districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

கொப்பரை கொள்முதலை அதிகரிக்க கூடுதல் நிலையங்கள் அறிவிப்பு

கோவை, ஜூன் 2- கோவை மாவட்டத்தில் கொப்பரை கொள்முதலை அதி கரிக்க வியாழனன்று முதல் தொண்டாமுத்தூர் மற்றும் அன்னூர் ஆகிய 2 நிறுவனங்கள் புதியதாக கூடுதல் கொள் முதல் நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெறும் வகையில், ஒன்றிய அரசின் நாபெட் நிறுவனத்தின் மூலம்  விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்பட்டு வருகிறது. தென்னை சாகுபடி செய் யும் விவசாயிகளின் நலனுக்காக நிர்ணயிக்கப்பட்ட தரம், அளவு கொண்ட கொப்பரை (அரவைத் தேங்காய்) கிலோ  ரூ.105.90க்கும், பந்து தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 110க்கும் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட் டுள்ளது. கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, நெகமம், செஞ்சேரி, ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய 5  ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களை கொப்பரை கொள் முதல் நிலையங்களாக ஏற்கனவே அரசு அறிவித்திருந் தது. தற்போது, கொப்பரை கொள்முதலை அதிகரிக்க தொண்டாமுத்தூர் மற்றும் அன்னூர் ஆகிய 2 நிறுவனங் களை புதியதாக கூடுதல் கொள்முதல் நிலையங்களாக அறி விக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதலுக்கு பிப்ரவரி - 2022 முதல் ஜீலை - 2022  வரை கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது நாள்வரை  1,099.2 மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இத்திட் டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் நிலத்தின் சிட்டா  அடங்கல், ஆதார் அட்டை நகல் மற்றும் வங்கிக் கணக்கு ஆகிய விவரங்களுடன் தங்கள் அருகிலுள்ள மேற்கண்ட ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை (பொள்ளாச்சி - 7010615376, கிணத்துக்கடவு -9865154644, அன்னூர் – 8883453333, தொண்டாமுத்தூர் – 9994564540, ஆனைமலை – 9976168113, செஞ்சேரி – 9751527708, நெக மம் - 9894687827) அணுகி பதிவு செய்து கொள்ளலாம். இத்திட் டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படும் தேங்காய் கொப்ப ரைக்கு உரிய தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

மளிகை கடை உரிமையாளர் கடத்தல் - போலீசார் விசாரணை

சேலம், ஜூன் 2- சேலத்தில் வடமாநில மளிகைக்கடை உரிமையாளரை அடையாளம் தெரியாத வடமாநில நபர்கள் கடத்தி சென்ற  சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், பட்டைகோவில் பகுதியில் வடமா நிலத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் வியாழனன்று அதிகாலை வழக்கம் போல் கடையை திறந்துள்ளார். அப்போது அங்கு வந்த  6 பேர் கொண்ட வடமாநில வாலிபர்கள் ஜெயராமனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஜெயரா மனை பிடித்து இழுத்து, வெளியில் நிறுத்தி வைக்கப்படட்டி ருந்த காரில் ஏற்றி சென்றுள்ளனர். இதனை சற்றும் எதிர்பா ராத கடையில் பொருள் வாங்க வந்தவர்கள் காவல்துறையி னருக்கு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சேலம் மாநகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றினர். மேலும், இந்த சம்பவம் கடை போட்டி கார ணமாகவா? அல்லது முன்விரோதம் காரணமாகவா? என்ற  பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலிசாரை கண்டவுடன் 350 கிலோ குட்காவை போட்டு தப்பியோட்டம்

கோவை, ஜூன் 2- கோவை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்  துறையினரை கண்டு, 350 கிலோ குட்கா பொருட்களை கீழே  போட்டுவிட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடி வரு கின்றனர். கோவையை அடுத்த  சூலூர் தண்ணீர்த்தொட்டி சாலை யில் உள்ள ஒரு  வீட்டில் தடைசெய்யப்பட்ட குட்கா உள் ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருப்பதாக சூலூர்  காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட தனிப்படை போலீ சார் அங்குள்ள வீட்டில் சோதனை செய்ய சென்றனர். அப் போது போலீஸ் வருவதை பார்த்த வடமாநில வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். உள்ளே சென்று பார்த்தபோது தமி ழக அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா பொருட் கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்த னர். மேலும், தப்பி ஓடியது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த  பேரா ராம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.  இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி யோடிய பேரா ராமை தேடி வருகின்றனர்.

