உடுமலை, ஜன.30- உடுமலையில் வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.1லட்சம் மதிப் பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. உடுமலை சீனிவாசா வீதியில் மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்கள் பழுது நீக்கும் கடை உள் ளது. இங்கு சனியன்று இரவு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடுமலை தீயணைப் புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இருப்பினும் தீயில் ரூ.1லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. பிர தான ரோட்டில் கடைகள் மற்றும் மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட் டது.