districts

img

சிபிஎம் சார்பில் சுதந்திர தின கொடியேற்றம்

தருமபுரி, ஆக.16- தருமபுரியில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் நடை பெற்ற, சுதந்திர தின விழா கொடி யேற்றும் விழாவில் பலர் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி மாவட்டம், செங் கொடிபுரத்தில் 78 ஆவது சுதந்திர தின கொடியேற்று விழா வியாழ னன்று நடைபெற்றது. கட்சியின் நகரச் செயலாளர் சி.முரளி தலைமை வகித்தார். தேசியக்கொ டியை சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார் ஏற்றி வைத்தார். இதில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கிரைஸாமேரி , பாலக்கோடு வட்டச் செயலா ளர் டி.எஸ்.ராமச்சந்திரன், நல்லம் பள்ளி ஒன்றியச் செயலாளர் எஸ். எஸ்.சின்னராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.ஆர்.சக்கரவ ரத்தி, கே.பூபதி, ஏ.ஜெயா, ஜி.நாக ராஜன், சிறுபான்மை மக்கள் நலக் குழு மாவட்டச் செயலாளர் டி.ஏசு தாஸ், மாதர் சங்க நிர்வாகிகள் எஸ்.நிர்மலாராணி, ஒய்.சுபா, வாலி பர் சங்க நிர்வாகி மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கட்சியின் பாப்பி ரெட்டிப்பட்டி வட்டக்குழு அலுவல கத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு, மூத்த தோழர் தீர்த்த கிரி தலைமை வகித்தார். மெனசி கிளைச் செயலாளர் பொன்னுசாமி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மூத்த தலைவர் டி.சேகர் கட்சியின் செங்கொடியை ஏற்றி வைத்தார். இதில் வட்டச் செயலாளர் தனுஷன், வட்டக்குழு உறுப்பினர்கள் கிருஷ் ணவேணி, கண்ணகி, அம்புரோஸ், கிளைச் செயலாளர்கள், வாலிபர் சங்க வட்டச் செயலாளர் குப்பன், விவசாயத் தொழிலாளர் சங்க வட்டப் பொருளாளர் விஜி உட்பட பலர் கலந்து கொண்டனர். கோவை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில், தேசியக்கொடியை சிபிஎம் கோவை மாவட்டச்செயலாளர் சி.பத்மநாபன் ஏற்றி வைத்தார். இதில், சிபிஎம் வடக்கு நகரச்செய லாளர் சுந்தரம், கிழக்கு நகரச்செய லாளர் செல்வராஜ், மாவட்டக்குழு  அலுவலகச் செயலாளர் ஆனந்தன், மையக்கிளை செயலாளர் என்.ஜெயபால் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சியினர் சுதந்திர தின விழாவை எழுச்சியோடு கொண்டாடினர். இதில், கட்சியின் மாவட்ட செயற் குழு, மாவட்டக்குழு மற்றும் இடைக்குழு செயலாளர்கள் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.