districts

img

பிறப்பால் ஒரு நபரோ, சமூகமோ புறக்கணிக்கப்பட்டால் முதல் ஆளாக மார்க்சிஸ்ட் கட்சி அதை எதிர்க்கும்

உடுமலை, மார்ச் 13- சட்டங்களை மதிக்காமல் பிறப் பால் ஒருவரையோ அல்லது சமூ கத்தையோ புறக்கணிக்கும் நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால் அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  முதல் ஆளாக எதிர்க்கும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் க.கனகராஜ் கூறி னார். உடுமலையில் ஆணவப் படு கொலை செய்யப்பட்ட சங்கரின் 7  ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக் கூட்டம் குமரலிங்கத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கர் சமூகநீதி அறக் கட்டளையின் நிர்வாக அறக்காவ லர் கௌசல்யா தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத் தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனக ராஜ் பேசுகையில், சமூகத்தில்  பொது இடங்களில் ஆண்கள்  காலுக்கு செருப்பு போடக்கூடாது,  முழுமையாக உடை அணியக்கூ டாது, துண்டை தலைப்பாகையாக அணியக் கூடாது, மீசை வைக்கக் கூடாது என்றும், சாதியின் பெய ரில் பெண்களின் மீது பல கட்டுப் பாடுகள் இருந்ததை மாற்ற பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள் ளன. மாறி வரும் சமூகத்தில் இன்று சாதி, மதங்களின் பெயரில் தீண் டாமை பல வடிவங்களாக மாறி உள் ளது. அதன் உச்சம்தான் ஆணவப்  படுகொலை செய்வது. இதுபோன்ற மனிதநேயம் இல்லாத செயல்க ளுக்கு நீதிமன்றத்தின் தீர்ப்பால் தீர்வு காண முடியாது. தங்க ளுடைய குடும்ப உறுப்பினர்களி டம் சாதி, மதம் இல்லை என்ற மன நிலையை உருவாக்கினால் மட் டுமே சமூக மாற்றத்தை நடைமுறை படுத்த முடியும். பெண்களை கற்பில் சிறந்த வள், படி தாண்டா பத்தினி போன்ற வாசகங்கள் சொல்வது அவர்களை  பாராட்ட அல்ல, பெண் அடிமைத் தனத்தை மேலும் ஊக்கப்படுத்து வதே ஆகும். தற்பொழுது பெண் கள் ஐடி, காவல் என அனைத்து  துறைகளிலும் பணி புரிகிறார்கள்.  இது அனைத்து சாதி, மதத்தை ச் சார்ந்த பெண்களுக்கும் கிடைத் தால் தான் சமூக மாற்றம் ஏற்படும். இப்படி மாற மறுக்கும் சமூகம் வள ரவே வளராது; அது அழிந்து போகும், என்றார்.

மேலும்,இந்த பொதுக்கூட்டம்  நடத்த காவல்துறை அனுமதி தர வில்லை. அதற்கு காவல்துறை சொன்ன காரணம் பொதுக்கூட்டம் நடந்தால் ஊர் பதட்டம் அடையும் என்கிறார்கள். ஆம் சாதி கூடாது, அடிமைத்தனம் கூடாது என்று பேசி னால் பிரச்சனை வரத்தான் செய் யும். சமூகத்தில் இருக்கும் பிரச்ச னைகளை எதிர்த்து கேள்வி கேட்ப தும், அதற்கு எதிராக பிரச்சாரம்  செய்பவர்களுக்கு ஆதரவாக காவல் துறை இருக்க வேண்டும். ஆனால், எங்களை காவல் துறை மிரட்டுவது என்பது தங்களின் வேலைக்கு எதி ராகவும், சாதி கட்டுப்பாடுகளை  ஆதரிக்கும் நபர்களுக்கு ஆதர வாக இருப்பது வேடிக்கையாக உள்ளது. அரசு சட்டங்களை மதிக்காமல் பிறப்பால் ஒருவரையோ அல்லது  சமூகத்தையோ புறக்கணிக்கும் எவ் வித நடவடிக்கையையும் மார்க் சிஸ்ட் கட்சி முதல் ஆளாக எதிர்க் கும். பட்டியல் இனத்தவர்கள் மற் றும் சிறுபான்மையினர் நலன்களை  பாதுகாக்க பாடுபடுவோம் என்றார். ஒரு கொலையை தனக்கு பெருமை என கருதும் இந்த சமூகத்தை மாற்ற அரசு உடனடியாக சாதிய ஆணவ படுகொலை குற்றங்களுக்கு எதி ராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். அனைத்து முற்போக்கு அமைப்பு களும் இது போன்ற விழிப்புணர்வு பிரச்சாரம் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும், என்றார்.  இந்த பொதுக்கூட்டத்தில் விடு தலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் இரா.விக்ர மன், தமிழ் புலிகள் கட்சியின் தலை வர் நாகை.திருவள்ளுவன், தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் வழக் கறிஞர் தி.சுதா காந்தி, சங்கர் சமூக நீதி அறக்கட்டளையின் கோபி ஆகி யோர் உரையாற்றினர்.