districts

img

மயான பாதை ஆக்கிரமிப்பு: இறந்தவரின் உடலை வைத்து போராட்டம்

தருமபுரி, ஜன.31- ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மயா னத்திற்கு செல்லும் வழிப்பாதையை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி வாலிபர் சங்கத்தின் தலைமையில், அருந்ததிய மக்கள் இறந்தவரின் உடலை வைத்து போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த அண்ணாலம்பட்டியில் அருந் ததியர் மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், இரண்டு ஏக்கர் நிலம் மயானத்திற்காக ஒதுக்கப்பட்டது. இந் நிலையில், மயானத்திற்கு செல்லும் பாதையையும், நிலத்தையும் அரூர் நெடுஞ்சாலைத்துறையில் தனிநபர் ஒருவர் பட்டா செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்நிலையில், அண் ணாலம்பட்டி கிராமத்தை சேர்ந்த 80 வயதான முதியவர் கணபதி என்பவர்  திங்களன்று உயிரிழந்தார். ஏற்க னவே, இறந்த உடல்களை இவ்வழி யாக எடுத்து செல்லும்போது, அந்த  தனிநபர் பாதை விடாமல் தடுத்துள் ளார். இதனால் இறந்த முதியவர் கண பதியின் உடலை மயானத்தின் முன் புள்ள பாதையில் வைத்துவிட்டு, அண் ணாலம்பட்டி கிராம மக்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலை மையில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனையடுத்து, அங்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் புக ழேந்தி கணேஷ், வருவாய்த் துறை யினர் போராட்டக்காரர்களிடம் பேச்சு வார்த்தையில் நடத்தி, உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக, இப்போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தின் பாப்பிரெட்டிப்பட்டி வட்ட தலை வர் கண்ணன், வட்ட செயலாளர் குப் பன், துணைச்செயலாளர் பிரேம் காந்த், துணைத்தலைவர் குறளரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.