கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் பலி
சேலம், செப்.18- திருப்பூர் மாவட்டம், சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த பழனி சாமி மகன் புவனேஷ் (18), சேலம் மாவட்டம், சங்ககிரி, நாகிசெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜோசப் மகன் பாப்பேஜ் (17), ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் மகன் தீபக் (18), சேலம் மாவட்டம் தேவூர் காணி யாளம்பட்டி பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் சஞ்சய் (18), தேவூரை அடுத்த சீரங்க கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி மகன் கிஷோர் (18). இவர்கள் 5 பேரும் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தனர். நண்பர்களான 5 பேரும் 3 நாட்கள் தொடர் விடுமுறையை யொட்டி குறும்படம் எடுக்க முடிவு செய்தனர். இதற்காக சீரங்க கவுண்டம்பாளையத்திற்கு ஞாயிறன்று சென்றனர். இதைய டுத்து அங்குள்ள விவசாய தோட்டத்தில் குறும்படம் எடுப்பதற் காக சென்றனர். அப்போது சஞ்சய், அருகே இருந்த கிணற் றில் கிணற்றில் இறங்கி குளித்தார். அப்போது நீச்சல் தெரியா ததால் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு தண்ணீரில் மூழ்கி னார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தீபக் கிணற்றில் குதித் தார். ஆனால், அவரும் தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து சிறிது நேரத்தில் 2 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதனைப்பார்த்து சத்தம் போட்ட நண்பர்கள் 3 பேரும் உட னடியாக சங்ககிரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள், தேவூர் போலீசார், சங்ககிரி வட்டாட்சியர் அறிவுடைநம்பி, துணை வட் டாட்சியர் ரமேஷ், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வி உள் ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதைய டுத்து தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி, 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் சஞ்சய், தீபக் ஆகியோ ரின் உடல்களை மீட்டு மேலே கொண்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளிச்சந்தை: இன்று மின்தடை
தருமபுரி, செப்.18- தருமபுரி மாவட்டம், வெள்ளிச்சந்தை துணை மின்நிலை யத்தில் செவ்வாயன்று (இன்று) மாதாந்திர பராமரிப்பு பணி கள் நடைபெற உள்ளன. இதனால் பாலக்கோடு, சுகர்மில், எர் ரனஅள்ளி, கடமடை, கொல்லஅள்ளி, தண்டுகாரனஅள்ளி, சொட்டாண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பேளாரஅள்ளி, எண் டப்பட்டி, தொட்டார்தனஅள்ளி, கொலசனஅள்ளி, மாரண்ட அள்ளி, ஜக்கசமுத்திரம், மல்லுப்பட்டி, மல்லாபுரம், பொரத் தூர், மகேந்திரமங்கலம், பஞ்சப்பள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, தப்பை, மதகேரி, காட்டம்பட்டி, கரகதஅள்ளி, புலிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாயன்று காலை 9 மணி முதல் மதி யம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் வனிதா தெரிவித்துள்ளார்.
காலிங்கராயன் பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு
ஈரோடு, செப்.18- காலிங்கராயன் பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீரின் அளவு அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும், பாசனத்திற்காக அதிகளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதேநேரம் மழை பொழிவு இல்லா ததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதன்படி, திங்களன்று காலை நில வரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 74.33 அடியாக சரிந்துள் ளது. வினாடிக்கு 1,534 கனஅடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக் கிறது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக 2,300 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. காலிங்கராயன் பாசனத்திற்கு 500 கனஅடி திறந்து விடப்பட்ட நிலையில், திங்களன்று முதல் 550 கனஅடியாக அதிகரித்து திறக்கப்பட்டு உள்ளது. குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையிலிருந்து 2,950 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும், பவானிசாகர் அணையை தொடர்ந்து மற்ற அணைகளின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாளை மின்தடை
சேலம், செப்.18- அஸ்தம்பட்டி துணை மின் நிலையத்தில் புதனன்று (நாளை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத னால் அஸ்தம்பட்டி, காந்தி ரோடு, வின்சென்ட், மரவ னேரி, மணக்காடு, சின்னதிருப் பதி, கன்னங்குறிச்சி, புதுஏரி, ஹவுசிங்போர்டு, கொல்லப் பட்டி, கோரிமேடு, அழகா புரம், ராஜாராம் நகர், சங்கர் நகர், கம்பர் தெரு, செட்டிச் சாவடி, விநாயகம்பட்டி உள் ளிட்ட பகுதிகளில் புதனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத் தம் செய்யப்படுகிறது.
