districts

img

திருப்பூர் பிஎஸ்என்எல் சங்கத்தின் சார்பில் சுதந்திர தின பவளவிழா கருத்தரங்கம்

திருப்பூர், செப். 2 - இந்திய சுதந்திரத்தின் 75 ஆவது ஆண்டு பவள விழா கருத்தரங்கம் திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், அகில இந்திய தொலைதொடர்பு  மற்றும் பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள்  சங்கம், தமிழ்நாடு தொலை தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங் கம் இணைந்து வெள்ளிக்கிழமை இந்த விழாவை நடத்தினர். ஓய்வூதி யர் சங்க மாவட்ட தலைவர் பா. சௌந்தரபாண்டியன் தலைமை ஏற் றார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க கிளைச் செயலாளர் என்.குமரவேல் வரவேற்றார். இதில் விடுதலைப் போரில் வீழ்ந்த மலர்கள் என்ற தலைப்பில் அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் அ. நிசார் அகமது, சுதந்திரத் தீயை அணையாது காப்போம் என்ற தலைப்பில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க அகில இந்திய இணைச் செய லாளர் எம்.கிரிஜா ஆகியோர் கருத் துரை ஆற்றினர். இதையடுத்து மகளிர் தினப் போட் டிகளில் வெற்றி பெற்றோருக்கும், இளம் எழுத்தாளர் நிலா பிரசாத்துக் கும் பரிசளிக்கப்பட்டன. அத்துடன் கொரோனா காலத்தில் உயிர்காக் கும் பணியில் முன்களத்தில் செயல் பட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ், இந்திய ஜனநாயக  வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்  செ.மணிகண்டன், மாதர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பவித்ராதேவி, மாண வர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பிரவீன்குமார், அறிவியல் இயக்க  மாவட்ட செயலாளர் எஸ்.கௌரி சங்கர் ஆகியோரைப் பாராட்டி பரிசு கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கே.ரங்கராஜ் உரையாற்றினார். இந்நிகழ்வில் பிஎஸ்என்எல் ஊழியர்கள், ஓய்வு பெற்றோர் திரளானோர் கலந்து கொண்டனர். ஒப்பந்த தொழிலாளர் சங்க நிர்வாகி ஏ.ரமேஷ் நன்றி கூறி னார்.