districts

img

சத்தியமங்கலத்தில் சென்ட் தொழிற்சாலை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

ஈரோடு, ஜூலை 23- சத்தியமங்கலத்தில் சென்ட் தொழிற் சாலை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு  விவசாயிகள் சங்க மாநாடு வலியுறுத்தியுள் ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சத்தியமங்கலம் தாலுக்கா 16 ஆவது மாநாடு  பி.ஆர். நினைவகத்தில் நடைபெற்றது. பி. கணேஷ் தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கி வைத்து பி.சடையப்பன் உரையாற்றி னார். மாநாட்டில் மூத்த தோழர் க.இரா.திருத் தணிகாசலம், சிபிஎம் செயலாளர் கே.எம்.விஜயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்தி உரை யாற்றினர்.  இதில், விவசாய விளை நிலங்களுக்குள் வன விலங்குகள் வராமல் தடுத்திட வேண் டும். பூ விவசாயிகளுக்கு சீரான விலை கிடைக்க சத்திய மங்கலத்தில் செண்ட் தொழிற்சாலை அமைக்க வேண்டும். சத்தி- வரதம் பாளையம் பெரியகுளத்திற்கு வரும் நீர் வழி பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.  சங்கத்தின் தலைவராக பி.கணேஷ், செய லாளராக பி.வாசுதேவன், பொருளாளர் மணி  (எ) பழனிசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு  செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து  விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி உரையாற்றினார்.