சேலம், பிப்.3- பனமரத்துப்பட்டி சுற்றுவட்டா ரப் பகுதிகளில் சட்டத்திற்கு புறம் பாக செயல்படும் கல்குவாரிகளை மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் திங்களன்று கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், பனமரத்துப் பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அனுமதியின்றி சட்டத்திற்கு விரோ தமாக செயல்படும் கல்குவாரி களை உடனடியாக அரசு கையகப்ப டுத்த வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் பணி அட்டை உள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். நிலுவையில் உள்ள சம்பளப் பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். சந்தியூர் ஆட்டையாம்பட்டி கிராமத்தில் கடந்த ஐந்து ஆண்டு கால மாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவ ருக்கும் வழங்கிட வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் பனமரத் துப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் முன்பு கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட் டத்திற்கு, சங்கத்தின் துணைச் செய லாளர் கே. குமார் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் ஜி.கண பதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் கே. செவந்தியப்பன், வாலிபர் சங்கச் செயலாளர் என்.கண்ணன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் வைர மணி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.