கொரோனா பெருந்தொற்றின் பேரிடர் காலத்தில், கொத்துக்கொத்தாய் மனித உயிர்கள் பலியாகிக்கொண்டிருக்கையில், தடுப்பூசி செலுத்தக்கூட விலையை நிர்ணயித்த மோடி அரசு, எதிர்க்கட்சிகளின் ஆவேசமும், உச்சநீதிமன்ற தலையீட்டால் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது. பணம் மரத்திலா காய்க்கிறது என வீர வசனம் பேசிவிட்டு, ஆயிரம் கோடி ரூபாயை அள்ளி இறைத்து புதிய நாடாளுமன்றம் கட்டப்பட்டது. குடியரசு தலைவரைக்கூட திறப்புவிழாவிற்கு அழைக்காமல், செங்கோலை நிறுவி படோபடம் காட்டிய மோடி, செக்யூரிட்டியை நியமிக்காமல் விட்டதின் பலனை நாடு சந்தித்து வருகிறது. நாடாளுமன்ற அவைக்குள் புகுந்து புகை குண்டை வீசிய செயல் உலக நாடுகளுக்கு மத்தியில் தலை குனிவை ஏற்படுத்தியிருப்பது மட்டுமல்ல, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அமைதி காக்கிறார். இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு அனுமதி கொடுத்து அழைத்துச் சென்ற, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீது எந்த விசாரணையும் நடத்தாமல், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய 14 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழுக்கு பொதுமக்கள் அளித்த பேட்டியில்…
எதிர்க்கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் வானுக்கும், பூமிக்கும் குதித்திருப்பார்கள்
வழக்கறிஞர், க.கோபி
14 மக்களைவை உறுப் பினர்களை இடைநீக்கம் செய்தது பாஜகவின் கையா லாகத்தனத்தையும், சர்வாதி காரத்தையும் நிரூபிக்கிறது. மக்கள் பிரதிநிதிகளுக்கு அச் சுறுத்தல் ஏற்படுத்தும் வகை யில் நடந்த சம்பவம் படு மோசமான செயலாகும். இந்த செயலுக்கு பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும். நாடாளு மன்ற அவைக்கே பாதுகாப்பு இல்லையென் றால், நாட்டு மக்களின் பாதுகாப்பை காரிருளுக் குள் தள்ளிவிட்டார் போல் மிகப்பெரிய கேள்வி குறிதான். நாடாளுமன்ற அறைக்குள் புகைக் குப்பி வீச்சு, பாஜக ஆட்சியில் நாட்டின் பாது காப்பு எந்தளவிற்கு படுமோசமாக உள்ளது என் பதற்கு இதைவிட வேறு எந்த சான்றும் கொடுத்து விட முடியாது.
ஆர்.ரவி
நாடாளுமன்ற அவைக் குள் உள்நுழைந்து புகைக் குப்பிகளை வீசியவர்களுக்கு நுழைவு சீட்டினை வழங்கிய பாஜக நாடாளுமன்ற உறுப் பினரை உடனடியாக பதவி நீக்க வேண்டும். எதிர்க்கட்சி யினர் வழங்கியிருந்தால் தேசதுரோகி வழக்கு பதிந்து இருப்பார்கள். எனவே, தேச துரோக வழக்கில் அவரை சட்டத் தின் முன் விசாரணைக்குட்படுத்த வேண்டும். குண்டு வீசியவர்கள் மீதும் முறையாக விசா ரணை நடத்தி, இதில் உள்ள மர்மத்தை விலக்க வேண்டும். அதனை வெளிப்படையாக மக்க ளுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை யாகும். ஏனெனில் பாஜகவின் மிரட்டல் பாணி, நாடாளுமன்ற அவை வரை சென்றுள்ளதாக என்ணுகிறோம்.
அங்கமுத்து
நாடாளுமன்ற அவை யின் பாதுகாப்பு குறித்து விவா தம் நடத்த கோரிய எம்.பி.,க் களை சஸ்பெண்ட் செய்கிறீர் கள் என்றால், இந்த அவைக் குள் வேறு என்ன தான் பேச போகிறீர்கள். இத்தனை நாட் களாக மக்களை சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாக்கி வரும் மோடி அரசு, தற்போது எளிய மக்களுக்காக பேசும் மக்கள் பிரதிநிதிகளை ஒடுக்க நினைக்கிறது இது சரியானது அல்ல!
