districts

img

விலை குறைப்பால் பால் விற்பனை அதிகரிப்பு - அமைச்சர் நாசர் தகவல்

கோவை, ஜூன் 19- விலை குறைப்பால் பால் விற்பனை பெருமளவு அதி கரித்துள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி, மதுக்கரை ஆகிய  இடங்களில் உள்ள பிரதம பால் உற்பத்தியாளர்கள் கூட்டு றவு சங்கங்கள் மற்றும் பச்சாபாளையத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் ஆகிய இடங் களில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், ஆர்.எஸ்.புரத்தில் உயர் தொழிற்நுட்ப பாலகத்தை திறந்து வைத்தார். இத னைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நாசர் கூறு கையில், பால் நுகர்வோர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு பால்  விற்பனை விலை ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 59 ஆயிரம் லிட்டர் பால் விற்ப னையாக இருந்தது. தற்போது 2 லட்சம் லிட்டராக உயர்ந் துள்ளது. இதனால் 4 லட்சம் நுகர்வோர்கள் பயனடைந் துள்ளனர். கடந்த ஆண்டு 26 லட்சமாக இருந்த பால் விற் பனை, விலை குறைவால் தற்போது 29 லட்சமாக உயர்ந்துள் ளது. 152 பால் உபபொருட்கள் விற்பனையும் உயர்ந்துள் ளது, என்றார். முன்னதாக, இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், பால்வளத்துறை மேலாண் இயக்குநர் கே.சுப்பை யன், மாநகராட்சி ஆணையாளர் எம்.பிரதாப், மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப் பினர் சி.ராமச்சந்திரன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.