districts

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

4 மாதங்களில் 30 பேர் குண்டர் சட்டத்தில் கைது கோவை மாநகர காவல் ஆணையர் தகவல்

கோவை, மே 13-  கோவை மாநகரில் கடந்த 4 மாதங்களில் 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது  செய்யப்பட்டுள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் தெரிவித் துள்ளார். கோவை மாநகரில் சட்டம் ஒழுங்கை பரா மரிக்க காவல் துறையினர் தீவிர நடவ டிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில், சட்ட விரோதமாக மதுபானம் தயாரிப்பது, விற்பது, கடத்தல், வழிப்பறி, கொள்ளை போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடு படுவோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கோவை மாநகர எல்லை பகுதியில் நடப்பாண்டு ஜனவரி முதல் ஏப் ரல் மாதம் வரையிலான 4 மாதங்களில் பல் வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 30 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்து உள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் கூறுகையில், சட் டம் - ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதங்களில் கோவை மாநகரில் மட்டும்  கொள்ளை, வழிப்பறி, ரேசன் அரிசி கடத் தல் உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை யில் 22 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய் யப்பட்டனர். இந்த ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் அதிகபட்சமாக 14 பேர் மீது குண்டர்  சட்டம் போடப்பட்டுள்ளது, என்றார்.

2 சிறுமிகள் மாயம் - காவல்துறை விசாரணை

கோவை, மே 13- கோவையில் வெவ்வேறு இடங்களில் மாயமான 2 சிறுமிகளை காவல் துறையி னர் தேடி வருகின்றனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட் டியை அடுத்த உச்சபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் துளசிமணி (17), வீட்டின் அருகில் உள்ள கடைக்கு  சென்று வருவதாக கூறிவிட்டு வெளியில் சென்ற துளசிமணி, வெகு நேரமாகியும் வீடு  திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சிய டைந்த அவரது குடும்பத்தினர் அக்கம்  பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். ஆனாலும், அவர் கிடைக்க வில்லை. இதையடுத்து ரமேஷ் கருமத்தம் பட்டி காவல் நிலையத்தில் புகாரளித் தார். அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், துளசிமணியை தேடி வருகின்றனர். இதேபோன்று கருமத்தம்பட்டியை அடுத்த வளையபாளையம் பகுதியில் தங்கி, பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் இந்து தேவி, அவரது மகள் ரூபாகுமாரி (16) ஆகி யோர் வேலை செய்து வந்தனர். இந்நிலை யில், வீட்டிலிருந்து வெளியே சென்ற ரூபா குமாரி வெகுநேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த இந்து தேவி கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ரூபாகுமாரியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இளைஞர்களை அலைக்கழிக்கக்கூடாது: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தல்