கிருஷ்ணன்
ஒட்டுமொத்தமாக இந்த செயல்பாடுகளை பார்க்கும் பொழுது நமக்கே ஒரு சந் தேகம் எழுகிறது. இது உண் மையிலே பாதுகாப்பு குறை பாடினால் ஏற்பட்ட சம்பவமா? அல்லது திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட சம்பவமா? இதனை உரிய முறையில் விசாரிக்க வேண் டும். ஆனால், ஒன்றிய மத்திய மோடி அரசு இதைப்பற்றி கவலைப்படாமல் மக்கள் பிரதி நிதிகள் மீது நடவடிக்கை எடுக்கிறது.
பாரதி
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இத்தகைய சம்பவம் நடைபெற்று உள்ளது. முழு அதிகாரம் இருந்தால் எந்த சட் டத்தையும் மாற்றலாம் எதை யும் செய்யலாம் என்ற போக் குடன் ஒன்றிய அரசு செயல் பட்டு வருகிறது. இந்த புகைக்குப்பி வீச்சு சம்பவத் தில் உரிய விசாரணை மேற் கொள்ளாமல் மக்கள் பிரதி நிதிகளான எம்.பி.,க்களை இடைநீக்கம் செய்திருப்பது அதிர்ச்சியளிக்கி றது. வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் மோடி அரசை வீட்டுக்கு அனுப்பாவிட்டால், தொடர்ந்து சர்வாதிகாரப் போக்கு தொடரும் என்பதில் மாற் றுக் கருத்து இல்லை. அதற்கு ‘இந்தியா’ கூட்டணி இன்னும் வலுவாக ஒற்றுமையாக செயல்பட வேண்டும்.
உண்மை விளம்பி
உச்சகட்ட பாதுகாப்பு நிறைந்த மக்கள் பிரதிநிதி கள் ஒன்று கூடி விவாதிக்கும் இடமான நாடாளுமன்றத் தில் வண்ணப்புகைக்குப்பி களை வீசியது என்பது நாட் டின் பாதுகாப்புக்கு சம்பந்தப் பட்ட விஷயமாக கருதுகிறேன். நாடாளு மன்றத்திற்குள் சமூக விரோத செயலை செய்த நபர்களையும், அவர்களை உள்ளே செல்ல அனுமதி கொடுத்த பாஜக எம்.பி., மீதும் கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மக்கள், வரும் காலங்களில் எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்ற அச்சத்துடன் வாழ வேண் டிய சூழல் உருவாகி விடுமோ? என்ற கேள்வி என்னுள் எழுகிறது. ஒன்றிய பாஜக அரசு, மக்கள் பிரதிநிதிகள் உள்ள இடத்திற்கே பாதுகாப்பு அளிக்க தவறியவர்கள் நாட்டு மக்களுக்கு எப் படி பாதுகாப்பானவர்களாக இருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது, என்றார்.
ஜெனிதா
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு கள் தொடர்பாக ஒன் றிய அரசிடம் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி எம்.பி.,கள் சபையிலி ருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது ஜன நாயக விரோத நடவடிக்கை மட்டுமல் லாது ஜனநாயக படுகொலை. அதேசம யம் புகைக்குப்பிகளை வீசிய நபர்களுக்கு நாடாளுமன்றத்திற்குள் நுழைய அனுமதி பெற்று தந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பி னர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
ராஜகோபால்
இந்த சம்பவம் நடைபெற்ற பொழுது மக்களவையில் இல் லாத தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி., அவை நடவடிக்கைக ளுக்கு இடையூறாக உள்ளதாக கூறி இடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அந்த இளைஞர்கள் அவைக்குள் நுழைய உத விய பாஜக எம்.பி., மீது எந்தவித நடவ டிக்கை இல்லாத ஜனநாயகம் கேலிக்கூத் தாக உள்ளது.
சந்தியா
இச்சம்பவம் மூலம் ஒன்றிய பாஜக ஆட்சி யில் குறைபாடுகள் உள்ளது தெளிவாக தெரிய வருகிறது. மேலும், ஜனநாயக முறைப்படி கேள்வி எழுப்பிய எம்.பி.,கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனுமதி சீட்டு வழங் கிய பாஜக எம்.பி., மீது நடவடிக்கை எடுக் காது மிகவும் வேதனைக்குரிய ஒரு விஷய மாக உள்ளது.
