districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

போலி மருத்துவர் மீது வழக்கு

தருமபுரி, மே 17- தருமபுரி, கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் ஒருவர் எம்பிபிஎஸ் படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக மாவட்ட சுகாதாரத்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி மருத் துவ அலுவலர் அருண் தலைமையிலான மருத்துவ குழுவி னர், கடத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆய்வு  செய்தனர். அப்போது அங்கு பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட மருந்து பாட்டில்கள், மருத்துவ உபகரணங் கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் பன்னீர் என்பவர் மருத்துவம் படிக்காமல் மருத்துவத் துறை அனுமதியின்றி சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து மருத்துவ அலுவலர் அருண் கடத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார்  வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

சட்டவிரோத கள், மது விற்பனை - 12 பேர் மீது வழக்கு 

சூலூர், மே 17- சூலூர் அருகே சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு  வந்த 250 லிட்டர் கள் மற்றும் 200 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து உயிர் பலி ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சிக் குள்ளாக்கியுள்ளது. இதனையடுத்து, தமிழக முழுவதும் சட்ட விரோத மது விற்பனை தடுக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கருமத்தம்பட்டி, சூலூர், சுல்தான் பேட்டை ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். அதில் கரு மத்தம்பட்டி பகுதி குளத்துப்பாளையம், செம்மாண்டம் பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக தென்னந்தோப்பில் கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இந்த விற்பனை யில் ஈடுபட்ட ரமேஷ் மற்றும் வினோத் ஆகிய இருவரை கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்து அவர்களிட மிருந்து 100 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர். இதேபோல்,  சூலூர் பகுதியில் கள் விற்பனையில் ஈடுபட்ட ரங்கசாமி, சுப்பிர மணி மாரப்பன் ஆறுமுகம் ஆகியோர் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட் டது. மேலும், பட்டணம் பகுதியில் உள்ள தனியார் ரெஸ்டா ரன்ட் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்த நதேஷ், சங்கர் குமார் ஆகியோரிடமிருந்து 200 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சுல்தான்பேட்டை பகுதியில் காளி யப்பன், கோபாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், கண்ணப் பன், கிருஷ்ணசாமி ஆகியோரின் தோட்டத்திலிருந்து 50 லிட் டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீதும் வழக்கு  பதிவு செய்த காவல்துறையினர் 200 லிட்டர் கள் மற்றும் 300 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

வால்பாறை சாலையில் யானை கூட்டம் உலா சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

கோவை, மே 17- ஆழியார் - வால்பாறை சாலையில் காட்டு யானைகள் உலா வருவதால், சுற்றுலா பயணி கள் கவனமுடன் செல்ல வேண்டும் என வனத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த வால்பாறை செல்வதற்கு ஆழியார் - வால்பாறை சாலை முக்கிய வழிப்பாதை ஆகும். அடர்ந்த வனப்பகுதி நடுவே இந்த சாலை செல்வதால் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பொழுதை கழிக்க இந்த பாதையை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதே பாதை யில் வனவிலங்குகளும் அடிக்கடி சாலையை கடக்கின்றன. தற்போது கோடை காலம் என்ப தால் உணவு மற்றும் தண்ணீருக்காக வன விலங்குகள் காட்டை விட்டு வெளியே வரு கின்றன. அவ்வாறு வரும் வனவிலங்குகளை சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள், வீடியோ எடுத்தும் வருகின்றனர். சில நேரங்களில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளின் அருகே செல்கின்றனர். கோடை விடுமுறை என்பதாலும் அதிக அள வில் வெப்ப தாக்கத்தினாலும் சுற்றுலா பயணி கள் அதிக அளவில் வால்பாறை சாலையில் பயணிக்கின்றனர். இந்நிலையில், சின்னார்பதி அருகே யானை கூட்டம் சாலையைக் கடந்து ஆழியார் அணையில் தண்ணீர் குடிப்பதற்காக முகா மிட்டுள்ளது. இதனால் இவ்வழிப்பாதையில் வரும் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையாக வாகனங்களை இயக்க வேண்டும் என்றும், வனவிலங்குகளை அச்சுறுத்தக்கூடாது என வும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத் துள்ளனர்.

