நாமக்கல், ஆக. 6- அரசு புறம்போக்கு நிலத்தை ஆக் கிரமிப்பிலிருந்து மீட்க வேண்டும் என வலியுறுத்தி எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளை யம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் அருகே மாரப்பம்பாளையம் உள்ளது. இங்குள்ள அருந்ததிய தெரு அருகா மையில், இரண்டு ஏக்கர் அரசு புறம் போக்கு நிலம் உள்ளது. இந்நிலத்தில், அப்பகுதி மக்கள் காளியம்மன் கோவில் வைத்து கடந்த 30 வருடங்களாக வழி பட்டு வருகின்றனர். இதன் அருகாமையில் உள்ள விவ சாய நிலத்திற்கு தனிநபர், கோவில் முன்பு மண்ணைக் கொட்டி பாதை அமைத்துள்ளார். இதனை அளவீடு செய்து, அரசு நிலத்தை மீட்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியதன் அடிப் படையில் அளவீடும் செய்யப்பட்டுள் ளது. ஆனால், அரசு பதிவேட்டில் ஏற் றம் செய்யப்படவில்லை. அளவீடு செய்யப்பட்ட காளியம்மன் கோவில் இடத்தை அரசு பதிவேட்டில் ஏற்றம் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடத்தினை மீட்க வேண்டும். ஆக்கிரமித்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப் பாட்டத்திற்கு மாரப்பம்பாளையம் கிளைச் செயலாளர் தங்கவேல் தலைமை ஏற்றார். இதில், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், எலச்சிபாளையம் மேற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.வெங்க டாசலம், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தேவராஜன், ஒன்றியக்குழு உறுப்பினர் கள் பெரியசாமி, ரமேஷ், கிட்டுசாமி, பாலகிருஷ்ணன், ஈஸ்வரன், ராஜீ உட் பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வருவாய் ஆய்வாளர் அனுராதாவிடம் கோரிக்கை மனு அளித் தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக ளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார்.