கோவை, செப்.29- முற்போக்கு கருத்துகளை ஏற் றுக்கொண்டு, பிற்போக்கு கருத்து களை யார் பேசினாலும் புறந்தள்ள வேண்டும் என சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், சூலூர் கலங்கல் சாலையில் உள்ள தனி யார் திருமண மண்டபத்தில், சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு விழா சனியன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திராவிட தமிழர் இயக்க பேரவை யின் பொதுச்செயலாளர் சுப.வீர பாண்டியன், எழுத்தாளர் செந் தலை கௌதமன் எழுதிய “பேச வைத்த பெரியார்” என்ற நூலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, சுயமரியாதை இயக்கங்களால் சமூகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் குறித்து அவர் பேசுகையில், ‘சுயமரியாதை’ என்ற சொல் தமிழ் நாட்டில் வரலாற்றை உருவாக்கி இருக்கிறது. சுயமரியாதை என்ற சொல் கடந்த ஒரு நூற்றாண்டு கால மாக திரும்பத்திரும்ப பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிமிடம் வரை சுயமரியாதை இயக்கமும், பெரியாரும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். திரும்பத் திரும்ப பெரியார் பேசப்படுகிறார் அல்லது ஏசப்படுகிறார் என்றால், அவர் வாழ்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த மண்ணில் சுயமரியாதை திருமணங்கள் இருக் கின்ற வரை சுயமரியாதை இயக் கங்களும் உயிர்ப்புடன் இருக்கும். புரோகிதர்கள் இல்லாமல், வேத மந்திரங்கள் இல்லாமல் திருமணம் நடத்துவது தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. ‘திராவிடம் தமிழுக்கு எதிரா னது’ என்று கட்டமைக்க முயற்சித் துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், திராவிடம் தான் இந்த மண்ணில் தமிழ் உணர்வை வளர்த் தெடுத்திருக்கிறது. தமிழ் என்பதும், தமிழர் என்பதும் இனவாதமாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறது. தற்போது இந்தியாவிலேயே பெரிய பிரச்சனையாக ‘லட்டு’ உரு வெடுத்திருக்கிறது. ஆந்திராவில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கார்த்தியிடம் லட்டு வேண்டுமா என்று கேட்டதற்கு, அது சிக்கலான விஷயம் வேண் டாம் என்றுதான் பதில் கூறினார். இதற்கு ஆந்திராவின் துணை முதல மைச்சர் பவன் கல்யாண் சனாத னம் குறித்து யாரும் பேசக்கூடாது என்று எதிர் வினையாற்றிய நிலை யில், நடிகர் கார்த்தி லட்டு விவ காரத்தில் வருத்தம் தெரிவித்தார். வணிக ரீதியில் ஆந்திராவிலும், அந்த படம் சென்றடைய வேண்டும் என்பதற்காக நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்திருக்கிறார். அதற்கு தமிழ்நாட்டில் ஒருவர் தெலுங்கனை பார்த்து ஏன் பயப் படுகிறாய் என்று கேட்கிறார். இது தமிழர்களுக்கும், தெலுங்கர்களுக் கும் இடையிலான பிரச்சனை இல்லை. இப்பிரச்சனை மடை மாற்றப்படுகிறது. ஆந்திராவில் பவன் கல்யாண் சனாதனத்தை பற்றி யாரும் பேசக்கூடாது என்று மிரட்டுகிறார். ஆனால், சனாதனத் தைப் பற்றி யாரும் பேசக்கூடாது என்று தமிழகத்தில் பேசிவிட முடி யுமா? முற்போக்கு கருத்துக்களை யார் பேசினாலும் அதை ஏற்றுக் கொண்டு, பிற்போக்கு கருத்துக் களை யார் பேசினாலும் புறந்தள்ள வேண்டும். இதில் பேசுகிறவரின் மொழி தேவையில்லை. சனாத னத்துக்கும், சனாதனம் எதிர்ப்புக்கு மான பிரச்சனையை மடைமாற் றவே இந்த விவகாரம் திரிக்கப்படு கிறது. சங்க இலக்கியத்தில் பெண் கள் படித்திருந்தார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால், இது எப் படி இடையில் விட்டுப் போனது. கடந்த சில நூற்றாண்டுகளாக பெண்கள் படிக்கவில்லை என்ற கேள்வியையும் சேர்த்து கேட்க வேண்டியுள்ளது. யார் பெண் களைப் படிக்க விடாமல் தடுத்தார் கள் என்ற கேள்வி வந்து விடக் கூடாது என்பதற்காக சங்க இலக்கி யத்தில் பெண்கள் படித்ததை உதார ணம் காட்டிக் கொண்டிருக்கிறார் கள். எதிர்கால சந்ததியினர் உண் மையான வரலாற்றை படித்து தெரிந்து கொள்ள வேண்டும். யார் சொல்லி இருந்தாலும் எந்த புத்தகத் தில் எழுதி இருந்தாலும் நானே சொன்னாலும், சுய புத்திக்கு ஒப்பு தல் இல்லாத எதையும் ஏற்காதே என்று சொல்லிக் கொடுத்தவர் பெரி யார். சாதி இருக்கிற வரை சுயமரி யாதை நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும், என்றார்.