districts

img

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு, டிச. 3- மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.    ஈரோடு, கூரபாளையம், நந்தா  இயன்முறை கல்லூரியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற அனைத்து நாடு கள் மாற்றுத்திறனாளிகள் தின விழா வில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.கிருஷ்ணனுண்ணி தலைமையில்,  மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.  இந்நிகழ்ச்சியில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி கலந்து  கொண்டு 15 மாற்றுத்திறனாளி களுக்கு ரூ.6.14 லட்சம் மதிப்பீட்டி லான நலத்திட்ட உதவிகளை வழங் கினார். நிகழ்ச்சியில் மாற்றத்திறனாளி களுக்கு சேவை புரிந்தமைக்காக அலுவலர்கள், சிறப்புபள்ளி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றி தழ்களும் வழங்கப்பட்டன.  இதில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் நடத்தப்பட்ட ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், மியூசிக் சேர், பந்தினை கை மாற் றுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று முதல்  மூன்று இடங்களை பெற்ற மாணவ,  மாணவியருக்கும், பாராட்டு சான் றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப் பட்டன. தொடர்ந்து மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் அ.கோதைச்செல்வி, மருத்துவப்பணிகள் இணை இயக் குநர்  பிரேமகுமாரி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக மகேஸ்வரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக  பொது மேலாளர் க.சொர்ணலதா, அரசு ஈரோடு மருத்துவக்கல்லூரி முதல்வர் மணி, நந்தா கல்லூரிகள்  தாளாளர்சண்முகம், அனைத்து  வகை மாற்றுத்திறனாளிகள் சங்க  மாவட்ட செயலாளர் ஆ.சகாதேவன், மாவட்ட பொருளாளர் வீ.ராஜு, மாவட்ட உதவிச் செயலாளர் கே. அன்னக்கொடி, மாவட்டக் குழு உறுப் பினர் பி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

தருமபுரி

தருமபுரி வள்ளல் அதியமான்  கோட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகள் தின விழாவில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமை வகித் தார். மாற்றுத்திறனாளிகள் தினத்தை  முன்னிட்டு நடைபெற்ற விளை யாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற  சிறப்பு பள்ளி மாணவ, மாணவியர் களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.  இவ்விழாவில், 27 நபர்களுக்கு  கறவைமாடு வளர்ப்பு மற்றும் துணி வியாபாரம் செய்ய மானியத்துடன் கூடிய வங்கிகடன், 6 நபர்களுக்கு சிறப்பு சக்கர நாற்காலியும், 8 நபர் களுக்கு  ஊன்று கோல், 3 மற்றும்   1 நபருக்கு இலவச வீட்டுமனை பட்டா  என மொத்தம் 48 மாற்றுத்திறனாளி களுக்கு  ரூ.26.47 லட்சம் மதிப்பீட்டி லான  நலத்திட்ட உதவிகள்  வழங்கப் பட்டது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி வரு வாய் கோட்டாட்சியர் (பொ) ஜெயக் குமார், நல்லம்பள்ளி  ஒன்றியகுழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல  அலுவலர், செண்பகவள்ளி, தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்)  சாந்தி, மாவட்ட விளை யாட்டு அலுவலர் சாந்தி, அதியமான் கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர்  மாரியம்மாள் முனிராஜ், நல்லம் பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம் உட் பட சிறப்பு பள்ளி மாணவ, மாணவி யர்கள், ஆசிரியர்கள், தொண்டு  நிறுவனங்கள் மற்றும் மாற்றுத்திற னாளிகள் கலந்து கொண்டனர்.