வறுமையை பயன்படுத்தி பெண்ணிடம் பாலியல் பலாத்காரம்

நியாயம் கேட்க சென்றபோது எரித்து கொலையா? போலீசார் விசாரணை

கோவை, ஜூன் 2– தனியார் நிறுவன உரிமையாளர் கடை யில் வேலை பார்த்த பெண்ணிடம் வறு மையை பயன்படுத்தி பாலியல் பலாத்கா ரத்தில் ஈடுபட்டுள்ளார். தொடர் கருக்கலைப் பால் அவதிப்பட்ட பெண் நியாயம் கேட்கச் சென்றபோது எரித்துக்கொன்ற சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த கர்ணாபுரத்தை சேர்ந்தவர் மலர் (37). இவர்  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண் டார். கருத்து வேறுபாடு காரணமாக கண வரை பிரிந்த மலர், தனது பெற்றோர் வீட் டிலிருந்தவாறு, பவானியில் நவநீதன் என்ப வரின் விநாயக செராமிக்ஸ் என்கிற கடையில் பணியாற்றி வந்துள்ளார். அங்கு  மலரின் வறுமை மற்றும் குடும்ப சூழலை  பயன்படுத்தி நவநீதன் அவரிடம் பலமுறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சுமார் 5 முறை கருக்கலைப்பு செய்த மலருக்கு வயிற்றுவலி மற்றும் உடல் நலக்கோளாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெறுவதற்கு பணம் கேட்டு கோவை ஆர்.எஸ்.புரத்தில் மலர் வேலை  பார்த்த கடையின் உரிமையாளர் வீட்டுக்கு வந்துள்ளார்.  அப்போது, தனது முகநூலில் நவநீத னோடு பேசுவதை நேரலை செய்துள்ளார். இதனால், நவநீதனுடன் வாக்குவாதம் ஏற் பட்டுள்ளது. இவை அனைத்தும் முகநூல்  பக்கத்தில் பதிவாகியுள்ளது. இதற்கி டையே 29 ஆம் தேதி கோவை அரசு மருத்துவ மனையில் 60 சதவிகிதம் தீக்காயங்களுடன் மலர் அனுமதிக்கப்பட்டார். முதலில் காவல் துறையினர் 309 பிரிவில் தற்கொலை முயற்சி என வழக்குப்பதிவு செய்தனர். இதனைய டுத்து மலர் தனது மரண வாக்குமூலத்தில் நவநீதன் மற்றும் அவரது மனைவி இருவ ரும் சேர்ந்து தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்ததாக தெரிவித்ததைய டுத்து, போலீசார் 307 பிரிவின் கீழ் கொலை  முயற்சி என வழக்குப்பதிவு செய்தனர். இந் நிலையில், மலர் வியாழனன்று சிகிச்சை பல னளிக்காமல் உயிரிழந்தார். இதனையடுத்து 302 பிரிவின் கீழ்  கொலை வழக்கு பதிவு செய்த ஆர்எஸ்புரம்  போலீசார், மூன்று தனிப்படைகளை அமைத்து தலைமறைவான நவநீதன் மற்றும் அவரது மனைவி அகிலா ஆகி யோரை தேடி வருகின்றனர். முன்னதாக, மலர் காவல் நிலையத்திற்கு என ஒரு கடிதம்  எழுதியுள்ளார். அந்த கடிதத்தை கைப்பற் றிய போலீசார் தீவிர விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

தமுஎகச நிர்வாகிகள் தேர்வு

ஈரோடு, ஜீன் 2- தமிழ்நாடு முற்போக்கு  எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் எல்லக்கடை கிளை மாநாடு சுப்பிரமணி யன் தலைமையில் நடை பெற்றது. மாநாட்டில் மாவட்டச் செயலாளர் சங் கரன் தொடக்கவுரையாற் றினார். கிளை மாநாட்டில் தலைவராக தா.லோகநா தன், செயலாளராக இரா.கார்த்தி, பொருளாளராக த. முருகானந்தம் உள்ளிட்ட நிர் வாகிகள், செயற்குழு உறுப் பினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். நிறைவாக மாவட் டத் துணைச்செயலாளர் எழுத்தாளர் இ.கலைக்கோ வன் நிறைவுரையாற்றினார்.

