சேலம், பிப்.12- ஆத்தூர் அருகே அரசு நகரப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளா னதில், காயமடைந்தோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாவட்டம், ஆத் தூர் பேருந்து நிலையத் திலிருந்து பைத்தூருக்கு தடம் எண்:33 ஆர்எஸ் நகரப் பேருந்து புதனன்று புறப்பட்டு சென்றது. கெங்கவல்லி அருகே உள்ள வாணியம் பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் (55) என்ப வர் பேருந்தை இயக்கியுள்ளார். இந்நிலை யில், பைத்துர், கள்ளுக்கட்டு அருகே சென்ற போது, ஓட்டுநர் செல்போனில் பேசியதால், அவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரமாக இருந்த பள்ளத்தில் தலைக் குப்புற விழுந்து விபத்திற்குள்ளானது. இவ் விபத்தில் 2 பள்ளி மாணவிகளான கவிப் பிரியா (9) ராமேஸ்வரி (7) ஆகியோருக்கு எலும்பு முறிவும், முகத்தில் காய மும் ஏற்பட்டது. மேலும், ஆத்தூர் காந்திநக ரைச் சேர்ந்த ரம்யா (28) என்பவருக்கு உள் காயமும், ஓட்டுநர் செல்வராஜ்க்கு காயம் ஏற் பட்டது. காயமடைந்த நான்கு பேரும் ஆத் தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து ஆத்தூர் ஊரக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.