districts

img

கூகுள், பேஸ்புக், டிவிட்டர் செயல்பாடு நிறுத்தப்படும்: பாக்., பிரதமருக்கு கடிதம்

புதுதில்லி, மார்ச் 1- பாகிஸ்தானில் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது போன்ற புதிய விதி களை திரும்பப்பெறாவிட்டால், தங்களது நட வடிக்கைகள் நிறுத்தப்படும் என்று கூகுள், பேஸ்புக், டிவிட்டர் ஆகியவை பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளன. குடிமக்களின் பாதுகாப்பு என்ற பெயரில் சமூக வலைதளங்கள் தலைநகர் இஸ்லாமா பாத்தில் அலுவலகம் அமைப்பதோடு, அங்கேயே தகவல்களைச் சேமிக்க தரவு சேவையகங்களை அமைக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கட்டாயமாக்கியது. இந்நிலையில் இதுகுறித்து ஆசிய இணைய கூட்டணி சார்பில் பாகிஸ்தான் பிரத மர் இம்ரான்கானுக்கு கடிதம் எழுதப்பட் டுள்ளது.அக்கடிதத்தில், புதிய விதிகள் தங்கள் சேவைகளை பாகிஸ்தான் பய னர்களுக்கும், வணிகங்களுக்கும் கிடைக்கச் செய்வதை மிகவும் கடினமாக்குவதாகவும்  அவை இணைய பொருளாதாரத்தின் வளர்ச்சி திறனை பாகிஸ்தானியர்களிடமிருந்து பறிக்கும் என்றும் தெரிவித்துள்ளன.