அவிநாசி: பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் இரவு வரை காத்திருப்பு

அவிநாசி, ஜூன் 2- அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்த பொதுமக்கள் இரவு வரை காத்திருக்க வைக்கப் பட்டதால் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். அவிநாசி சார் பதிவாளர் அலுவலகத்தில் நாள்தோ றும் 100க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடைபெற்று வருகி றது. திருப்பூர் மாவட்டத்திலேயே அதிக பத்திரப்பதிவு நடை பெறுவது அவிநாசியில் மட்டுமே. இந்நிலையில், வைகாசி மாத முகூர்த்த நாளான புதனன்று காலை முதலே, ஏராளமா னோர் பத்திரப்பதிவிற்காக வந்திருந்தனர். இதில் இரவு 8 மணியாகியும், பத்திரப்பதிவு செய்யாததால், 20க்கும்  மேற்பட்டோர் அலுவலகம் முன்பு காத்திருக்க நேரிட் டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காலை முதலே டோக்கன் அடிப்படையில் நீண்ட நேரமாக காத்திருந் தோம். இரவு நேரமாகியும் பத்திரப்பதிவு செய்யப்படாத தால் அலுவலக வளாகத்தில் கொசுக்கடியிலேயே அமர்ந்தி ருந்தோம். போதுமான கழிப்பட வசதி, குடிநீர் வசதி கூட இல்லை. எனவே, உடனுக்குடன் பத்திரப்பதிவு நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். இதுகுறித்து சார் பதிவாளர்களிடம் கேட்ட போது, இணையதள கோளாறு கார ணமாக தான் இந்த தாமதம் ஏற்பட்டது என்றார்.

இன்று மின்தடை பகுதிகள்

அவிநாசி, ஜூன் 2- அவினாசி மின்வாரிய கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள்  உள்ள தால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஜூன் 3 மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோ கம் இருக்காது என மின் வாரியத்தினர் அறிவித்துள்ளனர். மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்: தண்டுக்காரன்பாளையம், போத்தம்பாளையம், வாளியூர், புலிப்பார்,கரடி கோயில், சாலைபாளையம், குமாரபாளை யம், ராமியம்பாளையம், கருக்கங்காட்டு புதூர் , நடுவச் சேரி, சிலுவைபுரம், ஏவிஎஸ் மகாலட்சுமி நகர், வடுகனூர், அன்னலட்சுமி ரைஸ் மில், வலைய பாளையம், அம்மன் நகர், ஆர்டிஓ அலுவலகம், லட்சுமி திரையரங்கம் சாலை, சிறு பூலுவபட்டி, ஏபீ நகர், ஈபீ காலணி, கமிஷ்னர் அலுவலக பகுதி, அத்திமரத்தோட்டம், சத்யா நகர், வெங்கமேடு, ஆத் துப்பாளையம், அண்ணா நகர், கங்கா நகர், போயம்பாளையம், குருவாயூரப்பன் நகர், அய்யப்பன் நகர், வெங்கமேடு, மும்மூர்த்தி நகர், அம்மன் நகர், கேசி பாளையம், வள்ளிபுரம்,புதிய வள்ளிபுரம், அணைபதி, ஓட்டவாங்குளம், பசுமை நகர், பசூர்,கம்மாள தொட்டிபாளையம், பாசிக்குட்டை, தொப்பம்பட்டியனூர், பூசாரிப்பாளையம், கரியாக்கவுண்டனூர், பட்டக்காரன்பு தூர், கரைபாளையம் புதூர், இடையர்பாளையம், செல்லனூர், ராம் நகர், பூலுவபாளையம், ஒட்டர் பாளையம், ஆயிக்கானூர், லக்கியபாளையம், விக்னேஷ் யார்ன் மின் பாதை பகுதிகளில் மின்தடை இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது

ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

அவிநாசி, ஜூன் 2- பெருமாநல்லூர் அருகே தடுப்புச்சுவர் மீது வேன் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன், பெண் ஆகியோர் உயிரி ழந்த வழக்கில், வேன் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கபட்டது. சேலத்தை சேர்ந்த குமார் என்பவரது மகன் அசோக் (30). இவரும் இவரது உறவினர்கள் பிரேமா (50) தர்மேஷ் (4) ஆகியோர் ஒரு வேனில் கடந்த 22-2-2017 அன்று குருவாயூர் கோவிலுக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் திரும்பிக்கொண்டி ருந்தனர். அதிகாலை 2 மணியளவில் அவினாசியை அடுத்த பெருமாநல்லூர் அருகே வந்தபோது சாலையின் மையத்தி லிருந்த தடுப்பில் வேன் மோதியது. இதில் பலத்த காய மடைந்த பிரேமா மற்றும் தர்மேஷ் ஆகிய இருவரும் உயிரி ழந்தனர். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் தொடர்ந்த வழக்கு விசாரணை அவிநாசி குற்ற வியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் முடிவில் அதிவேகமாகவும், கவனகுறைவாகவும் வேனை ஓட்டி  விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பு செய்ததாக அசோக் குக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபரா தமும் விதித்து நீதிபதி கே.எஸ்.சபீனா தீர்ப்பு வழங்கி னார்.