அபுதாஹீர், உதகை நகர்மன்ற உறுப்பினர்
நாடாளுமன்ற பாது காப்புக்கு 301 பாதுகா வலர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 176 பேர் மட்டுமே பணி யாற்றி வருகின்றனர். 125 பணியிடங்கள் காலியாக உள்ளது. 176 பேரில் பாதி பேர் பழைய கட்டடத்தில் பணியாற்றி வருகின்றனர். புதிய கட்டடத் தில் பாதுகாப்பு இல்லை. புதிய கட்டடத் தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் குளிர்கால தொடர் ஏன் வைத்திருக்க வேண்டும்? இதற்கு உள்துறை அமைச் சர் பதில் கூற வேண்டும். மேலும், ஜனநா யக முறைப்படி கேள்வி எழுப்பிய 14 மக் களவை உறுப்பினர் சஸ்பெண்ட் செய் தது தவறு. அனுமதி சீட்டு வழங்கிய பாஜக எம்.பி., மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
லிசூர்யா ரியா
இந்திய ஜனநா யகத்தில் நாடாளு மன்ற கட்டடத்தில், பாஜகவைச் சேர்ந்த எம்.பி., ஒருவர் ஒன் றிய அரசை தலை குனிய வைத்துள் ளார். இது கண்டனத்துக்குரிய செயல் ஆகும்.
கண.குறிஞ்சி
புதிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வு மோடி அரசின் பாதுகாப்புக் குறைபாட்டையே காட்டுகிறது. பாஜக வினர் பாதுகாப்பிற்காகப் பல லட்சக்கணக்கான அரசுப் பணத்தைச் செலவழிக்கின்றனர். ஆனால், நாடாளுமன்றத் தின் பாதுகாப்புக் குறித்துச் சிறிதும் அக்கறையின்றி இருந் துள்ளனர். இதுதவிரவும், இந்நிகழ்வு விவாதம் நடத்த வேண்டும் என அமளியில் ஈடுபட்டதாகக் கூறி திமுக பார்த்திபன் நாடாளுமன்றத்தில் இருந்து இடைநீக்கம் செய் யப்பட்டார். ஆனால், அப்பொழுது அவர் அவையிலேயே இல்லை. நாடாளுமன்றத்தில் நான்கு அடுக்குப் பாது காப்பு இருந்தும், இந்தியாவிற்கே தலைகுனிவை ஏற்படுத் தக் கூடிய ஓர் அவலம் நிகழ்ந்துள்ளது. குளறுபடிகளுக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து கடும் தண்டனை வழங் கப்பட வேண்டும். நாடாளுமன்றப் பாதுகாப்பு மேம்படுத்தப் பட வேண்டும்.
மா.அண்ணாதுரை
நாடாளுமன்றத்திற்கு உள்ளே போகும் வரை அனு மதிக்கப்பட்டிருக்கிறார்கள். பாஜக எம்பி பரிந்துரை கடிதம் கொடுத்துள்ளார். அவர்கள் உள்ளே சென்று ஒன்றிய அர சின் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்களின் குரலை பதிவு செய்துள்ளனர். எனினும் இந்த தாக்குதலை சரி என்று சொல்ல முடியாது, கண்டனத்திற்குரியது. ஆனால், கடிதம் கொடுத்து பாஜக எம்பி, அவர்களது காவலர்கள் என்ற நிலையில் அவர்கள் ஆதரவுடன் இது நடைபெற்றதா? என்ற கேள்வியும் எழுகிறது. எல்லா சட்டங்களையும், நடைமுறை களையும் தூக்கி எறிந்து விட்டு ஒற்றைத் தலைமையை நோக்கிய பயணத்தை எதிர்த்து இத்தாக்குதல் நடை பெற்றிருக்கலாம். ஒன்றிய அரசு ஜனநாயகத்தை மதிக்க வேண்டும்.
வினிஷா
பாஜக இதை ஒரு தேர்தல் உத்தியாக பயன்படுத்தியி ருக்கலாம். இதை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கவ னமாகக் கையாள வேண்டும்.
சிவஞானம்
பாஜகவின் ஜனநாயகப் படுகொலை. பாஜகவின் உள் தந்திர வேலை தான் இது. மற்ற பிரச்சனைகளிலிருந்து மக்க ளையும், எதிர்க்கட்சிகளையும் திசை திருப்புவதற்கான ஆர்எஸ்எஸ் வேலை இது. நாதுராம் கோட்சே இஸ்மாயில் என பச்சை குத்திச் செல்ல வேண்டிய அவசியம் என்ன வந் தது?
கி.வெ.பொன்னையன்
ஜனநாயகத்தைப் பறிக்கக்கூடிய செயல் இது. அதற்கு எதிர்வினையாற்றினால் அதையும் பேசக்கூடாது என்பது சரி யல்ல. நடந்த நிகழ்வின் மீது எதிர்க்கட்சிகள் கேட்பது போல் நாட்டு மக்களுக்கு அரசு விளக்கமளிக்காமல் மறுக்கிறது. வேறு தன்மையில் இருந்திருந்தால் எதிர்வினை எப்படி இருந்திருக்கும். நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வெளியேற்றுவது ஜனநாயகத்தை முடக்கும் செயல்.