உதகை, மே 13- பணியானை பெற்ற இளைஞர்களை அலைக்கழிக்கக் கூடாது என உதகையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில்  அமைச்சர் சி.வி.கணேசன் அறிவுறுத்தியுள் ளார். நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடி யினர் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் தனி யார்த்துறை வேலை வாய்ப்பு முகாம் நடை பெற்றது. இதில் 2,660 ஆண், 3,252 பெண் கள் என மொத்தம் 5,912 வேலை நாடுபவர் களும், 165 வேலை அளிப்பவர்களும், 6 திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் கலந்து கொண்டனர். 67 நபர்கள் திறன் பயிற்சிக்கு தேர்வாகியுள்ளனர். 522 நபர் கள் போட்டி தேர்வு இலவச பயிற்சிக்கு பதிவு  செய்துள்ளனர். 69 நபர்கள் அயல் நாட்டு  வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு பதிவு செய்துள்ளனர்.  இம்முகாமில் 816 ஆண்கள்,  457 பெண்கள் மற்றும் 6 மாற்றுத்திறனாளி என மொத்தம் 1,279 பேருக்கு பணியாணை வழங்கப்பட்டது. இவர்களுக்கு, தமிழக தொழிளாலர் நலன் மற்றும் திறன் மேம் பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேஷன்,  வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் ஆகியோர் பணியாணைகளை வழங்கி னர். இதையடுத்து வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் பேசுகையில், பணிநிய மனம் செய்யப்படும் இளைஞர்கள், ஆரம்ப கட்டத்தில் குறைந்தளவில் ஊதியம் பெற்றா லும், மென்மேலும் அந்நிறுவனம் சார்ந்த பல்வேறு பணிகளை கற்று, அனுபவம் பெற்று முன்னேற வேண்டும். பணி கிடைக் காதவர்கள் மனம் தளராமல், இந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்றதை அனுபவ மாக கற்றுக்கொள்ள வேண்டும். அனுப வத்தை கொண்டு அடுத்த வேலைவாய்ப்பு  முகாம்களில் பங்கேற்று வெற்றி பெற வேண் டும், என்றார்.  இதைத்தொடர்ந்து, தமிழக தொழிலா ளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை  அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு களை உருவாக்க தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.  இம்முகாம்களில் இளைஞர்களை பணிய மர்த்திய நிறுவனங்கள், அவர்களை அலைக் கழிக்காமல் உடனடியாக பணி வழங்க வேண் டும். கடந்த 75 ஆண்டுகளில் தமிழகத்தில் 91  அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மட் டுமே இருந்தன. கடந்த 11 மாதங்களில் 11 புதிய தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உரு வாக்கப்பட்டுள்ளன. ரூ.2,877 கோடியில் 71  தொழிற்பயிற்சி நிறுவனங்களை மேம் படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் அரசுப்பள்ளி மாணவர்கள் நலன் கருதி காலை உணவு திட்டம் அறிவிக்கப் பட்டுள்ளது. நீலகிரி இளைஞர்களின் நலன் கருதி போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங் கள் கூடலூர், கோத்திகிரி ஆகிய பகுதிகளி லும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித், உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு துறை  இயக்கு நர் வீரராகவ ராவ், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் ஜெக தீசன், வேலைவாய்ப்பு கோவை மண்டல இணை இயக்குநர் ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ரயில் மோதி முதியவர் பலி

கோவை, மே 13- பீளமேடு அருகே ரயில் மோதியதில் முதியவர் ஒரு வர் பரிதாபமாக உயிரிழந் தார். கோவை மாவட்டம், வட கோவை - பீளமேடு  ரயில் தண்டவாளம் டெக்ஸ்டூல் அருகே 60 வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் ரயி லில் அடிபட்டு இறந்து கிடப்ப தாக ரயில்வே போலீசா ருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில்வே உதவி ஆய்வாளர் ராமன் தலைமையில் காவல் துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண் டனர். இதைத்தொடர்ந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு கோவை அரசு மருத் துவமனைக்கு பிரேத பரி சோதனைக்காக அனுப்பி  வைத்தனர். இதுகுறித்து  காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, உயிரிழந்தவர்  யார்? எந்த ஊரைச் சேர்ந்த வர்? என விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கட்டிடத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

கோவை, மே 13- ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரதிபா மாலிக் (31). இவர் கோவை பச்சபாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை  செய்து வந்தார். இந்நிலையில், பிரதிபா மாலிக் மதுபோதை யில் வீட்டின் முதல் மாடியின் மதில் சுவர் மீது அமர்ந்து செல் போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைகண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு  பிரதிபா மாலிக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பேரூர் காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

