districts

img

தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் வரலாற்று பங்களிப்பு மகத்தானது: கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்

திருப்பூர், டிச. 9- இந்திய விடுதலைக்கு முன்னும், நாடு விடுதலை அடைந்த பிறகும் தமி ழகத்தின் வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகள் ஆற்றியிருக்கும் வரலாற்றுப் பங்க ளிப்பு மகத்தானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். திருப்பூர் தியாகி பழனிசாமி நிலை யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு சார்பில் 10 நாள்  தொடர் வகுப்பு நடைபெற்றது. வெள்ளி யன்று நிறைவு நாள் வகுப்பிற்கு கட்சி யின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ. முத்துக்கண்ணன் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் இதில் பங்கேற்று, தமிழக வளர்ச்சியில் கம்யூனிஸ்டுகளின் பங்க ளிப்பு என்ற தலைப்பில் உரையாற்றி னார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய நாடு பிரிட்டிசாரிடம் அடி மைப்பட்டுக் கிடந்தபோது முழு விடு தலை வேண்டும் என்று முதன் முதலில் முன்மொழிந்தது கம்யூனிஸ்டுகளே. 1921லேயே சிங்காரவேலர் அரசியல்  சுதந்திரம், நிலமும், இதர தொழில்க ளும் பொதுவுடைமை ஆக்கப்பட வேண் டும் என மகாத்மா காந்திக்கு கடிதம் எழு தினார்.

கம்யூனிஸ்ட் கட்சி தோன்றியவு டன் எண்ணற்ற சதி வழக்குகள், சிறை தண்டனைகள், அடக்குமுறைகள் ஏவி விடப்பட்ட போதும், முழு விடுதலைக் காக குரல் கொடுத்துப் போராடினர். அதன் பிறகே காங்கிரஸ் கட்சி முழு  விடுதலை என்ற முழக்கத்தை தீர்மான மாக நிறைவேற்றியது. பிரிட்டிசாரிடம் இருந்து நாடு விடு தலை அடைந்தபோது இந்தியா, பாகிஸ் தான் என பிரிவினை ஏற்பட்டப் பின்னணி யில் அரசியல் சாசனம் உருவாக்கப் பட்டதால் மையப்படுத்தப்பட்ட அதிகா ரம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப் பட்டது. இல்லாவிட்டால் மாநிலங்களின் அதிகாரம், உரிமை குறித்து விரிவாக கவனம் செலுத்தப்பட்டிருக்கும். நாடு  விடுதலை பெற்று முதல் பொதுத்தேர் தல் நடைபெற்ற போது முந்தைய ஒன்று பட்ட சென்னை மாகாணத்தில் கம்யூ னிஸ்டுகள் 63 இடங்களில் வெற்றி பெற்ற னர். கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக, தேர்தலி லேயே போட்டியிடாத ராஜாஜியை அழைத்து வந்து, மற்ற இரு கட்சிகளை விலைக்கு வாங்கி காங்கிரஸ் ஆட்சி அமைத்தனர்.

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே, மொழி வழி மாகாணம் அமைக்க வேண் டும் என தெளிவாக முன்மொழிந்தது கம்யூனிஸ்ட் கட்சி. நாடு முழுவதும் கம் யூனிஸ்டுகள் நடத்திய போராட்டத்தின் காரணமாகவே 1953இல் மாநிலங்கள் சீரமைப்புக்குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின பரிந்துரைப்படி மொழி வழி மாநிலங்கள் அமைக்கப்பட்டன என்பது வரலாறு. மாநிலங்கள் பிரிக் கப்பட்டபோதும் எந்தெந்த பகுதியை எந் தெந்த மாநிலத்தில் சேர்ப்பது என்று  சர்ச்சை ஏற்பட்டது. அப்போது சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை, அதிக மக்கள் பேசும் மொழிக்குரிய மாநி லங்களுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் தமிழகத்துடன் சேர்ப்பதற்கு போராடியவர்கள் கம்யூ னிஸ்டுகள். இதன் அடிப்படையில்தான் 1956 நவம்பர் 1ஆம் தேதி தமிழ் மக்கள் ஒன்றிணைந்த மாநிலமாக, சென்னை மாகாணம் முதன்முதலில் உருவானது. இந்த மகத்தான சாதனையை செய்தது கம்யூனிஸ்டுகள். அப்போதே, தமிழ் நாடு என்று பெயர் சூட்டக் கோரிக்கை வைத்ததும் கம்யூனிஸ்டு கட்சிதான். மொழி வழி மாநிலம் உருவாக்கு வதில் மட்டுமல்ல, தமிழ் மொழியை பயிற்று மொழி, அலுவல் மொழி, நிர் வாக மொழி, நீதிமன்ற மொழியாக இருக்க வேண்டும் என குரல் கொடுத் தது கம்யூனிஸ்டுகள். இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து ஆரம்பம் முதலே கம்யூனிஸ்டுகள் போராடி உள்ளனர். இந்தி, ஆங்கிலம் என எந்த மொழித் திணிப்பும் கூடாது என்பதே கம்யூ னிஸ்டுகள் நிலைபாடு. ஆனால், இந்தி  மொழித் திணிப்பை எதிர்த்த தமிழகத் தில் இன்று ஆங்கிலம் கோலோச்சும் நிலை உள்ளது. அதேபோல் தமிழகத் தில் நெய்வேலி நிலக்கரி, திருச்சி பெல், உதகை இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ், நீர்மின் திட்டங்கள், எண்ணற்ற தொழிற்சாலைகள் கொண்டு வர கம்யூ னிஸ்டுகளின் வலுவான தலையீடு இருந் தது.

