சேலம், நவ.18- மக்களை தேடி மருத்துவ சுகாதார ஆய்வாளர்களின் ஊதியத்தை உயர்த்த வழங்க வேண்டும் என வலியுறுத்தி பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் பணியாற்றும் சுகாதார ஆய்வாளர்களின் ஊதியத்தை ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். பொது சுகாதாரத் துறையில் பணிபுரியும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், மருத்துவமில்லா மேற்பாற்வையாளர்கள் உள்ளிட்ட ஊழியர் களின் நீண்டநாள் கோரிக்கைகளை உடனடியாக நிறை வேற்ற வேண்டும். சென்னை உயர்நீதிமன்றம் ஒருங்கிணைக் கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரிந்து வந்த அனை வருக்கும் முன் தேதியிட்டு பதிவு உயர்வு வழங்க ஆணை யிட்டது. இந்நிலையில், அதனை நடைமுறைப்படுத்தாமல் பதவி உயர்வுக்கான தேர்ந்த பட்டியலை திருத்தி வெளியிடும்போது தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் என்எம்எஸ், பிஎச்எஸ் ஆகிய அனைத்து பதவிகளுக்குமான காலிப்பணி யிடங்களை பின்பற்றாமல் மேலோட்டமாக திருத்திய தேர்ந்த பட்டியலை வெளியிட்டு பணிமூப்பில் குழப்பம் ஏற்ப டுத்தியது கண்டிக்கத்தக்கது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் பணி மூப்பு பட்டியலை பின்பற்றாத போக்கை கண்டித்தும், காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் (இரண்டு) பணியிடங்களை நிரப்ப வேண்டும் என வலியுறுத்தியும் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கம் சார்பில் சேலம் துணை இயக்குநர் அலுவல கம் (சுகாதாரப் பணிகள்) முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.பிரபாகரன் தலைமை வகித்தார். இதில், மாவட்ட செயலாளர் ஏ.சண்முகம், மாநில துணைத்தலைவர் வி.செல்வம், மாவட்ட நிர்வாகிகள் இ.கோவிந்தராஜ், சி.முருக பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.