நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் கல் விப்பணியில் சிறப்பாக செயல்படும் கல்லூரிகளில் ஸ்ரீ ராகவேந்திரா பாலி டெக்னிக் கல்லூரியும் ஒன்று என அக்கல்லூரியின் முனை வர் எஸ்.விஜயகுமார் தெரி வித்தார். இதுகுறித்து கல்லூரி யின் முனைவர் எஸ்.விஜ யகுமார் கூறியதாவது, குமாரபாளையத்தில் 1997 ஆம் ஆண்டு ஸ்ரீ ராகவேந் திரா பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கப்பட்டது. ஒன்றிய மற்றும் மாநில அரசின் 56 க்கும் மேற்பட்ட விருதுகளை இதுவரை வாங்கி உள்ளது. கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு டிஒடிஇ பாடத்திட்டத்துடன், விளையாட்டு, தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தல் போன்றவற்றில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். கல்லூரியில் டிப்ளமோ பாடப் பிரிவுகளில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் துறை, சிவில் துறை, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் துறை, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூ னிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் துறை, ஆகிய ஆறு பாடப்பிரிவுகள் உள்ளது. நவீன தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய வகை மெஷின்கள் உபகரணங்கள் ஒவ்வொரு ஆண்டி லும் நவீனமாக்கப்பட்டு வருகிறது. அரசு வாரிய தேர்வுகளில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் சிறப்பு பரிசு மற்றும் ஊக்க தொகை வழங்கப் பட்டுகிறது. கேரளம், ஆந்திரா போன்று வெளி மாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் தங்கி படிக்க ஏதுவாக கல்லூரி வளாகத்திலேயே விடுதி மற்றும் தரம் உயர்ந்த சமையல்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தமிழ்நாடு, பாண் டிச்சேரி மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பல பதக்கங்களைப் பெற்று சாதனை படைத் துள்ளனர். மேலும் தென்னிந்திய அளவில் நடை பெற்ற மகளிர்க்காண கூடைப்பந்து போட்டியில், இக்கல்லூரி மாணவிகள் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். படித்து முடித்த மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பை களைப் பெற ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி வழி காட்டி வாய்ப்பை ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தார்.