குல்காம், ஜூன் 3- காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் உள்ள இலாகி தேஹாதி வங்கியில் மேலாள ராக விஜயகுமார் என்பவர் பணியாற்றி வந்தார். ஜூன் 2 காலை வங்கிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கைத் துப்பாக்கியால் விஜயகுமாரை நோக்கி சுட் டார். இதில் படுகாயமடைந்த விஜயகுமாரை சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியி லேயே அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்த னர். இச்சம்பவம் தொடர் பாக காவல் துறையினர் அப் பகுதியில் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.