districts

img

மின்சக்கர நாற்காலி வழங்காமல் அலைகழிப்பு மாற்றுத்திறனாளி மாணவி வேதனை

கோபி, செப். 26 - பள்ளி செல்ல ஏதுவாக மின்சக்கர நாற் காலி வழங்க வேண்டும் என்று மனு அளித்து  இரண்டு ஆண்டுகள் ஆகியும் அலைகழிப்பு செய்வதாகவும், விரைந்து வழங்க வேண்டும்  என மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் மீண்டும் கோரிக்கை மனுவினை அளித்துள் ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள  பொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த வர் ராஜேந்திரன் நாகரத்தினம். இவர் கட்ட டத் தொழிலாளி. இவரது மகள் கார்த்திகா  மாற்றுதிறனாளி. இவர் தொடக்கப்பள்ளிக்கு  தவழ்ந்து சென்று படித்து வந்தார். இந்நிலை யில் காலில் அறுவை சிகிச்சை செய்தால் நடக்க முடியும் என்ற நம்பிக்கையில் அறுவை  சிகிச்சை செய்தார். ஆனால் அது பலன ளிக்க வில்லை. இந்நிலையில், மாணவியின் பள்ளி படிப்பை தொடர நாள் தோறும் 2கிமீ  தூரம் பெற்றோர் உதவியுடன் பள்ளி செல் கிறார். இந்தாண்டு 11 ஆம் வகுப்பிற்கு ஓடத் துறை அரசு பள்ளிக்கு செல்ல வேண்டி யுள்ளது. இதனால் பெற்றோர்கள் தங்களது  வேலைக்கு செல்ல முடியாமல் சிரம  மடைந்து வந்தனர். மின்சக்கர நாற் காலியை வழங்கினால் பயனாக இருக்கும்  என அரசிடம் கோரிக்கை மனு அளித்தி ருந்தார். இதுவரையில் இம்மனுமீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து மின்சக்கர நாற்காலி கோரிக்கையை முன் வைத்து மாவட்ட நிர்வகத்திற்கும், துறை சார்ந்தவர்களுக்கும் பலமுறை மனு அளித் தும் பலனில்லை.  இந்நிலையில், அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலத்திடம் மனு  அளித்தனர். மனுவை பெற்று கொண்ட  அவர் மாணவிக்கு மின்சக்கர நாற்காலி  வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், தொடர்ந்து தமிழக முதல்வர் அறிவுறுத்த லின்படி  மாற்றுதிறனாளி மாணவர்கள் கல்வி  கற்கவும், உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப் புக்கான போட்டிதேர்வு பயிற்சி மையங்க ளில் பயிற்சி அளிப்பது உள்ளிட்டவை எளிதில்  கிடைக்கும் வகையில் தமிழக முதல்வர் பல் வேறு  ஆலோசனைகளை வழங்கியுள்ளார். எனவே, இதுபோன்ற படிப்பை தொடர சிரம மாக உள்ள மாற்று திறனாளி மாணவ, மாணவி யர்களுக்கு அரசின் உதவிகளை உடனுக்கு டன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள பட் டுள்ளதாக தெரிவித்தார்.