50 ஊராட்சிகளில் ஜூன் 7இல் சிறப்பு முகாம்

திருப்பூர், ஜூன் 2 - கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடர் பான சிறப்பு முகாம் இம்மாதம் 7-ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் 50 ஊராட்சிகளில் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் கூறியுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 2021-22  ஆம் ஆண்டில் வேளாண்மை தொடர்பு டைய அரசுத் துறைகளை ஒருங்கி ணைத்து, விவசாயிகளை மேம்படுத்தும் வகையில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 50 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப் பட்டு வருகிறது. அனைத்து துறைகளுடன் இணைந்து இத்திட்டம் தொடர்பான சிறப்பு முகாம் இம்மாதம் 7-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.   அவிநாசியில் ஆலத்தூர், சேவூர், நம்பி யாம்பாளையம், பழங்கரை, பாப்பான் குளம், புதுப்பாளையம், செம்பியநல்லூர் ஊராட்சிகள், தாராபுரத்தில் பொன்னாபுரம், முண்டுவேலம்பட்டி, தொப்பம்பட்டி, குடி மங்கலத்தில் அணிக்கடவு, குடிமங்கலம், வாகத்தொழுவு, காங்கேயத்தில் நத்தக்கா டையூர், பழையகோட்டை, பாப்பினி, பரஞ் சேர்வழி, பொதியம்பாளையம் ஊராட்சி கள், குண்டடத்தில் எல்லம்பாளையம்பு தூர், நந்தவனம்பாளையம், பெருமாள்பா ளையம், சடையபாளையம், சங்கரண்டாம் பாளையம், சூரியநல்லூர், வடசின்னேரி பாளையத்தில் முகாம் நடத்தப்பட உள் ளது. மடத்துக்குளத்தில் துங்காவி, மூலனூ ரில் கிழாங்குண்டல், கொமரபாளையம், பொன்னிவாடி, பல்லடத்தில் கணபதிபா ளையம், கரைப்புதூர், வடுகபாளையம் புதூர், பொங்கலுரில் கண்டியன்கோவில், தெ.அவினாசிபாளையம், தொங்குட்டிபா ளையம், உகாயனூர் ஊராட்சிகள், திருப்பூ ரில் முதலிபாளையம், வள்ளிபுரம், உடும லையில் ஆண்டிய கவுண்டனூர், ஜல்லிப் பட்டி, கல்லாபுரத்தில் முகாம் நடத்தப்பட உள்ளது. ஊத்துக்குளியில், செங்கப்பள்ளி, சின் னேகவுண்டன்வலசு, கமலக்குட்டை, கவுண் டம்பாளையம், நடுப்பட்டி, சுண்டக்காம்பா ளையம், விருமாண்டம்பாளையம் ஊராட் சிகள் வெள்ளகோவிலில் பச்சாபாளையம், வேலம்பாளையம் ஊராட்சிகளில் முகாம் நடத்தப்பட உள்ளது.  இதில் பட்டா மாறுதல், வண்டல் மண்  எடுக்க விண்ணப்பம் பெறுதல், பயிர்க்கடன்  வழங்குதல், பயிர் காப்பீடு திட்ட விழிப் புணர்வு, விவசாய கடன் அட்டை பெற விண்ணப்பம் பெறுதல் குறித்த இனங்களுக் கான முகாம் நடத்தப்படவுள்ளது. விவசாயி கள் முகாமில் பங்கேற்று பயன்பெற  ஆட்சி யர் வினீத் கேட்டுக்கொண்டுள்ளார்.

