districts

img

அரசு நிலம் ஆக்கிரமிப்பு – அதிகாரிகள் உடந்தையா?

சேலம், ஜூலை 7- ஏற்காட்டில் அரசு நிலத்தை தனியார்  ஒருவர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இதற்கு அரசு  அதிகாரிகளும் உடந்தையாக உள்ள தாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ள னர்.  சேலம் மாவட்டம், ஏற்காட்டில், செம் மநத்தம் ஊராட்சியில் வள்ளுவர் நகர்  பகுதியில் பொதுப்பணி துறைக்கு சொந் தமான 13/9 சர்வே எண் கொண்ட நிலம் உள்ளது. இந்த நிலத்தில் அதே கிரா மத்தை சேர்ந்த சிலர் குடிசை வீடு கட்டி  வசித்து வந்த நிலையில், கடந்த சில  ஆண்டுகளுக்கு முன் ஆக்கிரமிப்பு என்று கூறி, அங்குள்ள வீடுகளை அதிகா ரிகள் இடித்து அப்புறப்படுத்தினர்.  மேலும், அந்த இடம் பொதுப்பணித் துறைக்கு சொந்தமானது என்றும், இதில் யாரும் ஆக்கிரமிப்பு செய்யக் கூடாது என்றும் அறிவிப்பு பலகை வைத் தனர். இந்நிலையில் சேலத்தை சேர்ந்த  செல்லமுத்து என்பவர் செம்மநத்தம் பகுதியில் எஸ்டேட் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். மேலும், அந்த இடத் தில் காங்கிரீட் வீடு ஒன்றும் கட்டியுள் ளார். அந்த வீட்டின் ஒரு பகுதியை பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அதில் சுவர் எழுப்பியுள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக செம்மநத்தம் பகு தியை சேர்ந்த மலைவாழ் மக்கள், ஏற் காடு வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். ஆனால், புகார்  மனுவை ஏற்க மறுத்ததுடன், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடி யாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள் ளதா கூறப்படுகிறது.  இதனை தொடர்ந்து, இந்தப் பகுதி யைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் சிலர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் புகார் கொடுத்துள்ளனர். அதில்,  பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலம் என்று அறிவிப்பு பலகை வைத்த  பின்னரும், அந்த இடத்தை அதிகாரி கள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்தது டன், தனது தோட்டத்திற்கு செல்வதற் கான சாலையும் அமைத்து வருவதா கவும் பொதுமக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்தில் தங்களது கிராமத்திற்கு மேல் நிலை நீர் தேக்க தொட்டியோ அல்லது  தபால் நிலையமோ அமைத்துக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், அதனை செயல்படுத்தாத அதிகாரிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக  இருந்து அரசுக்கு சொந்தமான நிலத்தை  தனியாருக்கு தாரைவார்த்துள்ளதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவிக் கின்றனர்.