தவெளியில் மலம் கழிக்க போறீங்களா? என்ற ஒன்றிய பாஜக அர சின் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தின் விளம்பர பதாகைகள் நகர்ப்புற பகுதிகளில் அதிகம் கண்டிருப்போம். ஆனால், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட பகுதி யில் உள்ள பொது கட்டணக் கழிப்பி டக் கழிப்பறைகளில் தாழ்ப்பாள்களுக்கு பதிலாக கயிறுகளை அப்பகுதி பொது மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அடிக்கடி சாக்கடை அடைப்பு, மோட்டார் கோளாறு கூடுதல் பரிசாக வழங்கப்படுகிறது.
நடவடிக்கையும் இல்ல பா…
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், பொள்ளாச்சி நந்தனார் காலனி மற்றும் பிஎம்சி காலனியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும் பாலோனோர் தூய்மை பணியாளர்களாக இருக்கின்றோம். எங்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு, பல போராட்டங்களுக்கு பிறகு பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகத்தால் இரண்டு இலவச பொதுகழிப்பிடங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டித்தரப்பட்டது. அதன்பின் னர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஒருமுறை பராமரிப்பு, வேலை தரம் குறைந்த கதவு கள் மற்றும் உபகரணங்கள் கொண்டு சீர மைக்கப்பட்டது. ஆனால், பணி முடிந்து ஓராண்டு நிறைவடைவதற்குள் கதவுகள், வாளி உள்ளிட்ட பொருட்கள் சேதம டைந்தது. இதனைத்தொடர்ந்து முறை யாக சீரமைப்பு பணி மேற்கொள்ள பல முறை நகராட்சி நிர்வாகத்திடமும், சார் ஆட்சியரிடமும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், சுகாதாரமற்று மிகவும் மோச மான வகையில் பிஎம்சி மற்றும் நந்தனார் காலனி கழிப்பறைகள் மாறியுள்ளது.
பொதுமக்களின் கோரிக்கை
இதற்கிடையே ஆளுங்கட்சியின் வார்டு செயலாளர்களின் கட்டுப்பாட்டில் நகராட்சியினர் பொதுக்கழிப்பிடங்களை ஒப்படைத்து விடுகின்றனர். அதில் நபர் ஒன்றுக்கு 2 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில், நாளொன்றுக்கு ரூ.200 வரை லஞ்சமாக பெற்றுக்கொள்ளும் அரசியல் பிரமுகர்கள் கழிவறையின் சுகாதாரம் குறித்து அக்கறைபடுவதில்லை. எனவே, பொதுக்கழிப்பிடங்களை நகராட்சியின் நேரடி கட்டுப்பாட்டில் வைத்து பராமரிக்க வேண்டும். மாதம் ஒருமுறை கழிவுநீர் அடைப்பை சரி செய்ய வேண்டும். மேலும், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து நவீன முறையில் கழிப்பிடங்களை சீர மைக்க வேண்டும். ஒப்பந்த துப்புரவு பணி யாளர்களுக்கு மாதச்சம்பளம் அடிப் படையில் கழிப்பிடங்கள் பராமரிப்பு வேலையை சுழற்சி முறையில் பிரித்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-த.கா.மணியாழன், பொள்ளாச்சி.