districts

img

மருதமலையில் மருத்துவ மையம் துவக்கம்

கோவை, டிச.31- கோவை மருதமலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற் காக மருத்துவ மையத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட் டின் கீழ் 30 ஆயிரத்து 627 கோவில்கள் உள்ளன. இந் நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக பிரபலமான 10 கோவில்களில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மருத்துவ மையத்தை வெள்ளியன்று முதல் வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன்தொடர்ச்சியாக கோவை மாவட்டத் தில் அமைந்துள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மருத்துவ மையத்தை முதல் வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயி லாக திறந்துவைத்தார். இதையொட்டி கோவை யில் நடைபெற்ற விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து  மருத்துவ மையத்தை பார்வையிட்டு அங்கு  பணியாற்ற உள்ள மருத்துவர்கள், செவிலியர் கள் மற்றும் மருத்துவ பணியாளர்களால் அளிக் கப்படும் சிகிச்சை குறித்தும் மேற்கொள்ளப் பட உள்ள பணிகள் குறித்தும், ஆய்வு மேற் கொண்டனர். இந்த மருத்துவ மையத்தில் இரண்டு மருத் துவர்கள், இரண்டு செவிலியர்கள், இரண்டு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் பணி யாற்ற உள்ளனர். இவர்கள் அனைவரும் சுழற்சி முறையில் பணியாற்ற உள்ளனர். இந்த மருத்துவ மையத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் கள் மற்றும் அடிப்படை மருத்துவ உபகரணங் கள் அனைத்தும் போதுமான அளவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.