கள்ளச்சாராயம்: புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியீடு

நாமக்கல், மே 17- நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல் வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாவட்டம் முழுவதும் மது விற்பனை, கள்ளச்சாராயம் விற் பனை, போலி மதுபான விற்பனை போன்ற மதுவிலக்கு சம் பந்தமான குற்றங்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் 88383 52334 என்ற செல்போன் எண்ணின் மூலமாகவோ அல் லது வாட்ஸ்-அப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தெரியப் படுத்தலாம். தகவல் தருபவர்களின் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை

தருமபுரி, மே 17- மொரப்பூர் துணை மின் நிலையத்தில் வியாழனன்று (இன்று) மாதாந்திர பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மொரப் பூர், நைனாகவுண்டம்பட்டி, ராசலம்பட்டி, சென்னம் பட்டி, எலவடை, தம்பிசெட்டி பட்டி, கிட்டனூர், நாச்சி னாம்பட்டி, செட்ரப்பட்டி, கல்லூர், பனமரத்துப்பட்டி, அப்பியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல்  மதியம் 2 மணி வரை மின்சா ரம் நிறுத்தம் செய்யப்படு கிறது. இவ்வாறு தருமபுரி மின்வாரிய செயற்பொறி யாளர் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

அவிநாசியில் சாராயம் காய்ச்சியவர் கைது

அவிநாசி, மே 16- சேவூர் அருகே மங்கரசுவலையபாளையத்தில் சாராயம்  காய்ச்சியவரை போலீஸார் செவ்வாயன்று கைது செய்த னர். சேவூர் காவல் உதவி ஆய்வாளர் சேகர், தலைமை காவ லர் மகாலிங்கம், தனிபிரிவு தலைமை காவலர் செல்வராஜ்,  காவலர்கள் தீப அருண், கோவிந்தன் ஆகியோர் கொண்ட குழுவினர் சேவூர் அருகே மங்கரசுவலையபாளையம் பகுதி யில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதே  பகு தியைச் சேர்ந்த அந்தோணிசாம (61) என்பவர் சாராயம் காய்ச்சிக் கொண்டிருப்பது தெரியவந்தது.  இது குறித்து  சேவூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்தோணிசா மியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 1 லிட்டர்  சாராயம், 10 லிட்டர் ஊரல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட் டது.

தாராபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து  15 பவுன் நகை திருட்டு

தாராபுரம், மே 17 - தாராபுரம் அடுத்து உள்ள மூலனூரில் வீட்டின் பூட்டை  உடைத்து 15 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை  போலீசார் தேடி வருகின்றனர். தாராபுரம் அடுத்த மூலனூர் அருகே உள்ள நத்தப்பாளை யம் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முனியப்பன். இவரது மனைவி சரஸ்வதி இருவரும் கூலி வேலை செய்து  வருகிறார்கள். இவர்களது மகன் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வழக்கம்போல முனியப்பன் மற்றும் அவரது மனைவி இருவரும் விவசாய கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். அவருடைய மகனும் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் வேலைக்கு சென்ற முனியப்பனும் அவரது மனைவியும் வேலை முடித்து  திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டி ருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று  பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 15  பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மூலனூர் காவல்நிலை யத்தில் முனியப்பன் புகார் அளித்தார். புகாரின்பேரில் விசா ரணை மேற்கொண்டு வழக்குபதிவு செய்து திருட்டில் ஈடு பட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

நாளை கருவலூரில் மின் தடை

அவிநாசி, மே 16- கருவலூர் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிக ளில் மாதாந்திரப் பாரமரிப்புப் பணிகள் நடைபெற இருப்ப தால், வெள்ளியன்று மே 19 தேதி காலை 9 மணி முதல் மாலை  4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக் காது என மின்வாரியத்தினர் அறிவித்துள்ளனர். மின் தடை செய்யப்படும் பகுதிகள்: கருவலூர், அரசப்பம் பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டன்பாளை யம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளை யம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளை யம், காரைக்காபாளையம், முறியாண்டாம்பாளையம், குரும் பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லப்பாளை யம்.

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: வாலிபர் கைது

திருப்பூர், மே 17 - திருப்பூரில் பெண்ணுக்கு பாலியல் தொந் தரவு கொடுத்த மது போதை வாலிபரை காவல் துறையினர் கைது செய்தனர்.  திருப்பூர் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருந் துள்ளார். அப்போது வாலிபர் ஒருவர் வீட்டிற் குள் அத்துமீறி நுழைந்திருக்கிறார். மது போதையில் இருந்த அந்த வாலிபர் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதையடுத்து அப்பெண் சத்தமி டவே வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பூண்டி  காவலர்கள் அந்த வாலிபரை பிடித்து விசாரித் தனர். விசாரணையில் அவர் புதுப்பாளையம்  பகுதியை சேர்ந்த ரமேஷ், (21), என்பதும், அவர் தறி குடோனில் வேலை பார்த்து வந்த தும் தெரியவந்தது. காவலர்கள் வழக்குப்ப திவு செய்து ரமேசை கைது செய்து சிறையில்  அடைந்தனர்.