சிறுமிக்கு பாலியல் வண்புணர்வு: வாலிபர் போக்சோவில் கைது 

ஈரோடு, மே 13- ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் பாபுராஜ் என் கிற பாபு (29). கூலி தொழிலாளியான இவர் ஈரோட்டை சேர்ந்த  16 வயது சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் வண்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட  சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு  அதிர்ச்சியடைந்த அவருடைய பெற்றோர் சூரம்பட்டி காவல்  நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார்  பாபுவை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து போலீசார் போக்சோ, கொலை மிரட்டல் விடுத் தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  பாபுவை கைது செய்தனர். இதற்கிடையே கைது செய்யப் பட்ட பாபு மீது ஏற்கனவே ஈரோடு டவுன், மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்கு கள் நிலுவையில் உள்ளன. 2020 ஆம் ஆண்டு குண்டர் சட்டத் தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, தற்போது வெளியே வந்த பாபு போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விவசாயியை அவமானப்படுத்துவதா? வங்கியை முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பூர், மே 13 - பல்லடம் அருகே வங்கி கிளைக்கு கிசான் கடன் அட்டை விண்ணப்பிக்க சென்ற விவசாயியை இழிவாகப் பேசி அவமானப்படுத்திய வங்கி மேலாளரை கண்டித்து, வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பல்லடம் வட்டம், பூமலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி சாமளாபுரம் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் உழவன் (கிசான்) அட்டை பெருவதற்காக கடந்த ஏப்ரல்  27 ஆம் தேதி விண்ணப்பித்திருந்தார். இதன்பின் கூடுதல்  ஆவணங்களை கேட்டு விவசாயி ராமசாமியை, வங்கி மேலா ளர் தொடர்ந்து அலைகழித்து வந்துள்ளார். இதனால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளான ராமசாமி, வங்கி மேலாளரி டம் இதுதொடர்பாக முறையிட்டுள்ளார்.  அப்போது, ஆத்திரமடைந்த வங்கி மேலாளர் இனிமேல்  வங்கிக்குள் வரமாட்டேன் என எழுதிக் கொடுத்தால் மட்டுமே ஆவணங்களை திருப்பித் தருவேன் என்று கூறி,  மிக தரக் குறைவாக ஒருமையில் விவசாயி ராமசாமியை கோபமாக திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.  இதையடுத்து கிளை மேலாளரின் வரம்பு மீறிய இந்த  நடவடிக்கைகளை கண்டித்தும், அவர் மீது வங்கி நிர்வாகம்  துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் வங்கிக் கிளை முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி கள் மற்றும் விவசாயிகள் வெள்ளியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து விவசாயி ராமசாமி யிடம் வங்கி மேலாளர் வருத்தம் தெரிவித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 60 ஆண்டுகள் சிறை

திருப்பூர், மே 13- திருப்பூர் பழவஞ்சிபாளையத்தை சேர்ந்தவர் கதிரேசன் (46). இவர் கடந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றபோது அங்கு இருந்த 3 சிறுமிகளிடம் பாலியல் துன்பு றுத்தலில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமிகளின் பெற்றோர், திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித் தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து கதிரேசனை கைது செய்தனர்.  இந்த வழக்கு திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், நீதிபதி எஸ்.நாகராஜன் தீர்ப்பளித்தார். இதில் 3 சிறுமிகளுக்கு பாலியல் துன்பு றுத்தல் அளித்த கதிரேசனுக்கு 60 ஆண்டு கள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்ப ளித்தார். மேலும் ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தார். இதையடுத்து கதிரேசன் கோவை மத்திய சிறையில் அடைக்கப் பட்டார்.

மின்சாரம் பாய்ந்து 4 மாடுகள் பலி

ளக்கோவில் அருகேயுள்ள மேட்டுப்பா ளையத்தில் விசாலாட்சி என் பவருக்கு சொந்தமான தோட்டத்தில் மேலே சென்று கொண்டிருந்த இரும்பு மின் கம்பி அறுந்து விழுந்துள் ளது. அது தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு இரும்பு வேலி யில் பாய்ந்துள்ளது. இதில் சிக்கி 4 பசுமாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்து விசாலாட்சி அளித்த புகாரின் பேரில் போலீசார் மற்றும் கால் நடைத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

பதிவினை புதுப்பிக்காத தனியார் முதியோர் இல்லங்களுக்கு கெடு

ஈரோடு, மே 13- ஈரோடு மாவட்டத்தில் தனியார் மூலம் நடத்தப்படும் முதியோர் இல்லம் உரிமை யாளர்கள் அனைவரும் தங்கள் இல்லத்தின் பதி வினை புதுப்பிக்க அறிவுறுத் தப்பட்டுள்ளது. முதியோர் இல்லத் தினை பதிவு செய்யாமல் இருப்பவர்கள்  மற்றும் பதி வினை புதுப்பித்துக் கொள் ளதாவர்கள் அனைவரும் தங்களது கருத்துருவுடன் மே மாதம் 30 ஆம் தேதிக் குள் ஈரோடு மாவட்ட ஆட்சிய ரக 6 ஆவது தளத்தில் செயல் பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகு மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி எச்சரித்துள்ளார்.