நூல் விலை

திருப்பூர், ஜூன் 2- பின்னலாடை தொழி லின் மூலப்பொருளான நூல் விலையில் இந்த மாதம் மாற்றமில்லை. கடந்த மாத விலையே தொடர்கி றது. நூல் விலையை கிலோ வுக்கு ரூ.70 குறைக்க வேண்டும் என்று பின்ன லாடை உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் ரூ.30-ம், மே மாதம் ரூ.40-ம் என ஒரே அடியாக விலை அதிக ரித்தது. இது பின்னலாடை உற்பத்தியாளர்களை பெரி தும் பாதித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 2 ஆயிரத்து 249 கன அடியாக அதிகரிப்பு

சேலம், ஜூன் 2- மேட்டூர் அணையின் நீர்வத்து 2 ஆயிரத்து 249 கன அடி யாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள் ளது. புதனன்று வினாடிக்கு 2 ஆயிரத்து 6 கன அடியாக இருந்த நீர்வரத்து, வியாழனன்று மீண்டும் அதிகரித்து விநா டிக்கு 2 ஆயிரத்து 249 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரியில் குறுவை சாகுபடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடு தல் தண்ணீர் திறந்து விடப்படுவதால், அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. செவ்வாயன்று 116.12 அடியாக இருந்த மேட்டூர் அணை  நீர்மட்டம், வியாழனன்று மேலும் சரிந்து 115.66 அடியான து. இனி வரும் நாட்களில் நீர்வரத்து மேலும் அதிகரித் தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்புள் ளது.

பதிவுத்துறை அதிகாரிகள் இடமாற்றம்

சேலம், ஜூன் 2- சேலம் மண்டலத்தில் பதிவுத்துறைச்  சேர்ந்த 25 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு பதிவு துறையை சேர்ந்த சார்பதிவாளர்கள் 25 பேர் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில்  மண்டல இணைப்பதிவாளர் பாலமுரு கன் ஆத்தூருக்கு மாற்றப்பட்டார். அவ ரது பணியிடத்துக்கு சேலம் சரக துணைப் பதிவாளர் ஷோபன்ராஜ்  நியமிக்கப்பட் டுள்ளார். இதேபோல் பெத்தநாயக் கன்பாளையம் பகுதி அதிகாரி அமிர்த லிங்கம் வீரபாண்டிக்கும், கூட்டுறவு அச் சகம் அதிகாரி மூகாம்பிகா, வீட்டு வசதி பிரிவுக்கும், நாச்சியப்பா மேலாண் நிலைய அதிகாரி கமலக்கண்ணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்துக்கும் என  சேலம் மண்டலத்தில் 25 அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - அபராதம்

கோவை, ஜூன் 2- தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள், நிறுவனங் களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை யடுத்து கோவை மாநகராட்சியின் சுகாதாரத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு  பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும், சம்பந் தப்பட்ட கடைகள் மீதும் அதன் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக  சிங்காநல்லூர், நாரயணாசாமி லே-அவுட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அங்கு செயல் பட்டு வந்த சாலையோர வியாபார வண்டியில் 2 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் கள் இருப்பதைக் கண்டறிந்து பறிமுதல் செய்த னர். மேலும், உரிமையாளர்களுக்கு ரூ.500 அப ராதம் விதித்தனர்.  அதேபோல, இருகூர்‌ பகுதியில் கடையிலி ருந்த 2 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்‌ பறி முதல் ‌செய்யப்பட்டு, ரூ.500 அபராதம்‌ விதிக்கப் பட்டது.

உற்பத்தி குறைவு: வாழைத்தார்கள் விலை உயர்வு

நாமக்கல், ஜூன் 2- பரமத்தி வேலூர் பகுதிகளில் உற்பத்தி குறைவால் வாழைத்தார்கள் விலை உயர்ந் துள்ளது. நாமக்கல் மாவட்டம். பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம், கொத்தமங்க லம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, சிறுநல்லிக்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது விவ சாய நிலத்தில் பூவன் வாழை, பச்சநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள் ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிர் செய்துள்ளனர்.  இந்த வாழைத் தார்களை விவசாயி கள் உள்ளுர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல் பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர். வாழைத்தார்களை வாங்கிச் செல் வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து வியாபாரிகள் இங்கு வந்து  தங்களுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு  வாங்கி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா,  கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக் கும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில், கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ரூ.400-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் ரூ.300-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300-க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.250-க்கும், மொந்தன் வாழைத்தார் 300-க்கும் ஏலத்தில் எடுத்துச் சென்றனர். இந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன் றுக்கு ரூ.500க்கும், கற்பூரவல்லி வாழைத் தார் ரூ.350க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.350க்கும், பச்சநாடன் வாழைத்தார் ரூ.300க்கும், மொந்தன் வாழைத்தார் ரூ.400க்கும் ஏலத்தில் எடுத்துச்சென்றனர். வாழைத்தார் உற்பத்தி குறைவால் வாழைத் தார் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.