பணி நியமன முகமைகளுக்கு அழைப்பு

திருப்பூர், மே 17 - திருப்பூர் மாவட்டத்தில் செயல்படுத்தப் பட்டு வரும் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்கத் திட் டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்ட பணி களுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தற்காலிக  ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப பணி நியமன  முகமைகள் தேர்வு செய்யப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள் ளார். தகுதியுள்ள பணி நியமன முகமைகள் தபால் மூலமாகவோ நேரடியாகவோ மே 22 ஆம் தேதி மாலை 5 மணிக்குள், வேளாண்மை  இணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட் சியர் அலுவலக வளாகம், அறை எண்: 529,  5-வது தளம், பல்லடம் ரோடு, திருப்பூர் - 641604.  என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ள வேண் டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக லாரிகளில் கனிமக் கடத்தல் நடவடிக்கை கோரி போராட்டம்

திருப்பூர், மே 17 - கனரக லாரிகளில் கனிமவளக் கடத்தல் நடைபெறு வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்  நடைபெற்றது. சுக்கம்பாளையம் ஊர் பொதுமக்கள், விவசாயிகள் பாது காப்பு சங்கத்தினர் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  செவ்வான்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதிக எடையுடன்  கனிமவள கொள்ளையில் ஈடுபடும் வாகனங்கள் மீது நான்கு  நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை காவல்  கண்காணிப்பாளர் உறுதி அளித்திருப்பதாக போராட்டத்தில்  ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

அணை நிலவரம் 

திருமூர்த்தி அணை நீர்மட்டம்:26.83/60அடி நீர்வரத்து:3கன அடி
வெளியேற்றம்:27கன அடி

நாளை தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம்

திருப்பூர், மே 17 – திருப்பூர் மாவட்ட ஆட்சி யரகத்தில் மே 19 வெள்ளி யன்று தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. ஆட்சியரகம் நான்கா வது தளத்தில் அறை எண்  439இல் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறும் இந்த முகா மில் 30க்கும் மேற்பட்ட தனி யார் துறையினர் பங்கேற் கின்றனர். வேலை தேடு வோர் தங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு அட்டை மற்றும் சுய தகவல் படிவத்துடன் கலந்து  கொள்ளலாம். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் முதல் முதுநிலை பட்டதாரி கள் வரை ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் மற்றும்  தையல் பயிற்சி பெற்றவர் கள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

நான்காவது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம்

திருப்பூர், மே 17– திருப்பூர் நான்காவது குடிநீர் திட்ட சோதனை ஓட்டம் புத னன்று மேற்கொள்ளப்பட்டது. மாநகர மேயர், எம்எல்ஏ உள் ளிட்டோர் பூ தூவி வரவேற்றனர். திருப்பூர் மாநகரின் குடிநீர் தேவையைத் தீர்க்கும் வகை யில் மேட்டுப்பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் சோதனை ஓட் டம் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிக ளில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்கு சோதனை ஓட்டமாக மேட்டுப் பாளையத்தில் இருந்து நான்காவது குடிநீர் திட்ட குழாய் கள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருமலை நகர் மேல் நிலை குடிநீர் தொட்டிக்கு கொண்டு வரப்பட்டது. இதை மாநக ராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி  சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் ஆகியோர் பூ தூவி வர வேற்றனர். திட்டம் முழுமை அடையும்பட்சத்தில் திருப்பூர் மாநகர மக்களுக்கு 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப் படும் என்று மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் தெரிவித் தார்.

தங்க பிஸ்கட் திருடிய வழக்கு - ஒருவர் கைது

கோவை, மே 17- கோவை தொழில் அதிபர் வீட்டில் தங்க பிஸ்கட் திருடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.  கோவை ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன்(46). தொழில் அதிபரான இவரது வீட்டு பீரோவில் வைத்திருந்த ரூ.12.40 லட்சம் மதிப்பிலான 150  கிராம் தங்க பிஸ்கட்டுகள் திருடு போனது. இது தொடர்பாக அவர் ஆர்.எஸ்.புரம்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு  செய்தனர்.  பின்னர், தங்க பிஸ்கட்டுகளை திருடிய அவரது வீட்டில் வேலை பார்த்த ஒண்டிப்புதூர் முத்துசாமி செட்டி  தெருவை சேர்ந்த சிவராமன் மனைவி ஜோதி(47) என்பவரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.  அவரிடம் இருந்து 93 கிராம் எடையிலான தங்க பிஸ்கட்டு கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட ஜோதியை நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்த னர். முன்னதாக மீதமுள்ள தங்கத்தை மீட்பது குறித்து போலீ சார் ஜோதியிடம் நடத்திய விசாரணையில், அது அவரது மகன் சவுந்தர்(27) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது.  இதனை யடுத்து, செவ்வாயன்று தலைமறைவாக இருந்த சவுந்தரை பிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 50 கிராம் தங்கம் மீட்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட சவுந்தரை சிறையில் அடைத்தனர்.