பாசன கால்வாய் தூர்வாரும் பணி
கோவை, செப்.18- கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் - ஆழியார் வடிநில கோட்டப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் புதிய ஆயக்கட்டு பாசனப் பரப்பு கிளை கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன. இதன்ஒருபகுதியாக ஆனைமலை வட்டாரத் தில் தென்சங்கம்பாளையம், சோமந்துரை, பெத்தநாயக்க னூர், அங்கலக்குறிச்சி, ஜல்லிப்பட்டி, கரியஞ்செட்டிபாளை யம், ஆத்துப்பொள்ளாச்சி ஆகிய இடங்களில் ரூ.21.33 லட்சம் மதிப்பீட்டில் பாசன கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் பொள்ளாச்சி தெற்கு வட்டாரத்தில் மக் கினாம்பட்டி, ஊஞ்ச வேலம்பட்டி, ஜமீன் கோட்டம்பட்டி, சோளபாளையம், கோலார்பட்டி, கூலநாயக்கன்பட்டி, கஞ் சம்பட்டி, தென்குமார பாளையம், எஸ்.மலையாண்டிபட்டி ணம், பாலவூர், நாட்டுக்கல்பாளையம், சிங்காநல்லூர், ஆம் பாரம்பாளையம் ஆகிய பகுதிகளில் ரூ.11.89 லட்சம் மதிப் பீட்டில் கால்வாய் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி வடக்கு வட்டாரத்தில் அய்யம்பாளையம், போடிபாளையம், மண்ணூர், திம்மங்குத்து, நல்லுத்துக் குளி ஆகிய பகுதிகளில் ரூ.4.83 லட்சம் மதிப்பீட்டிலும், சுல் தான்பேட்டை வட்டாரத்தில் செஞ்ரிசேரிப்புதூர், கம்மாளப் பட்டி, தாளக்கரை ஆகிய பகுதிகளில் ரூ.5.41 லட்சம் மதிப் பீட்டில் என மொத்தம் ரூ.43.46 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆயக் கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய்களை தூர்வாரும் பணி கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று வரும் புதிய ஆயக் கட்டு பாசனப்பரப்பு கிளைக்கால்வாய் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு பணிகளை விரைவாக வும் தரமாகவும் முடித்து பொதுமக்கள் பயன் பாட்டுக்கு ஒப்ப டைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை கூறினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பால சுப்பிரமணியன், லதா ஆகியோர் உடனிருந்தனர்.
செப்.20ல் குறைதீர் கூட்டம்
ஈரோடு, செப்.18- தமிழ்நாடு மின் உற்பத்தி கழக ஈரோடு மண்டல மற்றும் அதன் பகுதிகளுக்குட்பட்ட பிற அலுவலகங்களில் பணி புரிந்து ஓய்வுபெற்ற அலுவலர், பணியாளர்களின் குறைதீர் கூட்டம் வரும் செப்.20 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் ஈரோடு மண்டலம் மற்றும் அதன் பகுதியில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணிபுரிந்து அலுவலர், பணியாளர்களின் குறைகளை நேரில் கேட்க 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அப்போது குறைகளை மனுக்களாகவும் பெற்று உடனடியாக தீர்த்து வைக்கப்படும். காலண்டிற்கு ஒரு முறை நடைபெறும் மின் வாரிய ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் செப்.20 ஆம் தேதி காலை 11 மணிக்கு 948, ஈ.வி.என். சாலை, ஈரோட்டில் அமைந் துள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் நடைபெற உள்ளது. ஓய்வுபெற்ற அலுவலர், பணியாளர்கள் மேற்கண்ட வாய்ப் பினை பயன்படுத்தி தங்களின் குறைகளை தீர்த்துக் கொள்ள மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தக்காளி விலை கடும் வீழ்ச்சி
கோவை, செப்.18- கிணத்துக்கடவு காய்கறி சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து, கிலோ ரூ.12க்கு விற்பனையானது. கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளிகள் கிணத்துக்கடவு, நெகமம், செஞ்சேரி மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் அதிகளவு தக்காளிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். இந்தாண்டு கிணத்துக்கடவு பகுதிகளில் பருவ மழை சரிவரப் பொய்யாததால் கிணத்துக்கடவு பகுதிகளில் தக்காளி வரத்து தாமதமாக தொடங்கியது. கிணத்துக்கடவு, செஞ்சேரிமலை, நெகமம் உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதி களிலிருந்து கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வர தொடங்கியது. அதன்படி ஞாயிறன்று நடை பெற்ற ஏலத்திற்கு மொத்தம் 10 டன் தக்காளிகள் விற்ப னைக்கு