நாமக்கல், ஆக.19- குமாரபாளையம் அருகே கட்டப்பட்டு வரும் காவல் துறை குடியிருப்புகளை, காவ லர் குடியிருப்பு வாரிய தலைவர் விஸ்வ நாதன் நேரில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலையம் உருவாகி நூறாண்டுகள் கடந்த நிலையில், பணிபுரிந்து வரும் சுமார் 40 போலீசாருக்கு இதுவரை குடியிருப்புகள் ஏதும் தமிழக அரசு கட்டித் தரப்படாமல் இருந்தது. இந்நிலையில், கடந்த ஐந்து வருடங்களாக குமாரபாளையம் பகுதியில் போலீசாருக்கு குடியிருப்புகள் கட்ட பல் வேறு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அது ஆய்வுக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில் குமாரபாளையம் அருகே உள்ள வளையக் காரனூர் பகுதியில் இடம் தேர்வு செய்யப் பட்டு, அதற்குரிய கட்டுமான பணிகள் நடை பெற்று வந்தது. 4 கோடியே 10 லட்ச ரூபாய் செலவில் இந்த குடியிருப்புகள் தற்பொழுது கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது. இதனையடுத்து கட்டுமான பணிகள் முடிவ டைந்து உள்ளதா? என தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வாரிய தலைவர் விஸ்வநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது அவர், கட்டடத்தின் உறுதித் தன்மை, குடிநீர் குழாய்கள் பொருத்தியது, மின்சார கருவிகள் பொருத்தியது என அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அங்கு காவலர் குடியிருப்பு வளா கப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டார். மேலும், கட்டுமான ஒப்பந்ததாரரிடம் உடனடி யாக குடியிருப்புகளாக முழுவதும் சுற்றுச் சுவர் எழுப்ப அறிவுறுத்தினார். இந்த ஆய் வின்போது, நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன், திருச் செங்கோடு காவல்துறை துணை கண்காணிப் பாளர் இமயவரம்பன் ஆகியோர் உடனிருந்த னர்.