நவீன தாராளமய சூழலில் பொதுத் துறைகளுக்கு ஆபத்து வந்தபோது உறுதிமிக்க போராட்டங்களை கம்யூ னிஸ்டுகள் முன்னெடுத்து வருகின்ற னர். நில உச்ச வரம்புச் சட்டம், குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சட்டம் நிறை வேற வலிமையான போராட்டங்களை நடத்தியது கம்யூனிஸ்ட் கட்சி. சட்ட மன்றத்தில் கம்யூனிஸ்டுகளின் வலியு றுத்தல் காரணமாகவே நியாயவிலைக் கடைகள் உருவாக்கப்பட்டன. இலங் கையில் தமிழ் மக்கள் உரிமைகள் மறுக் கப்பட்டு அடக்குமுறை ஏவிவிடப்பட்ட போது, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிக அதிகாரம் கொண்ட மாநிலங்கள் என்ற அடிப்படையில் தமிழர்கள் பிரச்ச னைக்கு தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியது. தீர்வு காணப்படாத நிலையில், இன்று விவ ரிக்க முடியாத கொடுமையான சூழ் நிலையில் இலங்கை தமிழர்கள் வாழும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் வாச்சாத்தி, சிதம்பரம் பத்மினி, ராஜாக்கண்ணு படுகொலை, மாஞ்சோலை துப்பாக்கிச்சூடு, தூத் துக்குடி துப்பாக்கி சூடு என மனித உரிமை மீறல், காவல் துறை அத்துமீறல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நியாயம் கிடைக்க போராடி பாது காப்பை பெற்றுத் தந்தது. தீண்டாமை, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராகவும், மத மோதல்களுக்கு எதிராகவும், மக்கள் ஒற்றுமை பாதுகாக்கவும் உறுதியாக குரல் கொடுத்தது கம்யூனிஸ்ட் கட்சி.  கம்யூனிஸ்டுகள் போனஸ், பஞ்சப்படி, சம்பள உயர்வுக்கு மட்டும் போராடுவார் கள் என்று தவறாக பிரச்சாரம் செய்யப் படுகிறது. ஆனால் தமிழ் மொழி, தமிழக வரலாறு, பண்பாடு கலாச்சாரம் போன்ற வற்றில் துல்லியமாக ஆய்வு செய்து சரி யான நிலைபாடு எடுத்தவர்கள் கம்யூ னிஸ்டுகளே. நவீன தாராளமய கொள் கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகின்றனர். அரசியல், தத்துவார்த்த ரீதியாக வும், வர்க்கம் மற்றும் சமூக நிலை அடிப் படையிலும் தெளிவான நிலை எடுத்துப் போராடும் கம்யூனிஸ்டுகள் அர்ப்ப ணிப்பு உணர்வுடன் பணியாற்றினர். அளப்பரிய தியாகம் செய்துள்ளனர். தமிழகத்தில் மகத்தான வரலாற்று பங்க ளிப்பை கம்யூனிஸ்டுகள் செய்துள்ள னர். எனவே கம்யூனிஸ்டுகள் நிச்சயம் முன்னேறுவோம், என்றார்.