விவசாயிகள் கொண்டு வந்தனர். தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலங்களில் பல மாவட்டங்களில் தக்காளி வரத்து தொடங்கியுள்ளதால், கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தை யில் தற்போது தக்காளி விலை தொடர்ந்து கிடுகிடுவென குறையத் தொடங்கியது. அதன்படி ஞாயிறன்று நடைபெற்ற ஏலத்தில் ஒரு கிலோ தக்காளி 12 ரூபாய் 25 காசுக்கு ஏலம் போனது. இது கடந்த ஞாயிற்றுக்கிழமைவிட ஒரு கிலோவிற்கு 2 ரூபாய் 75 காசு குறைவாகும். தக்காளி விலை தொடர்ந்து குறைந்த விலைக்கு ஏலம் போவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
தொப்பூர் கணவாயில் விபத்து: ஒருவர் பலி
தருமபுரி, செப்.18- தொப்பூர் கணவாயில் இரு லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில், ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னையிலிருந்து ஒரு கன்டெய்னர் லாரி கோவைக்கு சென்றது. இந்த லாரியை கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கரா புரம் பகுதியைச் சேர்ந்த வினோத் (29) என்பவர் ஓட்டி வந்தார். தொப்பூர் கணவாய், கட்டமேடு பகுதியில் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி, எதிர்திசையில் சென்ற கியாஸ் டேங்கர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இடிபாடுகளில் சிக்கி, கன்டெய்னர் லாரி ஓட்டுநர் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையின ருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத் திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த ஓட்டுநரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பின் கன் டெய்னர் கியாஸ் டேங்கர் லாரி ஆகியவற்றை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இவ்விபத்து குறித்து போலீ சார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிரட்டி பணம் பறித்த 2 கைது
கோவை, செப்.18- கோவையில் வியாபாரியை மிரட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கோவை ரத்தினபுரி கிழக்கு தில்லை நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், மணிகண்டன் காந்திபுரம் 9 ஆவது வீதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப் போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மணிகண்டனை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.300ஐ பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து மணிகண்டன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கத்தி முனையில் பணம் பறித் தது கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்த கால் டாக்சி ஓட்டு நர் கார்த்திக் (24), சரவணம்பட்டி புத்தர் தெருவை சேர்ந்த மார்க்கெட்டிங் ஊழியர் ரவிவர்மன் (19) என்பது தெரிய வந்தது. போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குடிநீர் குழாய் உடைந்து வீணானது
நாமக்கல், செப்.18- நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து ஆயிரக் கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக தெருவில் ஓடியது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நக ராட்சியில், காவிரி நகர் பகுதியில் நீரேற்ற நிலையம் உள்ளது. இதன் மூலம் காவிரி ஆற்றில் இருந்து தினசரி லட்சக்கணக்கான லிட்டர் நீர் எடுத்து அதனை சுத்தம் செய்து, நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டு பகுதி மக்க ளுக்கும் குடிநீர் விநியோகம் நடைபெற்று வரு கிறது. இதற்காக குமாரபாளையம் நகராட்சிக் குட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியில் 3 லட் சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கப்பட்டு அதன் மூலம் நாராயண நகர், அம்மன் நகர், குளத்துக் காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் பத்து வார்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. இந்த குடிநீர் குழாய் பள்ளிபாளையம் சாலையில் உள்ள பாலத்தின் மீது போடப் பட்டுள்ளது. இந்த குழாய் திங்களன்று காலை குடிநீர் விநியோகத்திற்காக திறந்து விடப்பட்ட பொழுது சேதம் ஏற்பட்டு