பரிந்துரை கடிதம் கொடுத்த பாஜக எம்.பி., மீது நடவடிக்கை எடுக்காது ஏன்?
சாய் கண்ணன்
நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்ததை தடுக்க இயலாத பாஜக அரசு, நாட்டின் பாதுகாப்பை வலியுறுத்தி போராடிய எம்.பி.,க்களை சஸ்பெண்ட் செய்திருப்பது முற்றிலும் ஜனநாயகத்திற்கு விரோதமானது. பாஜக எம்.பி.,யின் கடிதம் வாங்கி வந்தவர்கள் பற்றி கேள்வி கேட்டால், பதில் சொல்லாமல் அவைக்கு வராமல் ஓடும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்ற வர்கள், இந்திய ஜனநாயக பதவிகளுக்கு தகுதியே இல்லாதவர்கள். நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த வர்கள் காங்கிரஸோ அல்லது எதிர்க்கட்சிகளை சேர்ந்த வர்களின் கடிதம் வாங்கி வந்திருந்தால், இந்நேரம் சங் பரிவார் பாசிச சக்திகள் பூமிக்கும், வானுக்கும் குதித்து பிரச்சனையை பெரிதாக கிளப்பி இருப்பார்கள். ஆனால், நாட்டின் பாதுகாப்பை கருதி எதிர்க்கட்சிகள் ஜனநாயக முறையில் போராடினால், எம்பிக்களை இடைநீக்கம் செய்வது அராஜகம். இந்த அரசை வன்மையாக கண் டிக்கிறேன்.
ராஜேந்திரன்
நாடாளுமன்றத்தில் வீசிய புகைக்குப்பி ‘இந்தியா’ கூட்டணியை உடைக்க, பாஜக அரசு எடுத்திருக்கும் ஆயு தம் தான். வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும். அப்படி இல்லையென் றால் நாடாளுமன்றத்தில் வீசிய புகை, நாட்டில் எல்லா இடங்களிலும் வீசப்படும் என்பதற்கு ஒரு முன்னோட்டம் தான். இந்த பாஜக பாசிச கும்பல் செய்யும் நாச வேலையை வன்மையாக கண்டிக்கின்றேன்.
ரவிக்குமார்
நாடாளுமன்றம் என்பது மிகவும் சக்தி வாய்ந்த மக் கள் கட்டமைப்பாக திகழ்கிறது. இங்கே பணி செய்து வரு பவர்கள் அனைவருமே மக்களின் அங்கீகாரம் பெற்ற வர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணி செய்து கொண்டு இருக்கும் வேளையில், இம்மாதிரியான அசாம் பாவிதங்கள் நடைபெறுவது ஏற்புடையது அல்ல. ஒட்டு மொத்த உறுப்பினர்கள் பாதுகாப்பு என்பது மிகவும் அவ சியமாகும். இதில் அரசியல் கட்சிகள் பாகுபாடு என்ப தெல்லாம் கிடையாது. நிச்சயமாக ஒன்றிய அரசு இந்த சம்பவத்திற்கு காரணமாக உள்ள அனைவரையும் உடனடியாக கைது செய்து, தீவிர விசாரணை நடத்த வேண்டும். நாடளுமன்றத்தின் மரபு மற்றும் பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமாகும்.
அர.விடுதலை செல்வன்
ஒன்றிய அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண் டித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய் யப்பட்டதை கண்டிக்கிறோம். பார்வையாளர்கள் வரி சையில் அமர்ந்திருந்த அந்த நபர்கள், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாப் சிம்ஹாவின் பரிந்துரையில் அனுமதி சீட்டு பெற்று, நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறிச் செயல்பட்டுள்ள னர். அரசு தார்மீக பொறுப்பேற்று பாதுகாப்பு குறித்தான நடவடிக்கைகளை மக்களுக்கும், அவையின் உறுப் பினர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது அரசின் கட மையாகும். ஆனால், இந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசை கேள்வி எழுப்பிய நாடாளுமன்ற உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்வது ஜனநாயக விரோத மானது. இது ஜனநாயகத்திற்கு புறம்பானது என்பதை ஒன்றிய அரசு உணர வேண்டும். ஒன்றிய அரசு இது போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட் டதை உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை சார்பில் வலியுறுத்துகிறேன்.
தொகுப்பு: சக்திவேல், அருண்,
எழில், அமீன், பிரபாகரன்