திருப்பூர், பிப்.16- திருப்பூர் தெற்கு வட்டம், அலகு மலை ஜல்லிக்கட்டு போட்டியை, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஞாயி றன்று துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், தெற்கு வட்டம், தொங்குட்டிபாளையம் கிராமத்தில் அலகுமலை ஜல்லிக்கட்டு போட்டியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஞாயி றன்று துவக்கி வைத்தார். இப்போட்டி யில் ஏறத்தாழ 800 காளைகள் மற்றும் 600 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்யப் பட்டு, உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டு தல் மற்றும் நெறிமுறைகளுடனும் காவல் துறை பாதுகாப்புடனும், மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புட னும் நடைபெற்றது. முன்னதாக, அமைச்சர் சாமிநாதன் தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள், வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மேயர் ந.தினேஷ்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஷ் அசோக், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், திருப்பூர் மாநக ராட்சி 4 ஆம் மண்டலத் தலைவர் இல. பத்மநாபன், வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம், கால்நடை பராம ரிப்புத்துறை மண்டல இணை இயக்கு நர் பிரகாசம், அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்க கௌரவத் தலை வர் பாலுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனிடையே, சிவ கங்கை, மதுரை உள்ளிட்ட பகுதிகளிலி ருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை போட்டியில் அனுமதிக்க வேண்டும், என மாட்டின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், டோக்கன் வழங்கப்பட்ட காளைகளை கூட வாடிவாசலுக்குள் அனுமதிக்க வில்லை என குற்றஞ்சாட்டினர். இத னால் பரபரப்பு ஏற்பட்டது.