உடைந் தது. இதனையடுத்து, தண்ணீர் பீறிட்டு வெளி யேறியது. சுமார் 15 அடி உயரத்திற்கு தண்ணீர் பீறிட்டு வெளியேறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். இருப்பி னும் மேல்நிலைத் தொட்டியில் உள்ள மூன்று லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறினால் மட் டுமே இது பழுதுபார்க்கப்படும் என அதிகாரி கள் தெரிவித்து குடிநீர் வீணாகும் வரை காத் திருந்து அதன் பிறகு சரி செய்தனர். சுமார் மூன்று லட்சத்திற்கும் மேலான குடிநீர் சாலை யில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது டன் இரண்டு நாளைக்கு, சுமார் பத்து வார்டு களுக்கு குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற் படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போதைப் பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது
உதகை, செப்.18- தேவர்சோலை பகுதியில் போதைப் பொருட்களை விற்ப னைக்கு வைத்திருந்த கடை உரிமையாளரை காவல் துறை யினர் கைது செய்தனர். நீலகிரி மாவட்டம், உதகை அருகே உள்ள தேவர்சோலை பஜார் பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருபவர் ராஜேந் திரன் (56). இவரின் கடை அருகே டாஸ்மாக் கடையும் உள்ள தால், ஏராளமானோர் இவரது கடைக்கு வருவது வழக்கம். இதனை பயன்படுத்தி ராஜேந்திரன் என்பவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை சட்டவிரோத மாக விற்பனை செய்து வந்தது காவல் துறையினருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து உதகை ஊரக காவல் ஆய்வாளர் மணி குமார் தலைமையில், உதவி ஆய்வாளர் வெங்கடேஸ் வரன் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டு, கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட 6 கிலோ போதை பொருட்களை பறி முதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
கொடிவேரி தடுப்பணையில் மூழ்கி சிறுமி பலி
ஈரோடு, செப்.18- கோபி அருகே சுற்றுலா வந்த சிறுமி கொடிவேரி தடுப்ப ணையில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். மதுரை மாவட்டம், பாறைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராசு. கட்டட தொழிலாளியான இவருடைய மனைவி செல்வி. இவர்களுடைய மகள் லத்திகா (11). இவர் மதுரை வீரபெருமாள்புரத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், ஈரோட்டில் வசித்து வரும் செல்வியின் தங்கை சூர்யாவின் மகன் பிறந்தநாளை கொண் டாட நாகராசு குடும்பத்துடன் ஈரோடு வந்துள்ளார். அதைத் தொடர்ந்து பிறந்தநாளை கொண்டாடி விட்டு, ஞாயிறன்று மாலை அனைவரும் கோபி அருகே உள்ள கொடிவேரி தடுப் பணைக்கு சுற்றுலா சென்றனர். அப்போது லத்திகாவும், அவர் களது உறவினர் கருப்பு என்பவரின் மகள் குட்டிமாவும் (9) கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்காக இறங்கி உள்ள னர். சிறுமிகள் 2 பேரும் அணையின் கீழ் பகுதியில் உள்ள ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்றதால், இருவரும் தண்ணீ ரில் மூழ்கினர். இதைப்பார்த்த அங்கே குளித்து கொண்டிருந்த வர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். இதில் குட்டி மாவை உயிருடன் மீட்டனர். தொடர்ந்து லத்திகாவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டனர். இதன்பின் அவரை சிகிச்சைக்காக உறவினர்கள் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் கள், லத்திகா ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பங்களாப்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளை மின்தடை
நாமக்கல், செப்.18- ராசிபுரம் துணை மின் நிலையத்தில் புதனன்று (நாளை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இத னால் ராசிபுரம், முத்துக்காளிப் பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப் பாளையம், பட்டணம் முனி யப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், அரசப் பாளையம், மோளப்பாளை யம், வேலம்பாளையம், வெள் ளாளப்பட்டி, பட்டணம், கூன வேலம்பட்டி புதூர், குரு சாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோ கம் இருக்காது.