பசுமை பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருவாயை பெருக்க வும், வேளாண் காடு வளர்க்கும் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத் திற்கு 3 லட்சம் மரக்கன்றுகள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இத்திட்டத் தில் இலவசமாக மரக்கன்றுகள் விவ சாயிகளுக்கு வழங்கப்பட்டு, விவ சாய நில வரப்புகள், மற்றும் குறைந்த செலவில் விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டு, மரம் சார்ந்த விவ சாயம் ஊக்குவிக்கப்படும். தேக்கு, ஈட்டி, மகோகனி, மருது, வேம்பு, மலை வேம்பு, நாவல், பெருநெல்லி, செம் மரம், புங்கன், வேங்கை, மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு தரமான மரக்கன்றுகள் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிக ளுக்கு நிரந்தர வைப்புத்தொகை கிடைப்பதுடன், மண் வளத்தை அதிகப்படுத்தி, பசுமை பரப்பு மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த இத்திட் டம் பெரிதும் பயன்படுகிறது. ஒரு ஏக்க ருக்கு 80 மரங்கள் வரை வரப்பு ஓரங் களில் நட முடியும். 10 அடிக்கு ஒன்று என்ற விதத்தில் நடலாம். 10 வருடங் களில் ஒரு மரம் ரூ.5 ஆயிரம் என்று மதிப்பு வைத்தால் கூட, ரூ.4 லட்சம் வருவாயாக கிடைக்கும். அனை வரும் வரப்பு ஓரங்களில் மரங்கள் நட்டால் நல்ல வருவாய் கிடைப்பது டன், பசுமை பரப்பும் அதிகரிக்கும். இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி து.அன்பரசு, “நிறைந் தது மனம்” நிகழ்ச்சியின் போது கூறு கையில், தொண்டாமுத்தூர் வட்டா ரம், தென்கரை கிராமத்தில் 5 ஏக்கர் பரப்பரப்பில் கடந்த 30 வருடங்களாக தென்னை விவசாயம் செய்து வருகி றேன். தென்னை மரங்களுக்கு இடையே காலியாக இருக்கும் நிலப் பகுதியில் ஊடு பயிராக மகோகனி மரங்களை சாகுபடி செய்வதற்கான வேளாண்மைத்துறை அலுவலர் களை தொடர்பு கொண்டபோது, வேளாண் காடுகள் திட்டத்தின் கீழ் மரக்கன்று சாகுபடி செய்வது குறித்து விளக்கினர். தற்போது ஒரு டன் மகோகனி மரத்தின் விலை ரூ.8500 ஆக உள்ளது. எனவே, எனது நிலத் தில் சுமார் 750 மகோகனி மரக் கன்றுகளை தென்னை மரங்களுக்கு இடையில் நடவுசெய்து பராமரித்து வருகிறேன். இதன்மூலம் எனக்கு பராமரிப்பு செலவு மற்றும் நீரின் தேவைகள் குறைந்து காணப்படு கிறது. தென்னை மரங்கள் காற்றுத் தடுப்பு வேலியாக செயல்படுவதால், அதிக காற்றினால் பயிர்களும் மற்ற மரங்கள் சேதமாகாமல் பாதுகாப்பது டன் தென்னை அதிக வருமானமும் கிடைக்கிறது. தற்போது மகோகனி மரங்கள் 6 அடி வரை நன்கு வளர்ந் துள்ளது. இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழக அர சுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறி னார்.