திருப்பூர், ஏப்.19- பிஏபி நீரினை பயன்படுத்துவோர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பு விழா செவ்வாயன்று பல்லடம் பி.எம்.ஆர். சுப்புலட்சுமி திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இதில் சாமளாபுரம் கிராம நீரினை பயன் படுத்துவோர் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாவட்ட நிர்வாகி வை.பழனிசாமி தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரோடு ஆட்சிமன்ற குழுவிற்கு தேர்வு செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியினரும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இவ்விழா வில், பதவி ஏற்றுக் கொண்டவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரி வித்தார். இந்நிகழ்ச்சியில், சாமளாபுரம் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தின் முன் னாள் தலைவர் சோமசுந்தரம், ஆட்சிமன்ற குழு உறுப்பினர் ஏ.ஈ. சுப்பிரமணியம் மற் றும் கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம், ஒன்றிய குழு உறுப்பினர் மோகன், இடுவாய் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கருப்ப சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.