districts

img

வன உரிமை சட்டப்படி உரிமைகளை வழங்குக ஆ.ராசா எம்.பி அறிவுறுத்தல்

ஈரோடு, டிச. 10- சத்தியமங்கலம் பகுதியில் 2006-ன் படி நிலுவையிலுள்ள சமுதாய உரி மைகளை உடனடியாக வழங்க நடவ டிக்கைகள் எடுக்க வேண்டுமென நீல கிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா  அறிவுறுத்தினார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூர் வனக் கோட்டத்தில் ஆ.ராசா எம்பி ஆய்வு  பணிகளை மேற்கொண்டார். இந்த ஆய் வின்போது, தற்போது நடைபெற்று வரும் யானை புகா அகழிகள் மற்றும்  ஏற்கனவே அமைக்கப்பட்ட அகழிக ளின் தற்போதைய நிலை குறித்து கேட்ட றிந்தார். சூரிய தொங்கு மின் வேலிக ளின் விவரம், விலங்குகளால் ஏற்பட்ட உயிர் இழப்புகள், பயிர் சேதம், கால்ந டைகள் இழப்பு, உடைமைகள் சேதம் அவற்றிற்கு வழங்கப்பட்ட நிவாரண தொகைகள் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்தார்.  இந்த நிதியாண்டில் 5 கிமீ தூரமும்,  யானைகள் திட்டத்தின் கீழ் 4 கிமீ தூர மும் மொத்தம் 9 கிமீ தூரத்திற்கு ரூ.46.17 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக யானைகள் புகா அகழிகள் அமைக்கும் பணி நடை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரி வித்தனர். இதைத்தொடர்ந்து, பணி களை விரைந்து முடிக்க தொடர் புடைய அலுவலர்களுக்கு ஆ.ராசா  எம்.பி., அறிவுறுத்தினார்.  மேலும், வன உரிமைச் சட்டம்,  2006–ன்படி நிலுவையிலுள்ள சமு தாய உரிமைகளை உடனடியாக வழங்க நடவடிக்கைகள் எடுக்கவும் அறி வுரை வழங்கினார். ஆய்வின்போது, சத்தியமங்கலம் புலிகள் காப்ப கம், ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குநர் கு.சுதாகர் உள்ளிட்ட வனத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.