இன்றைய காலகட்டத்தில் போக்கு வரத்து அதிகரிப்பால் சாலை விபத்துக் கள் அதிகரித்திருந்தாலும்; பெரும்பா லான சாலை விபத்துக்கள் மனித தவறு களால் நடைபெறக் கூடியவையாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. போக்குவரத்து விதிகளை கடைபிடிக் காதது, அவசரமாக அசுரவேகத்தில் வாகனத்தை இயக்குவது, வாகனங்க ளில் சாகசம் காட்டுவது போன்ற மனி தத்தவறுகள் அதிகரித்துக் கொண்டுள் ளன. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் செங்கப்பள்ளி-பல்லகவுண் டன்பாளையம் இடையே கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வியாழனன்று காலை 8.30 மணி அள வில் திருப்பூர் புதிய பேருந்து நிலையத் திலிருந்து ஈரோடு சென்று கொண்டி ருந்த தனியார் பேருந்து அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி அதிவே கமாக சென்ற காரணத்தால் கட்டுப் பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி யது. இந்த விபத்தில் கல்லூரி மாண வர்கள் இருவர் பரிதாபமாக உயிரிழந் துள்ளனர். மேலும் சுமார் 40 பேர் படுகா யத்துடன் ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ள னர். இதில் பெரும்பாலானோர் கல் லூரி மாணவ, மாணவியர்கள் என்பது தாங்க முடியாத சோகத்தை ஏற்ப டுத்தி உள்ளது.
இன்றைக்கு பொதுவாக சில அரசு பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்கள் வழித்தடத்தில் பேருந்துகளை இயக் காததும், பல பேருந்து நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதும், தனியார் பேருந் துகள் பயணிகளை நிரப்புவதற்கு, வெகுமதிகள் வாங்கிக் கொண்டு ஒத்து ழைப்பதும் தமிழ்நாட்டில் தொடர்கதை யாக உள்ளது. இந்த கொடூர விபத்து ஏற்படுவதற்கு, ஒருவகையில் மேற்கூ றிய அலட்சியங்களும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறைக்க முடி யாது. தமிழ்நாட்டில் கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலை ஒரு பிரதான மான சாலையாகும். நாளுக்கு நாள் இந்த நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிக ரித்துக் கொண்டே வருகிறது. புதிய தொழிற்சாலைகள் அதைத் தொடர்ந்து புதிய குடியிருப்புகள் என இந்த நெடுஞ் சாலை அமைந்திருக்கும் சிற்றூர்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. அப்படி வளர்ச்சி கண்டுவ ரும் செங்கப்பள்ளி, பல்லகவுண்டன் பாளையம் ஆகிய பேருந்து நிறுத்தங்க ளில் அதிகளவிலான மாணவ மாணவி யர்களும், அன்றாடம் வேலைக்கு சொல்லக்கூடிய தொழிலாளர்களும் பெண்களும் அதிக அளவில் பேருந்து களில் பயணிக்கின்றனர். தொடர்ச்சியாக, திருப்பூர் - ஈரோடு மற்றும் கோவை - ஈரோடு செல்லக்கூ டிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வழித்தட நிறுத்தங்களான செங்கப் பள்ளி மற்றும் பல்லகவுண்டன்பாளை யம் ஆகிய பேருந்து நிறுத்தங்களில் நிற் காமல் நேரடியாக நெடுஞ்சாலை வழி யாக சொல்வதும், திருப்பூர், கோவை, ஈரோடு பேருந்து நிலையங்களில் இப்ப குதிகளைச் சேர்ந்த பயணிகளை ஏற்ற மறுப்பதும் அப்பகுதிகளை சார்ந்த பய ணிகளுக்கு தொடர்ந்து மிகுந்த சிர மத்தை ஏற்படுத்தி வருகிறது. சில ஆண் டுகளுக்கு முன்பாக உயர் நீதிமன்றம் வரை சென்று செங்கப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துக ளும் நின்று செல்ல வேண்டும் என உத்த ரவும் பெறப்பட்டுள்ளது. ஆனால் காலப்போக்கில் அந்த உத்தரவுகள் எல்லாம் காணாமல் போய்விட்டன.
குறிப்பாக, காலை பள்ளி கல்லூ ரிக்கு செல்லும் நேரமும், மாலை பள்ளி கல்லூரிகளிலிருந்து வீடு திரும்பும் நேரமும் ஓரிரண்டு பேருந்துகள் மட்டும் இந்த நிறுத்தங்களில் நின்று செல்வ தால், அவற்றில் கூட்டம் அதிகமிருந்தா லும் பெருமளவிலான பயணிகள், அதில் ஏறி தொங்கிக் கொண்டாவது பயணிக்க வேண்டும் என்ற கட்டாயத் திற்கு தள்ளப்படுகின்றனர். இந்த குறிப்பிட்ட விபத்து சம்பவம் நிகழ்ந்தபோது, பேருந்தில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை 100க்கு மேல் இருக்கக்கூடும். பேருந்தில் இருக்கைகள் எவ்வளவு இருக்குமோ அந்த அளவு பயணிகள் பேருந்து படி யில் பயணம் செய்து சென்றுள்ளனர். பேருந்து ஓட்டுனரும் அதிவேகமாக பேருந்தை ஓட்டியுள்ளார். இதே சாலை யில் பல முறை பேருந்துகள் கவிழ்ந்து உயிரிழப்பு விபத்துகள் நடைபெற்றுள் ளன. விலைமதிப்பில்லா உயிர்கள் அதுவும், இளைய வயதினர் பலர் உயிரிழந்துள்ளனர். மண்டல போக்குவரத்து ஆணை யர், வட்டாரப் போக்குவரத்து அலு வலர்கள் தான் வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுவதையும், பேருந்துகளில் பயணிகள் எண் ணிக்கை அனுமதிக்கப்பட்ட அளவில் இருப்பதையும் கண்காணித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மண்டல, வட்டார போக்குவரத்து ஆணையர்கள், அலுவலர்கள் மற் றும் ஆய்வாளர்கள் இதையெல்லாம் கண்காணிப்பதில்லை. நடவடிக்கை எடுப்பதில்லை. தமிழகத்தில் அதிக அளவில் கையூட்டுப் பெறும் முதன் மைத் துறைகளில் ஒன்றாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. எனவே இத்தகைய உயிரிழப் புகளுக்கு அவர்களும் குற்றவாளிகள் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே, தனியார் பேருந்துகளில் அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றுவதையும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்திலும் படிக்கட்டு கதவுகள் கட்டாயமாக பொருத்தி, பயணம் செய்யும்போது அதை மூடி இருப்பதை உறுதி செய்யவும், அனைத்து பேருந்துகளிலும் வேக கட்டுப்பாட்டுக் கருவி பொருத்தித் தொடர்ச்சியாக அதை கண்காணிப் பது, வழித்தட உரிமம் பெற்ற அனைத்து பேருந்துகளும் உரிய நிறுத் தங்களில் நின்று செல்வதை போக்குவ ரத்து கழகமும், திருப்பூர் மாவட்ட நிர் வாகமும், வட்டார போக்குவரத்து அலு வலரும் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்க வேண்டும். அரசு மெத் தனப் போக்கு தொடரும்பட்சத்தில் மக்கள் நல அமைப்புகள் மக்களைத் திரட்டி போராட்டத்திற்கு செல்லத் தயா ராக உள்ளனர்.